Kalviseithi | கல்விச்செய்தி
January 30, 2025 at 04:45 PM
பா.ம.க. தலைமை நிலையச் செய்தி டிட்டோ ஜாக் அமைப்பின் நிர்வாகிகள் மருத்துவர் அய்யா அவர்களுடன் சந்திப்பு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோ ஜாக் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துப் பேசினார்கள். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய முரண்பாடுகளைக் களைதல், ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு பெரும் தடையாக இருக்கும் அரசாணை 243-ஐ நீக்குதல், உயர்கல்வி கற்பதற்கான ஊக்கத்தொகையை மீண்டும் வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் உரிமை, அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை தேவையற்றதாக அறிவித்து, அதன் காரணமாக வழங்கப்படாமல் இருக்கும் தற்போதைய ஆசிரியர்களின் பதவி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்களிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர். கடந்த காலங்களில் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து
😂 😲 2

Comments