ASTRO GURUJI

6.7K subscribers

About ASTRO GURUJI

ஒரு எளிய ஜோதிடன்... ஜோதிடத்தை சுவாசமாக கொண்டவன்... ஜோதிடம் தவிர வேறு எதுவும் தெரியாதவன்.... #astro_guruji #adityaguruji #astrologeradityaguruji #tamilastrology #tamiljothidaradityaguruji #vedicastrologyintamil #famousastrologer #bestastrologer #tamilastrology #bestonlineastrologer #rasipalan #monthlyrasipalan #article #jothidar #astroguruji #gurujicommonvideos #gurujilivevideos #gurujienglishvideos #gurujipremiumvideos #gurujionlinevideos #gurujipremiumvideotrailer #gurujjonlineclasstrailer Please Contact only Office hours 10AM-6PM Cell +91 8681 99 8888, 8870 99 8888, 9107 99 8888, 9768 99 8888, 8286 99 8888, To join Whatsapp Group send msg to - -+91 8428 99 8888 Land lines: 044-4867 8888, 044-2435 8888 or e-mail- [email protected] SUNDAY HOLIDAY.

Similar Channels

Swipe to see more

Posts

ASTRO GURUJI
6/12/2025, 7:07:01 AM

பூசம்... நாசமா? ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888 ஆனந்தி, கோவில்பட்டி. கேள்வி. எனது மகன் பூச நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறான். ஜோதிடர்கள் பூசம்.. நாசம் என்றும் இவன் அமாவாசை பிறப்பு என்றும் சொல்லி அதற்கான பரிகாரங்களைச் செய்யச் சொல்கிறார்கள். பூசம், நாசம் என்பது உண்மையா? புதன் விபரீத ராஜயோகத்தை இருக்கிறார் என்று சொன்னார்கள், ஆனால் இவன் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறான், ஏன்? கும்ப லக்னத்திற்கு சூரிய, சந்திர தசைகள் நன்மை செய்யாது என நீங்கள் சொல்லி வருகிறீர்கள். சூரியன், சந்திரன் இணைந்து அமாவாசையில் பிறந்த என் பையனின் வாழ்க்கை பிரகாசிக்குமா? லக்னாதிபதியை விட ஆறாம் அதிபதி வலுக்கக் கூடாது என்றும் சொல்லி வருகிறீர்கள். ஆறாம் அதிபதியே ராசிநாதனாக வரும்போது இதை எப்படி எடுத்துக் கொள்வது? என் மகன் சனிக்கிழமை, சனியின் நட்சத்திரமான பூசத்தில், சனி ஹோரையில், ஏழரைச் சனி நடப்பில், சனியின் இரவு வேளையில், சனியின் எண் எட்டில், சனியின் கும்ப லக்னத்தில், எல்லாமே சனியின் ஆதிக்கம் உள்ள நேரத்தில் பிறந்திருக்கிறான். இதில் ஏதாவது நுணுக்கம் உள்ளதா? என் பையன் மருத்துவம், இஞ்சினியரிங், ஐஏஎஸ் எது வேண்டுமானாலும் படிக்கலாம் என்று இங்குள்ள ஜோதிடர்கள் சொல்கிறார்கள். ஆனால் இதுதான் படிப்பான் என உறுதியாக நீங்கள்தான் சொல்வீர்கள். என் மகன் என்ன படிப்பான்? பதில். (கும்ப லக்னம், கடக ராசி, 3ல் ராகு, 5ல் சுக், சனி, 6ல் சூரி, சந், 7ல் புத, செவ், குரு, 9ல் கேது, 14-8-2004 இரவு 8-16 கோவில்பட்டி) 27 நட்சத்திரங்களில் உயர்வு, தாழ்வு இல்லை. அனைத்து நட்சத்திரங்களும் உயர்ந்தவைதான். அனைத்தும் தாழ்ந்தவைதான். முற்பிறவி கர்மாவிற்கு ஏற்றபடியான பலன்களை நட்சத்திரங்களும், கிரகங்களும் வழங்குகின்றன. இதில் நீங்கள் கேட்டிருக்கும் பூச நட்சத்திரத்திற்குப் பதில் சொல்ல வேண்டுமெனில், உலகின் ஏராளமான ஜகத்குருக்கள், ஆன்மிகவாதிகள், உலகைத் திசை திருப்பிய மகான்கள், உன்னத, உயர் பிறவிகள் பூசத்திலேயே பிறந்திருக்கிறார்கள். நம்முடைய ஆழ்வார்கள், நாயன்மார்கள் உள்ளிட்ட ஆன்மீகத் திறனாளர்கள் பெரும்பாலும் பூசத்தில் பிறந்திருப்பதே இதற்குச் சாட்சி. தமிழ் ஒரு உயர் தனிச் செம்மொழி என்பதை அடிக்கடி சொல்லி வருகிறேன். இங்கே சொல்லாடல்களுக்குப் பஞ்சமில்லை. எதுகை, மோனையில் தமிழில் விளையாடலாம். பூசம், நாசம் போன்ற பழமொழிகள் தமிழுக்காகவே ஜோதிடத்தில் உருவாயின. இவற்றையெல்லாம் காதில் போட்டுக் கொண்டு பயப்படத் தேவையில்லை. எந்த ஒரு ஜோதிடர் பழமொழிகளையும், பாடல்களையும் அதிகம் உபயோகிக்கிறாரோ அவரது ஜோதிட அறிவு முழுமை பெறவில்லை என்று அர்த்தம். பாடலைப் பாடி பலன் சொல்பவர் அவருக்கு முன்னால் இருந்தவர் சொன்னதை மட்டும் காப்பியடிக்கிறார். இவராக தனித்து சிந்திக்கவில்லை. அவருக்கு அதற்குமேல் தெரியாது அவரது ஜோதிட அறிவு அரைகுறையானது. பூசம் நாசம் போன்ற பொதுவான பலன்களுக்கு ஜோதிடத்தில் ஒருபோதும் இடமில்லை. உண்மையைச் சொல்லப் போனால் மாலைமலரில் ஞாயிற்றுக்கிழமை நான் எழுதும் ராசிபலன் கூட வெகுஜன நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு ஜோதிட சமரசத்திற்கு உள்ளாகி எழுதுவதுதான். இந்த ராசிபலனைப் படித்தும் சிலர் ஆறுதல் அடைகிறார்களே என்ற நல்லதைத் தவிர, வார ராசிபலனுக்கென்று தனி விசேஷம் எதுவுமில்லை. அப்படிப்பட்ட நிலையில் பூசம், நாசம் என்று ஒரு பழமொழியின் மூலம் பூசத்தில் பிறந்தவர்கள் அத்தனை பேரின் தலைவிதியை நிர்ணயிக்க முடியும் என்றால், உலகில் பூச நட்சத்திரத்தில் பிறந்த அனைவருமே நாசமாகித்தானே இருக்க வேண்டும்? ஒரு ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி, லக்னாதிபதி நின்ற நட்சத்திரநாதன், லக்னாதிபதிக்கு வீடு கொடுத்தவன், ராசி, ராசிநாதன், சந்திரன் நின்ற நட்சத்திரநாதன் என ஏகப்பட்ட நுணுக்கங்கள் இருக்கின்றன. இவற்றில் ஜாதகர் பிறக்கும் நட்சத்திரமும் ஒன்று. ஒருவர் பூச நட்சத்திரத்தில் பிறந்து, அவரது லக்னாதிபதி வலுவிழந்து, நட்சத்திர நாதனான சனியும் பாபத்துவமாக இருக்கும் நிலையில், ஐந்து, ஒன்பதாம் அதிபதிகளும் பலவீனமாகி, தசா, புக்தி அமைப்புகளும் கைகொடுக்காத நிலையில் ஒருவர் நாசமாவார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அதை விடுத்து பூச நட்சத்திரத்தில் பிறந்ததால் மட்டுமே ஒருவர் நாசமாவார் என்றால், அங்கே ஜோதிடம் இருக்காது. அருள்வாக்கும், கிளி ஜோசியமும், குடுகுடுப்பைக்காரத்தனமும்தான் இருக்கும். மகன் ஜாதகத்தைப் பொறுத்தவரையில் நட்சத்திர நாதனும், லக்னாதிபதியுமான சனி, ஐந்தாமிடத்தில் நட்பு வீட்டில், இன்னொரு நண்பரான சுக்கிரனின் இணைவில் சுபத்துவமாகி, வர்கோத்தம நிலையில் இருப்பதால் மிகவும் வலுவாக இருக்கிறார். ஆகவே பூசம், நாசம் என்ற பழமொழியை இங்கே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். புதன் விபரீத ராஜயோக அமைப்பில் இல்லை. அனுப்பியிருக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தில்தான் ஆறில் இருக்கிறார். வாக்கியப் பஞ்சாங்கம் என்பது முழுக்க முழுக்க தவறானது. ஞானிகளின் பெயரைச் சொல்லி வாக்கியத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இளைய ஜோதிடர்களில் பெரும்பாலானோர் வாக்கியத்தின் நிலை அறிந்து மாறி வருவதால் இன்னும் சில ஆண்டுகளில் வாக்கியம் வழக்கொழிந்து போகும். மகனது ஜாதகப்படி கல்விக்கு அதிபதியான புதன், வக்கிர நிலையில், செவ்வாயுடன் ஆறு டிகிரிக்குள் இணைந்திருப்பதால் படிப்பு சுமாராகத்தான் வரும். பள்ளியில் அவன் முதல் மாணவனாக வருவான் என்று சொல்லி ஏமாற்ற விரும்பவில்லை. ஆயினும் கல்லூரிப் படிப்பை முழுமையாகவே முடிப்பான். ஒரு லக்னத்தின் அதிபதிக்கு எதிரிகளின் தசை நன்மைகளை செய்யாது எனும் பொதுவிதிப்படி, கும்ப லக்கினத்திற்கு சூரிய, சந்திர தசைகள் நன்மைகளைச் செய்வதில்லை. மகன் விஷயத்தில் அவனது 57 வயதில் சந்திர தசை வரும் பொழுது ஆரோக்கிய குறைவுகள் உண்டாகத்தான் செய்யும். வயதான காலத்தில் சந்திரதசை வருவது பாதகமில்லை. நடுத்தர வயதில் சந்திர தசை வந்தால் மட்டுமே கும்பத்திற்கு கடுமையான வேலை, தொழில் பாதிப்புகளும், கடன், நோய் தொல்லைகளும் இருக்கும். தசைகள் நல்லவைகளைச் செய்யாது என்றாலும் அவை எப்போது வருகின்றன என்பதும் முக்கியம். எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னாதிபதியை விட ஆறாம் அதிபதி வலுக்கவே கூடாது. ஆறாம் அதிபதி ராசிநாதனாக வரும்பொழுது, லக்னம் வலுவிழந்தால் ராசி பலன் தரும் எனும் விதிப்படி, அங்கே ஆறாமதிபதி மறைந்து ராசிநாதனாக அவர் நல்ல பலன்களையே தருவார். ஆனால் அவர் ராசிநாதனாக செயல்பட வேண்டும் எனில் லக்னாதிபதி முழுக்க வலுவிழுந்து இருக்கவேண்டும். லக்னாதிபதி எத்தகைய நிலையில் இருக்கிறார் என்பதை கணிப்பதற்கு மிகவும் நுணுக்கமான ஞானம் தேவைப்படும். மகன் சனிக்கிழமை, சனியின் நட்சத்திரம், சனி ஹோரை, ஏழரைச்சனி, சனியின் இரவு, சனியின் லக்னத்தில் பிறந்திருப்பது நுணுக்கமான ஒன்றுதான். இவை அனைத்தும், இந்த அமைப்பின் நாயகனான சனி சுபத்துவமாகி, நட்பு வீட்டில் நண்பருடன் அமர்ந்து, வர்கோத்தமமாக இருப்பதால், வாழ்நாள் முழுக்க நன்மைகளையே செய்யும். அப்படியே தலைகீழாக சனி பாபத்துவமாகி, பலவீனம் பெற்று, எதிர்மறையாக ஜாதகத்தில் அமைந்திருப்பின் மகன் வாழ்நாள் முழுக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பான். ஆனால் சனி ஜாதகத்தில் நல்லவிதத்தில் இருப்பதால் எதிர்காலத்தில் சிறப்பாக இருப்பான். இயந்திரம் சம்பந்தப்பட்ட இஞ்சினியரிங் கல்வி படிப்பான். வாழ்த்துக்கள். (11.06.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது) தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888. குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

❤️ 👍 2
Image
ASTRO GURUJI
6/12/2025, 6:48:45 AM

சனி பார்வை எதில் நன்மை, தீமை?#adityaguruji #saturn https://youtube.com/shorts/arZkiFpqYUQ

❤️ 1
ASTRO GURUJI
6/12/2025, 8:43:06 AM

Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 191 (12.06.18) ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி அ. சண்முகம்,கழுநீர்குளம் . கேள்வி : என் பேத்தி பத்தாம் வகுப்பில் 500க்கு 483 மார்க் வாங்கினாள். தற்போது பிளஸ் டூ பரிட்சை எழுதுகிறா ள். அவளுக்கு துலாம்ராசி . அவள் நல்ல மார்க் எடுப்பா ளா? 80 வய தா கும் எனக்கு தயவுசெய்து பதில் தரவும். பதில்: இது போன்ற கேள்விகள் என் பார்வைக்கு வந்து நான் பதில் தருவதற்குள், தேர்வு முடிவுகள் வெளிவந்திருக்கும் என்பது நிச்சயம். தற்போது உங்கள் பேத்தி என்ன மார்க் எடுத்திருக்கிறார் என்பது உங்களுக்கே தெரிய வந்திருக்கும். இன்னொரு முறை வேறு ஏதாவது அவளது எதிர்காலம் சம்பந்தப்பட்ட கேள்வி கேளுங்கள். பதில் தருகிறேன். பாலாஜி, புதுக்கோட்டை. கேள்வி : எனது இந்தக் குறை பலருக்கும் கேலியையும், நகைப்பையும் ஏற்படுத்தலாம். ஆனால் இது மனித முயற்சிக்கு அப்பாற்பட்டதாக இருப்பதால்தான் கடவுளின் அருளையும், குரு அருளையும் வேண்டி இதற்கு பதில் தந்து என் குறையைப் போக்க வேண்டுகிறேன். 27 வயது நெருங்கியும் என்னால் இருசக்கர வாகனம் இயக்கும் ஆற்றலைப் பெற இயலவில்லை. முயற்சிக்கும் போதெல்லாம் தோல்விதான் ஏற்படுகிறது.இனம் புரியா பயம் தொற்றிக் கொள்கிறது. எதனால் எனக்கு இந்தக் குறை எந்த வயது முதல் நான் இயல்பாக அனைவரையும் போல் வாகனம் இயக்கும் ஆற்றலை பெறுவேன்? அதற்கு எத்தகைய பரிகாரங்கள் செய்ய வேண்டும்? பதில் : ஜோதிடத்தில் வாகன காரகனாக சுக்கிரன் குறிப்பிடப்படுகிறார். எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் அமைப்பை நான்கு, பத்தாமிடங்களோடு தொடர்பு கொண்ட ராகு, கேதுக்கள் தருவார்கள். ஒரு மனிதனின் எண்ணங்கள், மற்றும் செயல்கள் நிறைவேறுமா, இல்லையா என்பதை நடைபெறும் தசா,புக்தி சுட்டிக் காட்டுகிறது. ஜாதகப்படி உங்களுக்கு ஆசைகள் நிறைவேற தடைகளைச் செய்யும் அஷ்டமாதிபதி புதன் தசை நடந்து கொண்டிருக்கிறது. விருச்சிக லக்னத்திற்கு புதன் நன்மைகளைத் தர மாட்டார். அதிலும் வாகனத்தை ஓட்டும் ஆர்வம் வரும் பதிமூன்று வயது முதல் உங்களுக்கு புதன் தசை நடக்கிறது. அஷ்டமாதிபதி எதிலும் பயத்தை மட்டுமே தருவார். முப்பது வயது வரை உங்களுக்கு நடக்கும் எட்டுக்குடைய நீசபங்க புதன்தசை உங்களின் நியாயமான ஆசைகள் அனைத்தையும் தடை செய்தே தரும். வாகனத்தை குறிக்கும் நான்காம் வீட்டு அதிபதி சனி அந்த பாவகத்திற்கு பனிரெண்டில் மறைந்த நிலையில், வாகன காரகன் சுக்கிரன், செவ்வாய்-கேது ஆகிய இரு பாபக் கிரகங்களுடன் இணைந்து, நவாம்சத்தில் ராகுவுடன் சேர்ந்திருப்பதால் இதுவரை உங்களால் இருசக்கர வாகனம் இயக்கும் ஆற்றலை பெற முடியவில்லை. அஷ்டமாதிபதி தசை நடப்பதால் முயற்சி செய்யும்போதே மனம் முழுக்க பயம் தொற்றிக் கொள்கிறது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு இது நீடிக்கத்தான் செய்யும். 2021-ல் கேது தசை ஆரம்பித்ததும் உங்களால் பயமின்றி சரளமாக டூவீலர் ஓட்ட முடியும். அதற்கான முயற்சிகளை இப்போதிருந்தே செய்யுங்கள். லக்னாதிபதி செவ்வாய் எட்டில் மறைந்து கேதுவுடன் இணைந்து இருப்பதால், ஒருமுறை கும்பகோணம் அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள். அருகில் இருக்கும் பழமையான முருகன் கோவிலில் செவ்வாய் தோறும் வழிபடுவதும் சிறப்பு. ஏ. சுப்பிரமணியன், தேனி. கேள்வி : நான் தங்களுடைய மாலைமலர் தீவிரரசிகன். எனக்கு எத்தனை மனைவி ? குழந்தைகள் எத்தனை பேர்? அதில் ஆண் எத்தனை ? பெண் எத்தனை ?எப்போது ஆயுள் முடியும்? 81 வயதாகும் எனக்கு பதில் சொல்ல வேண்டுகிறேன் . பதில் : ஜோதிடம் என்பது விஞ்ஞான ரீதியிலான எதிர்காலத்திற்கு வழிகாட்டக் கூடிய ஒரு கலை. இதில் கணிதத்திற்கும், புனிதத்திற்கும் மட்டும்தான் இடம் இருக்கிறது. மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லை. மருத்துவரிடம் சென்றவுடன் கையை நீட்டிக் கொண்டு எனக்கு என்ன நோய் என்று கண்டு பிடியுங்கள் என்றா சொல்வீர்கள்? வயிற்றை வலிக்கிறது, இடுப்பை வலிக்கிறது என்றுதானே சொல்வீர்கள்? ஆனால் ஜோதிடரிடம் மட்டும் ஏன் எனக்கு மனைவி எத்தனை? பிள்ளை எத்தனை என்று கண்டுபிடி என்று சொல்கிறீர்கள்? அனைத்தையும் ஜோதிடத்தில் சொல்ல முடியும் என்றாலும் ஒரே நிமிடத்தில் உங்களைப் பற்றிய எல்லாவற்றையும் சொல்வதற்கு இது ஒன்றும் “சூ… மந்திரகாளி” வித்தையில்லை. எல்லாவற்றிற்கும் ஆயிரமாயிரம் கணக்குகள் இருக்கின்றன. அவற்றை வைத்து கணித்துத்தான் சொல்ல முடியும். தவிர உங்களுக்குத் தெரிந்ததை உங்களுக்கே சொல்வதற்கு ஜோதிடம் எதற்கு? உங்களைப் போன்றவர்கள் இப்படி கேட்பதால்தான் மனைவி, குழந்தைகள், கூடப் பிறந்தவர்கள் எண்ணிக்கையை குறித்து வைத்துக் கொண்டு ஜாதகத்திலிருந்து சொல்வது போல கிராமத்து ஜோதிடர்கள் பலன் சொல்கிறார்கள். ஜாதகப்படி ஏழில் சனி, இரண்டில் செவ்வாய் என்றாகி, ராசிக்கு எட்டில் செவ்வாய் இருப்பதால் உங்களுக்கு ஒரே ஒரு மனைவி இருக்க வாய்ப்பில்லை. தவிர எத்தனை மனைவி என்ற கேள்வியிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பது தெரிந்து விடுகிறதே. பிறந்தநேரம் துல்லியமாக இல்லாத ஜாதகங்களுக்கு துல்லியமாக ஆயுளைக் கணிக்க முடியாது. கா. வைரவலிங்கம், கமுதி. கேள்வி : வயது 38 ஆகியும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. தலையில் உள்ள எல்லா முடியும் கொட்டிப் போய்விட்டது. அதனாலேயே எல்லா வரன்களும் தட்டிப் போய்க் கொண்டிருக்கின்றன. போகாத கோவில் இல்லை. செய்யாத பரிகாரம் இல்லை. வரன் பார்க்கவும் நிறைய செலவு செய்துவிட்டோம். பார்க்கும் எல்லோரும் என்னப்பா கல்யாணம் பண்ணிக்காம இப்படி இருக்க என்று கேட்டு கூடுதல் கவலை ஏற்படுத்துகிறார்கள். நிம்மதியே இல்லை. அரசுத் துறையில் வேலை செய்கிறேன். எப்போது திருமணம் நடைபெறும்? குழந்தை பாக்கியம் உண்டா? எதிர்காலம் எப்படி இருக்கும்? தயவு செய்து பதில் தாருங்கள். பதில் : லக்னம், ராசிக்கு 2, 7, 8 ம் இடங்கள் பாதிக்கப்பட்டால் தாமத திருமணம் அல்லது இரண்டு திருமணம் போன்ற நிகழ்வுகள் இருக்கும் என்பது விதி. ஜாதகப்படி மீன லக்னம் ஏழில் சனி, எட்டில் செவ்வாய் அமர்ந்து ராசிக்கு ஏழில் ராகு இருப்பது கடுமையான களத்திர தோஷம். 7-க்குடையவன் ஆறில் மறைவதும் பலவீனம். ஆயினும் தாம்பத்திய சுகத்தை கொடுக்க கூடிய சுக்கிரன் திக்பலமாக இருப்பதால் நிச்சயமாக திருமண வாழ்க்கை உண்டு. தற்போது குரு தசையில், சுக்கிர புத்தி நடப்பதால் வருகின்ற அக்டோபர் மாதத்திற்குப் பிறகு வரன் முடிவாகும். இந்த வருடம் கடைசியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் உறுதியாக திருமணம் நடக்கும். சுக்கிர புக்தி நடப்பதால் தாம்பத்திய சுகம் கிடைத்துத்தான் ஆக வேண்டும். லக்னாதிபதி குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை இதுவரை நீங்கள் செய்திருக்க வாய்ப்பில்லை. அவற்றை ஏற்கனவே மாலைமலரில் எழுதி இருக்கிறேன். குருவை வலுப்படுத்தும் பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். தாமத திருமணம் தானே தவிர குழந்தை பாக்கியம் உடனடியாக உண்டு. முதல் குழந்தை பெண் குழந்தை. ஆண் வாரிசும் உண்டு. தெற்குப் பார்த்த வாசலை வடக்காக மாற்றலாமா? வி. ஆர். மணி, பாண்டிச்சேரி. கேள்வி : என் பையனும் ஒரு பெண்ணும் விரும்புகிறார்கள். திருமணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். பெண் வீட்டில் கொஞ்சம் கூட வசதி இல்லை. என்னிடமும் திருமணம் செய்ய போதுமான பணம் இல்லை. மகன் தொழில் செய்ய பணமும் கேட்கிறான். சிறிய மகன் பொறுப்பில்லாமல் இருக்கிறான். மனைவி அனுசரணையாக இல்லை.