ALP Astrology
ALP Astrology
February 2, 2025 at 04:49 PM
மாற்றம் ஒன்றே மாறாதது. ஆம், ஏற்றத்துக்கு வழிவகுக்கும் மாற்றத்திற்கான வரவேற்பும் அங்கீகாரமும் தொன்று தொட்டு சரியான நேரத்தில் கிடைப்பதில்லை. கண்டுபிடிப்பு என்பது முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தோன்றிய எண்ணமே ஆகும். அத்தகையதொரு மாற்றத்தை ஏற்கும் மனப்பக்குவம் நம் முன்னோர் காலந்தொட்டு சற்று குறைவாகவே காணப்படுகிறது. கண்டுபிடிப்பாளர்கள் பலருக்கும் உரித்த நேரத்தில் அங்கீகாரம் கிடைக்காமல், பல எதிர்பார்ப்புகளை சந்தித்து,பிறகு காலஞ்சென்று அதற்கான அங்கீகாரமோ, பாராட்டோ, வரவேற்போ கிடைக்கப் பெற்றிருக்கிறது. உதாரணமாக இயற்பியலின் தந்தை எனப் போற்றப்படும் நிக்கோலா டெஸ்லா - அவர்கள் பிறந்தது 1856 ஆம் ஆண்டு.அவருடைய கண்டுபிடிப்பு நிகழ்ந்ததோ 1890 -ம் ஆண்டு. அவர் மறைந்த காலம் 1943 ஆம் ஆண்டு. ஆனால் அவருடைய கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற ஆண்டு 1956. அவர்களின் கண்டுபிடிப்பு AC மின்சாரத்தை DC மின்சாரமாக மாற்றியது. இதனால்தான் தற்போது உலகம் முழுவதும் மின்சாரம் தடையின்றி கிடைக்கப்பெறுகிறது. ஆரம்ப காலத்தில் அவருடைய கண்டுபிடிப்பு ஏற்க முடியாமல்,அந்த மாற்றத்தை எதிர்க்கும் விதமாக அவரை பைத்திய அறிவியலாளர் என்று அழைத்தனர். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு, இந்த கண்டுபிடிப்பின் பயன்பாட்டை, அரிய பொக்கிஷமாக உணர்ந்து சுமார் 100 வருடத்திற்கு பிறகு, குறிப்பாக டெஸ்லா அவர்களின் காலத்திற்குப் பிறகு இந்த கண்டுபிடிப்புக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது. இதுதான் ஒரு அரிய கண்டுபிடிப்புக்கும், மற்றும் கண்டுபிடிப்பாளருக்கும் கிடைக்கும் உரிமை. இது அறிவியலுக்கு மட்டுமல்லாது கலை துறையின் அறிய கண்டுபிடிப்புக்கும், கண்டுபிடிப்பாளருக்கும் பொருந்தும். கண்டுபிடிப்பின் நோக்கமும், கண்டுபிடிப்பாளரின் நோக்கமும், மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பது மட்டுமே அதற்காக இயற்கையால், இறைவனால் அனுப்பப்படுபவர்கள் தான் இத்தகைய கண்டுபிடிப்பாளர்கள் . பல யுக யுகமாய் இருந்து வரும் ஜோதிடத்தில், ஜென்ம லக்னம் ஜென்ம ராசியை மட்டுமே பிரதானமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இருந்தும் ஒரே மாதிரியான பலன் கூற இயலாத காரணத்தால், இந்த கோட்பாட்டில் மாற்றம் தேவை என்பதை உணர்ந்து, "லக்னம் வளரும் " என்று மாற்றி சிந்தித்து மக்களுக்கு இந்த ஜோதிடம் பெருவாரியாக வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த வேளையில், முருகப்பெருமான், ஆஞ்சநேயர், நீம் கரோலி பாபா இவர்களின் இறையருளால் தோன்றியதுதான் அட்சய லக்னப் பத்ததி ஜோதிடம். தமிழ்நாட்டின் தலைசிறந்த ஜோதிடர், கிரகங்களின் தன்மைகளை ஆய்வு செய்து உணர்ந்தவர், தமிழ் மொழியின் மீது பற்று கொண்ட ஓர் பண்பாளர், ஓலைச்சுவடியில் முனைவர் பட்டம் பெற்றவர் என அடுக்கிக் கொண்டே போகலாம். படித்தது ஏனோ ஆசிரியர் பணிக்கு தான். ஆனால் அவரின் விருப்பம் எல்லாமே ஜோதிடத்தின் மேல்தான். ஜோதிடத்தில் இருக்கும் பல முறைகளிலும் தனக்கென ஒர் புதிய ஆய்வு முறையில் பலன் கூறும் முறையே வேறு விதமாக கூறுவர். ஜோதிடத்தில் ஜாதகம், பிரசன்னம், ஆருடம் சகுனம், , கைரேகை எண்ணியல் முறையில், பெயர்களின் முறையில் ஜாதகம் பார்த்தல் என பல முறைகளிலும் பலன் கூறுவது மட்டுமல்லாது கற்பித்து ஆய்வு மாணவர்களை உருவாக்கும் பேராசிரியர் என்ற பெருமையும் கொண்டவர். பல நூற்றுக்கணக்கான திறமையான ஜோதிடர்களை உருவாக்கிய பெருமை இவரையே சாரும். மன ரீதியான பாதிப்பாக இருந்தால் அதன் தன்மையை அறிவதற்கு பிராணிக் ஹீலிங் என்ற சிகிச்சை கற்றுக் கொண்டுள்ளார். கடந்த கால பாதிப்புகளை அறிய முற்பிறவி பற்றிய ஆய்வுகளையும் அதை தீர்க்க வழி முறைகளையும் கூறுவதில் வல்லவர் (ஆழ்மன சிகிச்சை). சைக்காலஜி என்றால் இவரின் கேள்விகளுக்கு பதில் கூறினால் நீங்களே என்ன செய்தி செய்து கொண்டு உள்ளோம் என்பதை கூறிவிடுவார். உளவியல் சார்ந்த கருத்துக்களை ஒரு மணி நேரம் உரையாடுங்கள். கனவில் காண முடியாத எண்ணங்கள் கூட உங்களால் முடியும் என கூற வைத்து விடுவார். நேர்மறையான எண்ணங்களின் சொந்தக்காரர் என்றால் மிகையாகாது. முடியும் என்பது மட்டுமே இவரின் தாரக மந்திரம் வார்த்தைகளை கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர். எளிமையான தோற்றம்தான் இவரின் அடையாளம். இத்தகைய பண்பாளர்தான், ஜோதிடத்தில் உலகின் தலைசிறந்த ஜோதிடர் என்ற பெருமையை பெற்றவர் அதற்கு காரணம் அவரின் திறமையும் முயற்சியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம், தென்னடார் என்று குக்கிராமத்தில் விவசாய குடும்பத்தில் ப.சிங்காரவேல், சி.பத்மாவதி என்ற இணையறுக்கு பிறந்த சி.பொதுவுடை மூர்த்தி இன்று உலக நாடுகள் சென்று தனக்கென ஜோதிடத்தில் ஒரு முத்திரை பதித்து வருகிறார் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஜாதகத்தை ஒரே ஒரு முறை பார்த்தால் அதைப்பற்றி கூறிக் கொண்டே இருப்பதும், இவரின் ஞாபக சக்தியின் தன்மையும் பார்த்தல் வியப்பாக அமைகிறது. பெயரை மட்டுமே கூறினால் ஜாதகத்தை அப்படியே படம் போட்டு விளக்குவதால், அருள்வாக்கு ஜோதிடர் என்ற பாராட்டுக்குரியவர். வாக்கு பலிதம் அதிகம் என்பதால் வாக்குயோகி என்ற பட்டமும் பெற்றவர். ஜோதிடம் அல்லாத பிற எல்லா துறைகளையும் பற்றிய நுண்ணறிவை ஒருங்கே பெற்றவர். அட்சய லக்ன பத்ததி ஜோதிட புத்தகங்களையும் தொழில்நுட்பம் சார்ந்த 16 வகை ALP ஜோதிடம் மென்பொருளை அளித்து உள்ளார். இப்படிப்பட்ட அரிய விஷயத்தை கற்றுக் கொடுக்க இறைவனால் அல்லது இயற்கையால் ஜோதிடத்துக்காக அனுப்பப்பட்டவர்தான் நமது மஹாகுரு அவர்கள் . முனைவர் சி.பொதுவுடைமூர்த்தி அவர்களைப் பற்றி இதுபோல் பல நூறு பக்கங்கள் பக்கங்களை எழுதிக் கொண்டே போகலாம். நம் மண்ணின் ஒரு திறமையான அனுபவ மிக்க சிறந்த ஜோதிட பேராசிரியர் அட்சய லக்னபத்ததி ஜோதிட தந்தை. அவரின் பிறந்தநாளில் அவரை நாமும் பாராட்டுவோம்! வாழ்த்துவோம்!! போற்றி வணங்குவோம்!!! அட்சய குரு வணக்கம்!!!
🙏 ❤️ 👍 🙇‍♀️ 🎉 👌 👏 101

Comments