பள்ளி, கல்லூரி சிறக்குகள் WhatsApp Channel

பள்ளி, கல்லூரி சிறக்குகள்

0 subscribers

About பள்ளி, கல்லூரி சிறக்குகள்

What is known What is known

Similar Channels

Swipe to see more

Posts

பள்ளி, கல்லூரி சிறக்குகள்
பள்ளி, கல்லூரி சிறக்குகள்
2/15/2025, 6:11:01 AM

அப்பாவின் சொத்தில் மகளுக்கு பங்கு கொடுக்க தேவை இல்லை என்று ஏன் நம் முன்னோர்கள் கூறினார்கள் தெரியுமா ? பெண்களை விட்டுவிட்டு அண்ணன்-தம்பிகள் தந்தையின் சொத்தில் பாகம் பிரித்துக்கொள்வார்கள்... அதன் பிறகு.. அவர்கள் பங்காளிகள் மட்டுமே.. இவர் வீட்டு விசேஷத்திற்கு அவரும்.. அவர் வீட்டு விசேஷத்திற்கு இவரும் போய் கலந்துகொள்வதோடு சரி.. மற்றபடி கொடுக்கல் வாங்கல்கள் எதுவாக இருந்தாலும் அது கணக்கில் வைக்கப்படும்.. பின் வசூலிக்கப்படும்.. சமயங்களில் வட்டியுடன்... ஆனால் பெண்களுக்கு சொத்தில் எதுவும் கொடுப்பது இல்லை... மாறாக திருமணத்திற்கு சீர்வரிசை சிறப்பாக செய்வார்கள்.. நகை- நட்டு -பாத்திரம்- பண்டம்- வாகனம்- ரொக்கம் என இந்த பட்டியல் நீளும்... பாகம் பிரித்தால் கிடைக்கும் சொத்தின் மதிப்பை விட இந்த சீர் செனத்தியின் மதிப்பு அதிகமாக இருக்கும்... அதோடு விடுவது இல்லை... சீமந்தம், பிள்ளை பேறு.. பெயர் சூட்டுதல் தொடங்கி... அந்த பெண்ணின் பிள்ளைகள் வளர்ந்து திருமணம் ஆகும் வரையில் தாய்மாமன் சீர் என்ற பெயரில் குடலை அறுத்தாவது கொடுத்தே ஆக வேண்டும்... அந்த உடன் பிறந்த சகோதரியின் மரணம் வரை உடன் பிறந்தவன் கூடவே வர வேண்டும்... எல்லாவற்றையும் கணக்கு போட்டு பார்த்தால் பாகம் பிரித்திருந்தால் போயிருக்க கூடிய சொத்தின் அளவை விட பன்மடங்கு வந்திருக்கும் பெண்ணிற்கு.. இதை எந்த ஆணும் கணக்கு பண்ணி பார்த்து "இல்லை இல்லை... நான் எனக்கு கிடைத்த சொத்தின் அளவை விட கூடுதலாக உனக்கு கொடுத்து விட்டேன்.. இனிமேல் செய்ய முடியாது " என்று சொல்வதில்லை... இவன் கடன வாங்கியோ.. தமக்கு கிடைத்த சொத்தை விற்றோ கூட தங்கையின்-அக்காவின் நலனிற்காக அவர்களது தேவையை பூர்த்தி செய்வான்... நியாயமாக வரதட்சணைக்கு எதிராக போராட வேண்டியவன் ஆண் தான்... தந்தையின் சொத்தை பாகம் பிரிக்கையில் சகோதரிக்கும் ஒரு பாகத்தை கொடுத்துவிட்டு அதோடு நல்லது கெட்டதுக்கு நாம கலந்துக்குவோம்.. கொடுக்கல் வாங்கல் எதுவும் வேண்டாம்.. அப்படியே இருந்தாலும் அதை கணக்கில் வைத்து திரும்ப வாங்கிக்கொள்வோம்.. என்று நினைத்தால் அதன் பிறகு அவன் சம்பாதிக்கும் அனைத்துமே அவனுக்கே சொந்தம்... ஆனால் எந்த ஆணும் அப்படி சிந்திப்பது இல்லை... வேறு வீட்டில் வாழப்போகும் பெண்ணுக்கு கடைசி வரை பாதுகாப்பும், ஆதரவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் ஏற்படுத்திய வழிதான் சீர் செனத்தி எல்லாம்... அப்படி பாகமாய் சொத்தை பிரித்து கொடுத்துவிட்டுவிட்டால் அந்த பெண் ஆதரவற்று போவாள்... இவனும்.. எனக்கு தெரியாது என்று ஒதுங்கி விடுவான்... அதற்கு வழி கொடுக்காமல் அந்த உறவை பிணைத்து வைக்கவே பெண்களுக்கு சொத்துக்களை பாகமாய் பிரித்து கொடுக்காமல் முதலீடாய் சகோதரனிடமே விட்டுவிட்டு கடைசி வரை கொஞ்சம் கொஞ்சமாய் வசூலிக்கும் வாய்ப்பை பெண்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தார்கள்... பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்று அரசு அறிவாளியாய் யோசித்து கொண்டுவந்த சட்டம் அந்த உறவை முறிக்கும் முட்டாள்தனம் என்பது உணராத பெண்கள் தான் சொத்தில் பங்கு எங்கள் உரிமை என்று போராட கிளம்புகிறார்கள்... ( எங்கோ ஒரு சில சகோதரன் ஒன்றும் செய்யாமல் ஏமாற்றிவிட்டான் என்பதற்காக வழக்கு தொடுப்பவர்களை சொல்லவில்லை...) நீயும் அவன் கூட தான பொறந்த... உனக்கு மட்டும் சொத்துல உரிமை இல்லையான்னு உசுப்பி விடுற உறவுகளும் - போராளிகளோ கடைசி வரை கூட வர மாட்டாங்க.. உங்களுக்கு ஒண்ணுன்னா சகோதரன் தான் துடிப்பான்.. ஏன்னா அவன் தான் சக உதிரன்... அப்படிப்பட்ட உன்னத உறவை பல ஆயிரம் குடும்பத்தை கெடுத்த ஒரே சட்டம். கழிசடை பொறபோக்கு திருட்டு திராவிட நாதாரி கட்டுமரம் போட்ட பெண்களுக்கும் தந்தை சொத்தில் பங்கு உண்டு என்பதுதான்... என்றென்றும் அன்புடன் சுந்தர்ஜி