எப்போது பார்த்தாலும் வீடு சரியில்லை, இப்போ தி ருக்கும் தெற்கு பார்த்த வாசலை வடக்கு த் திசையில் மாற்ற வேண்டும் என்று தொந்தரவு செய்கிறார். ஏற்கனவே இப்படிச் சொல்லி இரண்டு முறை மாற்றியமைத்து கையில் உள்ள பணம் தீர்ந்து போனது தான் மிச்சம். ரொட்டிக் கடை நடத்தி வருகிறேன். என் ஒருவன் வருமானத்தில்தான் குடும்பம் நடத்த வேண்டியுள்ளது. ஒரு வருடமாக தொழில் முடங்கியுள்ளது. பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை பார்க்க வந்தவர்கள் மானக் குறைவாக பேசினார்கள். எல்லாம் என் நேரம் என்று நொந்து கொண்டேன் . 65 வயது வரை எவரிடமும் கடும் சொல் எதுவும் கேளாமல் மானத்தோடு வாழ்ந்து விட்டேன். இனியும் அப்படி வாழ முடியுமா ? பதில் : ஜீவன ஸ்தானாதிபதி குரு பத்தாமிடத்தைப் பார்த்து, பாக்கியாதிபதி செவ்வாய் ஒன்பதாம் வீட்டைப் பார்த்த தர்மகர்மாதிபதி யோகம் உள்ள மிக நல்ல ஜாதகம். புத்திர மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியாகிய ஐந்துக்குடைய சந்திரனும் ஆட்சியாக இருக்கிறார். வாழ்வில் எந்தக்காலத்திலும் மிகப்பெரிய அசிங்கம், கேவலம் போன்றவைகள் உங்களுக்கு வந்துவிடப் போவதில்லை. 65 வயதிற்கு மேல் மிகவும் யோகத்தை தரக் கூடிய 11-மிட மகர ராகுவின் தசை தற்போது ஆரம்பித்திருக்கிறது. ராகுவுக்கு வீடு கொடுத்த சனி உச்ச நிலையில் இருக்கிறார். தசாநாதனுக்கு வீடு கொடுத்தவர் உச்சமானால் தசை, யோகங்களைச் செய்யும் என்பது பொது விதி. அதைவிட மேலாக உச்சனின் வீட்டில் இருக்கும் ராகு நிறைவான நல்ல பலனை தந்தே தீரும். அதைப் போலவே மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து இடங்கள் ராகுவிற்கு மூன்று, பதினொன்றாம் இடங்களாக அமைந்தால் ராகுவால் சந்தேகத்திற்கிடமின்றி நன்மைகள் கிடைக்கும். ராகுவிற்கு இடமளித்த சனியை குரு பார்ப்பதும் மிகவும் மேலான அமைப்பு. வாழ்வில் அந்திம காலத்தில் ராகுதசை வருவது நீங்கள் செய்திருக்கும் பூர்வபுண்ணிய பலனைக் காட்டுகிறது. அதேநேரத்தில் எந்த ஒரு தசையிலும் சுயபுக்தி நன்மைகளைச் செய்வதில்லை என்பதன் அடிப்படையில் கடந்த இரண்டு வருடங்களாக உங்களுக்கு தொழில் சிக்கல்கள் இருந்தே தீரும். இந்த வருட பிற்பகுதியிலிருந்து நிலைமைகள் சீராகி அடுத்த வருட ஆரம்பம் முதல் எவ்வித பிரச்சனையும் இன்றி நன்றாக இருப்பீர்கள். மகனுக்கு பார்த்த பெண்ணிற்கு விருச்சிக ராசியாகி, ஏழரைச்சனி முடிந்து விட்டதால் அவர்களது திருமண வாழ்க்கை நன்றாகவே இருக்கும். கவலைப்பட வேண்டாம். காதல் திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கத் தேவையில்லை என்பதை மாலை மலரில் அடிக்கடி எழுதி வருகிறேன். வாழ்வில் இணைந்த பிறகு அவர்களுக்கு நடக்க இருக்கும் அனைத்தும் கர்மாவின் அடிப்படையிலானது என்பதால் காதலிப்பது என்பது அவரவரின் தலைவிதிப்படி என்று விட்டுவிட வேண்டியதுதான். கடவுள் காரணமின்றி யாரையும், யாருக்கும் அறிமுகப்படுத்துவது இல்லை. எல்லாவற்றுக்கும் காரணங்கள் இருக்கின்றன. ஜாதகப்படி வடக்குத் திசை உங்களுக்கு லாபம் தருவதுதான் என்றாலும் வீட்டு வாசலை மாற்றியமைப்பது என்பதெல்லாம் பலன் தந்து விடாது.. வாஸ்து என்பது ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ சொல்லப்பட்டது தானே தவிர, அதிர்ஷ்டமாக வாழ்வதற்கு சொல்லப்படவில்லை. வாஸ்துப்படி வீடு அமைந்தால், அங்கே காற்றோட்டமாக நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் வாஸ்துப்படி வீடு கட்டி வீட்டில் குடி போனவுடன் கோடீஸ்வரன் ஆகிவிட மாட்டீர்கள். நடக்கும் நன்மை, தீமைகளுக்கு வாழும் வீடு பொறுப்பாகாது. இதை மனைவிக்கு எடுத்துச் சொல்லுங்கள். நல்லநேரம் வரும் பொழுது நல்ல வீட்டில் தான் இருப்போம். ஜாதகம் வலுவாக இருப்பதால் பிள்ளைகளுக்குரிய கடமைகளை நிறைவேற்றி, யாருடைய தயவும் இன்றி, வாழ்வின் கடைசிக் காலத்தில் எவ்வித குறையுமின்றி, கௌரவக் குறைச்சல் இல்லாமல் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள். (12.06.2018 அன்று மாலைமலரில் வெளிவந்தது) தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888. குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

👍 1
Image
ASTRO GURUJI
6/12/2025, 7:27:11 AM

when will receive cheated money? ஏமாந்த பணம் எப்போது கிடைக்கும்? #adityaguruji#gurujilve https://youtube.com/live/fjVSkkIBJYQ

❤️ 1
ASTRO GURUJI
6/12/2025, 5:32:39 AM

சனியா..?சனீஸ்வரனா.? C- 038 #adityaguruji #jodhidam ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி எண் : 8681 99 8888 இயற்கைப் பாபக் கிரகமான சனி ஒரு ஜாதகத்தில் நேர்வலு அடையக் கூடாது என்பதை சென்ற அத்தியாயத்தில் விளக்கினேன். இதை இன்னும் துல்லியமாகச் சொல்லப் போனால் ஒரு ஜாதகத்தில் எந்த ஒரு பாபக் கிரகமுமே நேர்வலு எனப்படும் ஆட்சி, உச்சத்தை மட்டும் அடைந்தால் அந்த ஜாதகருக்கு நல்ல பலன்களைச் செய்யாது. பாபக் கிரகங்கள் ஆட்சி, உச்சம் போன்ற ஸ்தான பலங்களை அடைந்தால் அவை ஏதேனும் ஒரு சுப கிரகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது மறைவு ஸ்தானங்களில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே அவை தமது தசைகளில் நன்மைகளைச் செய்யும். நமது ஞானிகளால் ஒரு கிரகத்தின் வலிமையை அளவிட சொல்லப்பட்ட ஸ்தானபலம், திக்பலம், திருக் பலம், கால, அயன, சேஷ்ட பலம் ஆகிய ஆறு வித பலங்களில், ஒரு கிரகம் இருக்கும் வீட்டை வைத்து அதன் வலுவைக் கணக்கிடச் சொல்லப்பட்ட ஸ்தான பலம், திக்பலம் ஆகிய இரண்டு விதமான வலுக்களில், திக் பலம் என்பது பாபக் கிரகங்களுக்குக்காகவே சொல்லப்பட்டது. இந்த இரு நிலைகளில் பாபக் கிரகங்கள் ஸ்தான பலத்தை விட ஒரு ஜாதகத்தில் திக்பலம் அடைவதே நல்லது. அதேநேரத்தில் சனியும் செவ்வாயும் ஸ்தான பலம், திக்பலம் இரண்டையும் சேர்த்துப் பெறுவதும் நல்லநிலை அல்ல. சனியும், செவ்வாயும் ஸ்தான பலத்தை முற்றிலும் இழந்து திக்பலத்தை மட்டும் பெறும் நிலையில் நல்ல யோகத்தைச் செய்வார்கள். ஸ்தான பலத்தை இழப்பது என்பது ஒரு கிரகம் தனது சொந்த காரகத்துவங்களை, அதாவது தன் குணங்களைத் தரும் வலிமையை இழக்கிறது என்று பொருள். உச்சம், மூலத் திரிகோணம், ஆட்சி, நட்பு, சமம், பகை, நீசம் என்று வகைப்படுத்தப்பட்ட ஒரு கிரகத்தின் வலு அமைப்பில், உச்சத்தில் இருக்கும் கிரகம் தனது குணங்களை ஒரு ஜாதகருக்கு முழுமையாகச் செய்யும். பின் படிப்படியாக மூலத் திரிகோணம், ஆட்சி, நட்பு என தனது குணங்களைத் தரும் வலிமையை படிப்படியாகக் இழந்து கொண்டே வந்து கடைசி நிலையான நீசத்தில் தனது செயல்பாடுகளைத் தரும் வலிமையை இழந்து முற்றிலும் செயலாற்றுப் போகும் என்பது இதன் அர்த்தம். சனி ஒரு இயற்கைப் பாபக் கிரகம். ஒரு மனிதனுக்கு கடன், நோய், தரித்திரம், உடல் ஊனம், அழுக்கு இடங்களில் இருக்கும் நிலைமை, உடலைப் பயன்படுத்தி பிழைக்கும் தன்மை ஆகியவற்றைக் கொடுக்க விதிக்கப்பட்ட கிரகம். சனி உச்சத்தில் இருக்கும் போது, சுபத்துவமோ, சூட்சும வலுவோ அடையாமல் வெறுமனே உயர் வலுவில் மட்டும் இருக்கும் போது மேலே நான் சொன்ன அவரது இயல்பான குணங்களை மட்டுமே செய்வார். ஒரு மனிதனுக்கு கடன், நோய், தரித்திரம் ஆகியவைகளை மட்டுமே தருவார். அவர் முற்றிலும் ஸ்தான பலம் இழந்து நீச நிலையை அடையும்போது தனது செயல்பாடுகளை அந்த ஜாதகனுக்குத் தரும் சக்தியற்றவர் ஆகிறார். அதாவது கடன், நோய் இவைகளைத் தர இயலாதவர் ஆகிறார். இதுபோன்ற ஒரு நிலையில் தனது கெட்ட குணங்களைத் தரும் சக்தியை இழந்து, தனது தீய குணங்கள் வடிகட்டப் பட்ட நிலையில், குரு போன்ற சுபர்களின் தொடர்பை பெறும்போது மட்டுமே சனி நன்மையைச் செய்வார். அப்போது கூட தனது தீய வழிகளின் மூலம்தான் நன்மையைச் செய்வார். ஒரு ஜாதகத்தில் உச்சம் பெற்று வக்ர நிலையை அடைந்து குருவின் தொடர்பை அவர் அடையும்போதோ அல்லது நீசம் பெற்று சுபத்துவத்தை அடையும் போதோ தனது தொழில் காரகத்துவங்களில் ஒரு மனிதனை அளப்பரிய பணத்திற்குச் சொந்தக்காரன் ஆக்குவார் சனி. அதேநேரத்தில் சுபர்களின் தொடர்பு இல்லாமல், வெறும் உச்சம் மட்டும் அடைந்திருந்து தசை நடத்தும்போது அந்த ஜாதகனை கைவண்டி அல்லது ரிக்சா இழுக்க வைத்து, மூட்டை தூக்கி சில்லறைகளை எண்ணிப் பிழைக்க வைப்பார், அடுத்து மிக முக்கிய விஷயமாக, சனி ஒரு இரக்கமற்ற நீதிபதி. மனிதனின் கர்ம வினைகளின்படி அவனைத் தண்டிக்கும் அதிகாரம் பெற்ற ஒரே கிரகம் இவர்தான். மற்ற கிரகங்களை வழிபடுவதைப் போல அல்லாமல் சனிக்கு மட்டும் சில குறிப்பிட்ட வழிபாட்டு முறைகளையும், பரிகாரங்களையும் நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகளும், சித்தர்களும் சொல்லியிருக்கிறார்கள். காலப்போக்கில் அவைகளை சரிவரப் புரிந்து கொள்ளாமல் அவற்றை நாம் தலைகீழாக செய்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக நமது ஞானிகள் சனிக்கு எதிரே போய் நிற்கக் கூடாது என்று நம்மைத் தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் நாம் அதைப் புரிந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்று சனியை வணங்கிக் கொண்டிருக்கிறோம். ஒரு தெய்வத்தின் முன்பு சட்டையின்றி, திறந்த மார்பு காட்டி, நேருக்குநேர் நின்று வணங்கும் உன்னத முறைகளைக் கொண்ட நமது உலகின் மேலான இந்து மதத்தில் ஒரு கிரக மூர்த்திக்கு முன்பு போய் நிற்காதே என்று நமது ஞானிகள் சொன்னதற்கு உண்மையான அர்த்தம் “நீ சனியை வழிபட வேண்டாம்” என்பதுதான். ஒரு கிரகத்தை எதற்காக வணங்குகிறோம்? அந்தக் கிரகம் அதனிடம் இருக்கும் நமக்கு வேண்டியவைகளை, நமக்குத் தேவையானவைகளை அருள வேண்டும் என்பதற்காகத்தான். அதன்படி குருவை வணங்கினால் அவர் தன, புத்திரகாரகன் என்பதால் அவரிடம் இருக்கும் பணத்தையும், குழந்தை பாக்கியத்தையும் நமக்கு அருளுவார். சுக்கிரனை வணங்கினால் அவரிடம் இருக்கும் வீடு, வாகனம், நல்ல மனைவி ஆகியவை கிடைக்கும். சந்திரனை வழிபட்டால் மனோபலமும், மாதா நலமும் தரப்படும். புதனைப் பற்றினால் அறிவாற்றல் நிச்சயம். செவ்வாயைச் சரணடைந்தால் கூட சகோதர ஆதரவும், தைரியமும் உண்டு. சனியை வணங்கினால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? தருவதற்கு அவரிடம் என்ன இருக்கிறது? தன்னை வணங்கும் மனிதனுக்கு எதைக் கொடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டவர் அவர்? கடன், நோய், தரித்திரம், உடல் ஊனம், ஆயுள் இவைகள்தானே அவரிடம் இருக்கின்றன? அவர் ஆயுள் காரகன் மட்டும்தானே? அதனால்தான் நமது ஞானிகள் சனிக்கு எதிரே நிற்காதே என்று சொன்னார்கள். செல்போன் யுகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஆன்மீக விஷயத்தில் நம் முன்னோர்களை விட அறிவாளிகளா நாம்? அனைத்து தெய்வங்களின் திருவுருவப் படங்களை நம் வீட்டிற்குள் வைத்து வணங்கி வழிபட நமக்குச் சொல்லித் தந்த நமது மூதாதையர்கள் சனியின் படத்தை மட்டும் ஏன் வீட்டிற்குள் வைத்து வணங்கக் கற்றுக் கொடுக்கவில்லை? சனியை வழிபட்டாலும் அதன் பிரசாதங்களை ஏன் வீட்டிற்குள் கொண்டு வராதே, சனி சம்பந்தப்பட்டதை வீட்டிற்குள் சேர்க்காதே என்றார்கள்? ( இப்போது சில சனி கோவில்களில் பிரசாதங்களை வீட்டுக்கு எடுத்துப் போகலாம் என்ற பிரச்சாரமும் நடக்கிறது. சனியின் உருவப் படங்களும் வந்து விட்டன.) சரி... கும்பிடக் கூடாது என்றால் கோவிலை ஏன் கட்டி வைத்தார்கள்? சில கோவில்களில் ஏன் சனிக்கென்று தனி சன்னதிகள் இருக்கின்றன? ஒரு எண்பது வயதுக் கிழவன் தனது பேத்தியின் திருமணத்தைக் காண விரும்புகிறான். தடியை ஊன்றிக் கொண்டு தள்ளாடி சனி முன்பு நின்று “இன்னும் ஒரு வருடம் மட்டும் எனக்கு ஆயுள் கொடு. என் கண்ணுக்குக் கண்ணான என் செல்வத் திருமகளின் கல்யாண வைபவத்தை கண் குளிரப் பார்த்துவிட்டு பரமபதம் அடைகிறேன்” என்று வேண்டிக் கொள்ளவும், ஒரு வாழப் பிறந்த வாலிபன் கர்ப்பிணி மனைவியை விட்டு விட்டு விபத்தினால் சாகக் கிடக்கிறான், அவனுக்கு ஆயுள் கொடு, வரும்போதே இருதய வால்வில் ஓட்டையோடு வந்து விட்டது இந்தப் பிஞ்சு, இதனை வாழவிடு என்று வேண்டிக் கொள்ள மட்டுமே உருவாக்கப்பட்ட சன்னதிகள் இவை. ஆயுளை வேண்டிக் கட்டப் பட்டவை இவை. அதிர்ஷ்டம் கொடு என்று கேட்பதற்காக இல்லை. திருநள்ளாறு ஸ்தல வரலாற்றில் கூட நள மகராஜன் ஏழரைச் சனி முடிந்த பிறகு அங்கு வந்து குளத்தில் குளித்து எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான் தர்பாரண்யேஸ்வரரைத்தான் தரிசித்து வணங்கிச் சென்றான். இந்த இடத்தில் ஒரு வேதனையான விஷயத்தை கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அனைத்துக் கிரகங்களும் நமது மேலான மதத்தின் ஆதி மூர்த்தியான சர்வேஸ்வரனுக்குள் அடக்கம். நவ கிரகங்களும் ஈசனது வேலைக்காரர்கள் மட்டுமே. ஈசன் காலால் இடும் பணியை, கர்மாவை, தண்டனையை நமக்குத் தலையால் அளிக்கக் கடமைப்பட்டவைகள் இந்த நவ கிரகங்கள். கிரகங்கள் எவையும் தெய்வங்கள் அல்ல. இதனை நமக்கு உணர்த்தவே ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிதேவதைகளை தெளிவாகச் சொல்லி கிரகங்களுக்கும், தெய்வங்களுக்கும் உள்ள வேறுபாட்டை நமது ஞானிகள் தெளிவாக்கியிருக்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக நமது திருக்கோயில்களில் வேத நாயகனான எம்பெருமான் மூலவரை விடுத்து கிரக சந்நிதிகளுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. சமீபத்தில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஒரு நவ கிரக திருத்தலத்திற்கு சென்றிருந்தேன். மூலவர் சந்நிதி காலியாக அர்ச்சகர் கூட இல்லாத நிலையில், தனிக் கிரக சந்நிதி நிற்கக் கூட இடமின்றி பரபரப்பாக இருந்தது. நான் மட்டும் மூலவரின் திருமேனி முன்பு ஆனந்தமாய் ஒருமணி நேரம் குடும்பத்துடன் அமர்ந்து தரிசித்தேன். எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் நாம்? நம் தெய்வாம்சம் பொருந்திய ஞானிகளும், முன்னோர்களும் வகுத்துத் தந்த மேலான முறைகளை விட்டு மெதுவாக விலகி, முறையற்ற வழிபாட்டு முறைகளுக்குள் சென்று கொண்டிருக்கிறோம். இன்றும் பரிகாரக் கோவில்களுக்கு செல்லும் போது முதலில் மூலவரை முறைப்படி தரிசித்து, அவர் திருமுன்பு வணங்கி, அவரைத் தொழுது அதன் பின்பே தனிக் கிரக சந்நிதிகளுக்குச் செல்லும்படி என் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறேன். சனிக்கு மட்டும் எப்படி ஈஸ்வர பட்டம் வந்தது? சனிக்கு இறைவன் “ஈஸ்வர” பட்டதை அருளியதாக நம் தமிழகத்தில் மட்டும் ஒரு பொருத்தமற்ற கதை நிலவி வருகிறது. அது முற்றிலும் தவறு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே கலாச்சாரத்தைக் கொண்ட நமது பாரத தேசத்தில் அனைத்து தெய்வங்களின் பெயரும் நாடு முழுமைக்கும் ஒன்றாகத்தான் இருக்கிறது. சில இடங்களில் மட்டும் அந்தப் பகுதி மொழிக்கேற்ப பொருள் மாறாமல் பெயர்கள் மாறும். இங்கே முருகு என்றால் அழகு என்ற அர்த்தத்தில் முருகனாக இருப்பவர் வட மாநிலத்தில் கார்த்திகேயனாக மாறுவார். அவ்வளவுதான். ஆனால் சனிக்கு, தமிழ்நாட்டில் மட்டும் ஒரு அடைமொழி சேர்த்து சனீஸ்வரன் என்று கொண்டாடுகிறோம். வடபாரதத்தில் அவர் சனிதேவ், சனி மகாத்மா, சனி பகவான் மட்டுமே..! சனீஸ்வரன் இல்லை. நமது மேலான இந்து மதத்தில் சர்வேஸ்வரன் ஒருவன் மட்டுமே. அவர் இந்த சனியைப் போல கோடிக்கணக்கான கிரகங்களைப் படைத்த எல்லாம் வல்ல பரம்பொருள். அவனுக்கு மட்டுமே அந்தப் பட்டம். அவன் படைத்த எந்தப் பொருளுக்கும் இல்லை. இந்த ஈஸ்வரப் பட்டம் தமிழில் எப்படிப் புகுந்தது? சனியை நமது தெய்வ மொழியான மகோன்னத சம்ஸ்கிருதம் “சனைச்சர” என்று குறிப்பிடுகிறது. இதன் அர்த்தம் மெதுவாக நகர்பவர் என்பதாகும். ஆலயங்களில் நன்கு கற்றறிந்த அந்தணர்கள் ஸ்பஷ்டமாக மந்திரங்களைச் சொல்லும் பொழுது உன்னிப்பாக கவனித்தால் சனிபகவான் துதியில் “சனைச்சராய சுவாமி” என்று உச்சரிப்பதைக் கவனிக்கலாம். இதுவே நாளடைவில் சனீஸ்வர சுவாமி என்று மருவியதே தவிர கிரகங்களில் அவருக்கு மட்டும் ஈஸ்வரப் பட்டம் என்பது பொருத்தமற்ற, புகுத்தப்பட்ட கதை. சனியை, சனீஸ்வரன் என்று அடைமொழியிட்டுச் சொல்வதால் ஒருவருக்கு தோஷம் அதிகரிக்குமேயன்றி நன்மைகள் எதுவும் இல்லை. ( நவ 6 - 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.) அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888. குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்... https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

❤️ 👍 2
ASTRO GURUJI
6/12/2025, 7:58:32 AM

திருமணம் எப்போது நடக்கும்? எப்படி சொல்வது?#adityaguruji #shots https://youtube.com/shorts/gY8cUan7EMA

❤️ 1
ASTRO GURUJI
6/12/2025, 10:45:59 AM

0542 - 6,8,12 க்குடையவர்கள் நவாம்சத்தில் எப்படி இருக்க வேண்டும்?#adityaguruji #jothidam https://youtu.be/FYrmuk-4rwg

❤️ 1
ASTRO GURUJI
6/12/2025, 9:01:01 AM

கோடிகளை சம்பாதிப்பீர்களா?#adityaguruji #jothidam #shorts https://youtube.com/shorts/VIrwqrNvNDE

ASTRO GURUJI
6/12/2025, 5:32:51 AM
Image
ASTRO GURUJI
6/12/2025, 4:33:23 AM

Raasi Palan - June 12 2025 | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் | ஜோதிடர் ஆதித்ய குருஜி | Daily Horoscope #adityaguruji #gurujilive https://youtu.be/togVLfeBni8?si=sph8YJSE7raB2wBN

👍 1
Link copied to clipboard!