
ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
February 14, 2025 at 01:25 PM
*ரிஷபம் - கும்பத்தில் `சனி அஸ்தங்கம்` பலன் பற்றி காண்போம்.*
தற்போது சனிபகவான் சூரியனுக்கு முன்பு அஸ்தங்க நிலை பெறப்போகிறார். சுமாராக *34 நாட்கள்* அஸ்தங்க கதியில் மறைந்திருந்து பலன் தரப்போகிறார்.
பொதுவாக கிரகங்களின் அஸ்தங்கம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை பலரும், ஆனால் கிரகத்தின் சிறிய மாறுபாட்டிலேயே பலவித முரண்பாடான பலன்கள் வெளிப்படுகின்றன.
ஆகவே *ஆயுள் காரகன்* சனிபகவான் சூரியனோடு இணைந்து அஸ்தங்கம் பெறுவதால் எவ்வாறான பலன்களை ரிஷபத்திற்கு வழங்கப் போகிறார் என்பதை காண்போம்.
ரிஷபத்திற்கு சனிபகவான் 9 மற்றும் 10-ம் இடத்திற்கு சொந்தக்காரர். அவர் தற்சமயம் 10-ல் பயணித்துக் கொண்டு உள்ளார். ஆகையில் ரிஷபத்திற்கு சுகாதிபதி சூரியன், யோகாதிபதியான சனி உடன் இணைந்து, சனியின் ஒளியினை அஸ்தங்க முறையில் மறைக்கப் போகிறார்.
ரிஷபத்திற்கு சனி வக்ரம் நிவர்த்தியிலிருந்து உத்யோகத்திலும், தொழிலிலும் பலவித இன்னல்களை தந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் இருக்கும் இடத்திலேயே அஸ்தங்க முறையில் மறைந்திருந்து பலன் தரப் போகிறார்.
ரிஷபத்திற்கு சனி அஸ்தங்கம் பெற்று இயக்கக் கூடிய பாவகம் : *8,11,1,9,10* பாவகங்களை மறைந்திருந்து பலன் தரப்போகிறார். *(பாவக அமைப்பு ரிஷப லக்னத்திற்கு மட்டும் அதிகளவு செயல்படுத்தும்.)*
ரிஷப லக்ன/ராசி அன்பர்களுக்கு ஜனன ஜாதகத்தில் *சனி (அ)* என்று குறிப்பிட்டு இருந்தால் அந்த ஜாதகர்களுக்கு இந்த 34 நாட்கள் மிக கடுமையான காலகட்டமாக இருக்கக்கூடும் ஜாதகர்களுக்கு குறுகிய *(Short Period)* காலத்தில் கெடுபலன்களை அதிகமாக வழங்க கூடியவராக அமைய பெற்றிருப்பார்.
குடும்பத்தில் உள்ளவர்களால் மன அழுத்தங்கள் தரும். எது செய்தாலும் அவ பெயர்களை தரக்கூடியதாக இருக்கும். கோபத்தால் விரக்தியான பேச்சுக்கள் வெளிப்படும். உடலில் சோர்வு, மயக்கம், வயிற்று வலி போன்றவை தரும். மூத்த சகோதரரால் பிரச்சனைகளும், மன வருத்தங்களும் தரும். எந்த ஒரு காரியத்தையும் அலைந்து முடிக்கக்கூடிய நிலை தரும். எதிலும் அலட்சிய குணம் வேண்டாம். அதேபோல எதிர்மறையான சிந்தனைகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. தந்தைக்கு சிறு சிறு உடல் பாதைகள் வந்து விலகும். சிலருக்கு திடீர் பயணம், இடமாற்றம் போன்றவை தரும். உத்யோக முயற்சி இக்காலகட்டத்தில் கிடைக்கக்கூடும். கிடைக்கும் வாய்ப்பினை தட்டிக் கழிக்காமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது .*(இவைகள் ஜனன ஜாதகத்தில் சனி அஸ்தங்கம் பெற்றவர்களுக்கு கிடைக்கக்கூடியது.)*
ரிஷப லக்ன/ராசி அன்பர்களுக்கு ஜனன ஜாதகத்தில் சனி - *உச்சம், வக்ரம்* பெற்றிருந்தால் அவர்களுக்கு இக்காலகட்டம் எதிர்பாராத நற்பலன்கள் குறுகிய காலத்தில் கிடைக்கக்கூடியதாக இருக்கும். இழந்த உத்யோக வாய்ப்பை மீண்டும் பெரும் நிலை தரும். தொழில் முயற்சி வெற்றி தரும். சிலருக்கு எதிர்பார்த்த கடன் வரவு கிடைக்க பெறும். திருமணம் தடை உள்ளவர்களுக்கு இக்காலகட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்படும். மறு திருமணத்திற்காக பயணிப்பவர்களுக்கும் இக்காலகட்டம் வரன்கள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல்கள் நிலவும். புத்திரர்களுக்கு தேவையான சுப காரியங்கள் இக்காலகட்டம் நிகழும். இதனால் வரை இருந்த மனக்கலக்கம் விலகி, நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்யும் துணிவினை தரக்கூடியதாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
சனி அஸ்தங்கத்தில் வழிபடக்கூடிய ஸ்தலங்கள் என்றால் : ஏகாதசி தினத்தில் பெருமாள் விரதங்கள் கடைபிடிப்பது, மற்றும் உங்களுடைய குலதெய்வ ஸ்தலங்களில் அபிஷேக ஆராதனை செய்து வழிபடுவது உகந்த பலனை தரும்.
*(இக்காலகட்டங்களில் நீண்ட தூரா ஆன்மீகப் பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. அருகில் உள்ள பெருமாள் ஸ்தலங்களில் வழிபடுவது மன நிறைவை தரக்கூடிய இருக்கும்.)*
நன்றி !
வாழ்க வளமுடன் !!
*ஸ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்*
காரைக்குடி.
ஜோதிடர் : *Dr.பா.சதாசிவன்* B.Com D.A
Contact Number : *+91 6381453432*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
❤️
3