பள்ளி, கல்லூரி சிறக்குகள்
பள்ளி, கல்லூரி சிறக்குகள்
2/11/2025, 7:29:57 PM

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..? அருகம்புல் பொடி: அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி. நெல்லிக்காய் பொடி: பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது. கடுக்காய் பொடி: குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். வில்வம் பொடி: அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது. அமுக்கரா பொடி: தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. சிறுகுறிஞான் பொடி: சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். நாவல் பொடி: சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. வல்லாரை பொடி: நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. தூதுவளை பொடி: நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. துளசி பொடி: மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. ஆவரம்பூ பொடி: இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். கண்டங்கத்திரி பொடி: மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. ரோஜாபூ பொடி: இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். ஓரிதழ் தாமரை பொடி: ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா. ஜாதிக்காய் பொடி: நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும். திப்பிலி பொடி: உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது. வெந்தயப் பொடி: வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது. நிலவாகை பொடி: மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும். நாயுருவி பொடி: உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது. கறிவேப்பிலை பொடி: கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரும்புச் சத்து உண்டு. வேப்பிலை பொடி: குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது. திரிபலா பொடி: வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். அதிமதுரம் பொடி: தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும். துத்தி இலை பொடி: உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து. செம்பருத்திபூ பொடி: அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது. கரிசலாங்கண்ணி பொடி: காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. சிறியாநங்கை பொடி: அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது. கீழாநெல்லி பொடி: மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது. முடக்கத்தான் பொடி: மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது. கோரைகிழங்கு பொடி: தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது. குப்பைமேனி பொடி: சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது. பொன்னாங்கண்ணி பொடி: உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது. முருங்கை விதை பொடி: ஆண்மை சக்தி கூடும். லவங்கபட்டை பொடி: கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது. *வாதநாராயணன் பொடி: பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும். *பாகற்காய் பவுட்ர்: குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். *வாழைத்தண்டு பொடி: சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது. *மணத்தக்காளி பொடி: குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். *சித்தரத்தை பொடி: சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது. *பொடுதலை பொடி: பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும். *சுக்கு பொடி: ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது. *ஆடாதொடை பொடி: சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது. *கருஞ்சீரகப்பொடி: சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும். *வெட்டி வேர் பொடி: நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும். *வெள்ளருக்கு பொடி: இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும். *நன்னாரி பொடி: உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நாவறட்சிக்கு சிறந்தது. *நெருஞ்சில் பொடி: சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும். *பிரசவ சாமான் பொடி: பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது. *கஸ்தூரி மஞ்சள் பொடி: தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும். *பூலாங்கிழங்கு பொடி: குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும். *வசம்பு பொடி: பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும். *சோற்று கற்றாழை பொடி: உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும். *மருதாணி பொடி: கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும். *கருவேலம்பட்டை பொடி: பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும். ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை, இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும். இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..? 1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். 2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். 3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும். 4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். 5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். 6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். 7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்....

Link copied to clipboard!