
கல்வி
6.9K subscribers
About கல்வி
Kalvi.lk
Similar Channels
Swipe to see more
Posts

வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை அரசாங்கம் தீர்க்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். *Follow On Whatsapp 👇* https://whatsapp.com/channel/0029Va8ikv9AojYjtBacLQ07


பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லப்பட்டால், சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்துள்ளார். *Follow On Whatsapp 👇* https://whatsapp.com/channel/0029Va8ikv9AojYjtBacLQ07


பெற்றோரின் மீது சுமத்தப்பட்டுள்ள பிள்ளைகளின் கல்வி சுமையை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது. நாட்டு மக்களுக்கு நேரடியாக நிவாரணமளிப்பதற்காகவே இம்முறை கல்வி மற்றும் சுகாதார துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.


*சிவராத்திரி மறுநாள் வடக்கில் பாடசாலைகளுக்கு விடுமுறை* வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுநாளான பெப்ரவரி 27ஆம் திகதி வியாழக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். அதற்குப் பதிலாக 01.03.2025 சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என்றும் ஆளுநர் தெரியப்படுத்தியுள்ளார். *Follow On Whatsapp 👇* https://whatsapp.com/channel/0029Va8ikv9AojYjtBacLQ07

*நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை* நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த வருடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி உயர்கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன், ஆசிரியர் கலாசாலைகளில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களுக்கும் இந்த வருடத்திற்குள் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அந்த வகையில் இந்த வருடத்திற்குள் பெரும்பாலான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும் என்றும் அவர் சபையில் நம்பிக்கை வெளியிட்டார். *Follow On Whatsapp 👇* https://whatsapp.com/channel/0029Va8ikv9AojYjtBacLQ07


அனைத்து பெற்றோர் மாணவர்களுக்கு வணக்கம். எதிர்வரும் 26 ம் திகதி எமது யாழ்ப்பாணம் அனைப்பந்தி கல்வி நிலையத்தின் ஆரம்பத்தை முன்னிட்டு நேரடிக்கருத்தரங்கு திட்டமிடப்பட்டுள்ளது. கருத்தரங்கிற்கு பதிவு செய்யும் முதல் 20 மாணவர்களுக்கு புலமை வித்தகன் சுற்றாடல் பல்தேர்வு வினாவிடை புத்தகம் இலவசமாக வழங்கப்படும் எமது புலமைப்பரிசில் வகுப்புக்கு பதிவு செய்யும் மாணவர்களுக்கு கருத்தரங்கு கட்டணம் முற்றிலும் இலவசம். கருத்தரங்கில் 100 மாணவர்கள் மட்டுமே இணைந்து கொள்ளக்கூடிய வசதி உள்ளது. எனவே அனுமதியை பெற்றுக்கொள்ள மாணவர் பெயர் பாடசாலை என்பவற்றை அனுப்பி பதிவு செய்து கொள்ளவும். 0770460367 0774110826 வரும்போது உணவு நீர் என்பவற்றை எடுத்து வரவும்.


*முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு - அநுரகுமார அறிவிப்பு* முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பாடசாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அநுர குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஒரு பாலர் பாடசாலை குழந்தையின் காலை உணவிற்கு செலவிடப்படும் தொகை 100 ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். *Follow On Whatsapp 👇* https://whatsapp.com/channel/0029Va8ikv9AojYjtBacLQ07


2023 (2024) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk க்குச் சென்று, பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடு செய்து பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளலாம். என இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.


யாழ்நகரில் நேரடி வகுப்புக்கள் ஆரம்பம் பருத்தித்துறை வீதி ஆனைப்பந்தி சந்தியில் 26ம் திகதி ஆரம்பம். 50 மாணவர்களுக்கான அனுமதி மட்டுமே. தரம் 4 மற்றும் தரம் 5 மாணவர்களுக்கான ● வினாத்தாள் வகுப்பு ●நுண்ணறிவு வகுப்புக்கள் ஆசிரியர் - இ. பிரசாந்தன் புலமை வித்தகன் பிரதம ஆசிரியர் Director

*நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் பேரவை உறுப்பினர்களை பதவி விலகுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.*