Vck Social Media
Vck Social Media
February 22, 2025 at 02:35 PM
நேற்றை தொடர்ந்து இன்றும் இரண்டாம் நாளாக *வியட்நாமில்* நடைப்பெற்று வரும் *உலக தமிழர் மாநாட்டில்* தலைவர் *எழுச்சித்தமிழர்* அவர்கள் பங்கேற்று மலர் மற்றும் *V One எனும் OTT இணையதளத்தை* வெளியிட்டு சிறப்புரையாற்றினார்கள்... நிகழ்ச்சியில் தலைவர் *எழுச்சித்தமிழர்* அவர்களுக்கு *புத்தர் சிலை* ஒன்று பரிசளிக்கப்பட்டதை தனது முகநூல் பக்கத்தில் பெருமையுடன் பதிவு செய்திருந்தார்... மேலும் பல துறைகளில் சாதனை புரிந்திருக்கும் உலக தமிழர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்... தனது உரையில், தமிழர் எனும் அடையாளத்திற்கு சொந்தக்காரர் என்பதற்காக மட்டும் ஒரு சாதி வெறியரையோ, மதவாதியையோ, இன வெறியரையோ கொண்டாடி விட முடியாது, தமிழ் மொழியின் மீதான பற்று முக்கியம்தான், இன உணர்வு வேண்டும்தான், ஏனெனில் அது நமக்கிடையிலான ஒரு பிணைப்பை உருவாக்க மட்டுமே, நமது உறவை பலப்படுத்த மட்டுமே, நமக்கிருக்கும் ஆற்றலை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்வதற்காகத்தான் என்று கூறினார்.... பிறமொழி பேசுபவர்கள் அனைவரையும் ஒரே தராசில் நிறுத்தி சந்தேகப்பட முடியாதென்றும், அவ்வாறு செய்தால் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும் என்று குறிப்பிட்டு, மொழி மீதான பற்றென்பது, நம்மை வலுப்படுத்தும் சாதனமாக இருக்க வேண்டுமே ