𝗪𝗼𝗿𝗱𝘀 𝗙𝗿𝗼𝗺 𝗤𝗮𝗹𝗯🫀
January 27, 2025 at 12:05 PM
*இன்றைய காலங்களில் எத்தனையோ சுன்னத்தான அமல்கள் உதறி விடப்படுகிறது! ஆனால் நபியவர்கள் காட்டித் தராத அவர்கள் சமூகத்தில் தலை தூக்கி நிற்கின்றது! காரன்? மார்க்கத்தை படிக்காததன் காரணத்தினால் தான் இவ்வளவு குழப்பங்களும் தெளிவில்லாத சிந்தனைகளும் நம்மிடத்தில் இருக்கிறது! மார்கத்தை படியுங்கள்! எதையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்!* இறைவன் கூறுகிறான்! وَالَّذِينَ إِذَا ذُكِّرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا عَلَيْهَا صُمًّا وَعُمْيَانًا அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். திருக்குர்ஆன் 25:73 *உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா?* திருக்குர்ஆன் 49:16 அல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்று நினைத்தால் நாம் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுத் தருவதாகக் கருதப்படும். *அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்குத்தான் எந்த வணக்கத்தையும் நாம் செய்ய வேண்டும். ஆனால் நபியைப் பின்பற்றாமல் அல்லாஹ்வின் அன்பை யாரும் பெற முடியாது என்று அல்லாஹ் கற்றுத்தருகிறான்.* *Follow: Words From Qalb🫀* https://whatsapp.com/channel/0029VaYFUO69MF8voWUWPU1f
❤️ 👍 💯 ♥️ 👌 👏 💥 🖤 29

Comments