
சிறப்பாசிரியர்கள் (பகுதி/முழு நேரம்)
February 3, 2025 at 07:09 AM
*ராமநாதபுரம் மாவட்ட அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்*
இன்று ( 2.2.2025 )காலை 6.30 மணி அளவில் இருந்து சகோதரர்கள் *பத்மநாதன்* *அலெக்ஸ்* *கோபுநாத்* மாவட்ட பொருளாளர் *பிரேம்* *குமார்* உட்பட ஐந்து பேர் மண்டபம் அருகே உள்ள மரக்காயர் பட்டினத்தில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் வெளியே காத்திருந்தோம் 10 மணிக்கு மேல் நான் பத்மநாபன் அலெக்ஸ் மூவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டோம். சிறிது நேரத்தில் *மாண்புமிகு துணை முதல்வர்* அவர்களை சந்தித்து நமது கோரிக்கையை மனுவை அளித்து விளக்கினோம். அதன் பின்னர் காரில் உட்கார்ந்த பின்னர் அவரிடம் தனியாகவும் சென்று நமது நிலையை விளக்கினோம். அவர் தலையை அசைத்தவாறு புன்னகையுடன் சென்றுவிட்டார். அதன் பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் நமது மாவட்ட ஆசிரியர் *முரளீஸ்வரன்* அவரும் தனியாக ஒரு மனுவை தயார் செய்து துணை முதல்வர் அவர்களிடம் நேரடியாக கொடுத்து நமது நிலையை விளக்கியுள்ளார்.
துணை முதல்வர் அவர்களை தனியார் கெஸ்ட் ஹவுசில் சந்திப்பு என்பது, அதுவும் அவர் கையில் நமது கோரிக்கை மனுவை நேரடியாக கொடுத்து ஓரிரு நிமிடம் விளக்கி கூறியுள்ளோம் இந்த சந்திப்பிற்கு உறுதுணையாக இருந்த இராமநாதபுரம் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளுக்கு என்னுடைய தனிப்பட்ட முறையில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்
இவன்
*MD மீனாட்சி சுந்தரம்* மாநில செயலாளர் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்
👍
1