
ஆளும் மக்கள் சட்ட உரிமை பாதுகாப்பு அறக்கட்டளை
747 subscribers
About ஆளும் மக்கள் சட்ட உரிமை பாதுகாப்பு அறக்கட்டளை
எளியோருக்கு சேவை நோக்கில், அவர்களுக்கான சட்ட உரிமையை காக்கவும், சட்ட விழிப்புணர்வு அடையவும், சட்ட சேவை நோக்கத்திற்காகவும் உருவாக்கப்பட்டது. தினமும் அனைவருக்கும் பயன்படும் விதமாக, ஒரு சட்ட பதிவு பதிவிடப்படும். பல ஏழை மக்கள், தங்களின் சட்ட உரிமை பற்றின விழிப்புணர்வு அற்றவர்களாய் காணப்படுகின்றனர். அனைவரும் சட்டம் அறிய வேண்டும், அவர்களது சட்ட உரிமையை பேணிக்காக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சேனல்... சட்டம் கல்லாதோர் இல்லா உலகினை படைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.... சட்டப்பணியே, என் சமூகப்பணி, அதற்கே என்னை முழுதாய் அர்ப்பணித்துள்ளேன்..... சேவை நோக்கில் சட்ட உதவிக்கும், சட்ட ரீதியான சந்தேகங்களை தீர்ப்பதற்கும் 24 * 7 என எந்நேரம் வேண்டுமானாலும், 9940485939 என்ற அலைபேசி எண் மூலம் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.... இவன்.... ஆ.ம.ச.இரவிக்குமார். B.A.,L.L.B., வழக்கறிஞர். எளியோர் சட்ட பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் & மாநில தலைவர். திருச்சி-620001
Similar Channels
Swipe to see more
Posts

*பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போல் தமிழகத்தில் மிக விரைவில்* *அதிர்வலையை ஏற்படுத்தக்கூடிய ஒரு சம்பவம்.....* *இது கிராமப்புறத்தில் இருந்து நகர்புறம் தங்கி படிக்கும் கல்லூரி மாணவிகளின் பெற்றோர்களுக்கும், கல்லூரி மாணவிகளுக்கும் உரிய பகிர்வு.... இயன்றவரை பகிர்ந்து, உங்கள் வீட்டு பெண்குழந்தைகளைகாத்திடுக....* *பகிர்வு ;-* *ஆ.ம.ச.இரவிக்குமார்.* *B.A., B.L.,* வழக்கறிஞர். ஆளும் மக்கள் சட்டஉரிமை பாதுகாப்பு அறக்கட்டளை *நிறுவனர் & தலைவர்* அலைபேசி ;- *9940485939* *சட்ட உதவிக்கு அழைக்கவும்* இது பற்றி நம் தமிழ் திரையுலக திரைப்படங்களில் கூட விழிப்புணர்வு திரைப்படமாக பகாசுரன் மற்றும் திரௌபதி படங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன... இன்னும் சில தமிழ் மற்றும் பிற மொழி படங்களில் கூட குறிப்பிடப்பட்டுள்ளன.....😞😞😞 ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து முதல் இளம் பட்டதாரிகளாக வரும் பெண்குழந்தைகளே இவர்களின் டார்க்கெட் பண வசதி இல்லாமல் கிராமத்தில் இருந்து நகரம் வரும் இளம் பெண்கள், மற்றும் பெண்குழந்தைகளுக்கு அவர்களிடம் பண ஆசை மற்றும் பிற ஆடம்பர வசதிகளை காட்டி, அவர்களின் ஏழ்மையை நீக்கும் கடவுள் போல அவதரித்து, அந்த பெண்களையும், பெண் குழந்தைகளையும், கேவளம் பணத்திற்கு ஆசப்பட்டு, அவர்களை பணம் படைத்த முதலாளிகள் மற்றும் அரசியல் பலம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் & நிர்வாகிகளின் பாலியல் இச்சையை தவிர்க்கும் பலி ஆடுகளாய் நிறுத்தப்பெற்று, அவர்களின் இச்சைக்கு முதல் முறை வலுக்கட்டாயமாக தள்ளப்படுகின்றனர். அவர்கள் உடலுறவில் ஈடுபடும் பொழுது அதனை மறைமுக காமிராவில் பதிவு செய்து, பாதிக்கப்பட்ட பெண்களை மீண்டும் மீண்டும் அவர்களை மிரட்டி, வீடியோவினை காட்டி, வீடியோவினை அனைத்து சமூக வலை தளத்திலும் பகிர்வதாய் மிரட்டி, பாலியல் வன்புணர்வில் வலுக்கட்டாயமாக ஈடுபடவைக்கின்றனர் அதுமட்டுமின்றி ஸ்பா என்ற பெயரில், பாலியல் வல்லுறவு கூடங்கள் அரசு அனுமதியோடு இயங்குகின்றன... இதில் அவ்வப்போது, சில கைதுகளளும் கண்துடைப்பு நிகழ்வாக நிகழ்கின்றன..... தற்சமயம் கடைசி நிகழ்வாக திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் பிரபலமான ஹோட்டலில் இரவு பார்ட்டியின் பொழுது, 17 வயது பெண் குழந்தை உட்பட 4 பெண்கள் மற்றும் அந்த ஹோட்டலின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்கள் காப்பகத்திலும், பாலியல் தொழிலில் ஈடுபட்ட நபர் குண்டாஸ் சட்டத்தில் கடந்த 27-12-2023 அன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் உயர்திரு. காமினி அவர்களின் உத்தரவின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்விற்கு முக்கிய காரணம் பெண்களை பெற்ற பெற்றோர் ஆகிய நீங்களே.... பெண்குழந்தைகள் மீது கவனம் செலுத்தாது, பணம் பணம் என்று வீட்டில் உள்ள கணவன் மனைவி என இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு, தன் மகளுக்கு அலைபேசி ஒன்றினை வாங்கிகொடுத்துவிட்டு அவர் யாருடன் பேசுகிறார், சமூக வலைத்தளத்தில் என்ன செய்கிறார் என்பதனை அறிந்துக்கொள்ளாததே ஆகும்,,,, பெற்றோரின் கல்வி அறிவு, படிப்பறிவு என்பது இரண்டாம் பட்சமே..... இதனைப் படிக்கும் பெண் குழந்தைகளின் பெற்றோர், தயவு கூர்ந்து பெண் குழந்தைகள் மீது, கவனம் செலுத்துங்கள்.... இதனைப் படிக்கும் பெண் குழந்தைகள் மற்றும், பெண்கள் உலகில் பிற உலக காதலுக்கு ஆசைப்படாமல், பெற்றோரின் உண்மைக் காதலை புரிந்துக்கொண்டு, தெரு நாய்களின் காதல் மற்றும் காம வலைகளில் சிக்காது, உங்கள் பெற்றோரின் உண்மை நிலை அறிந்து அவர்களை நேசியுங்கள்... உலகில் பணம் மற்றும் வாசதியான வாழ்வு நிரந்தரம் இல்லை என்பதனை உணருங்கள்.... இந்த பகிர்வின் மூலம் நாளை நான் பொய் வழக்கின் மூலம் சிறை கூட செல்லலாம். இந்த பகிர்வின் நோக்கம் ஏழை, எளிய பெண் குழந்தைகள் & பெண்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதே.... உங்களை ஒருவர் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டினால், நீங்கள் நேரடியாக உங்கள் பெற்றோரை அந்த பிரச்சனையை கூறி உதவி கோருங்கள். அல்லது அனைத்து மகளிர் காவல் நிலையங்களை நேரடியாக அணுகுங்கள். அல்லது நேரடியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தமிழகம் முழுவதும் உதவ தயாராக உள்ளோம்.... மேலும் தற்சமயம் AI மூலம் வீடியோ, மற்றும் புகைப்பட்ங்களை சித்தரித்து, குற்றவாளிகள் பிற பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோவினை மாற்றி, பெண்களை மிரட்டி, பாலியல் இச்சைக்கு பயன்படுத்த கூடும்.... இதுபோல் பிரச்சனையில் மாட்டுக்கொள்ளும் பெண்கள் CYBER CRIME காவலர்கள் உதவியை நாடவும் *எனது அறக்கட்டளை வாட்ஸ்அப் சானலில் தினம் ஒரு சட்ட விழிப்புணர்வு தகவல் பெற இந்த லிங்க் மூலம் இணையவும்* https://whatsapp.com/channel/0029Va666Yl72WTsd3YKOL0x