
அர்ஜூன் சண்முகம் பக்கம்
February 4, 2025 at 06:08 PM
முதலிலெல்லாம்
ஒரு நாளினை காலத்தின் நடுநாயகமான ஒரு துண்டு என்றேன்.
மூன்று குழந்தைகள் கைகோர்த்து ஆடும் தட்டாமாலை என்றேன்.
குரங்கு போயி கத்தி வந்தது டும் டும் என்றேன்
ஒரு மாலை சமயம்
எல்லாம் முடிந்தது மாதிரி வாடிப்போயிருந்த மலர்கள்
நாள் முடிந்து மறு நாள் காண
காலச்சுழற்சியில் சிக்கி
அப்படி 'ஜம்'மென திகழுமா !!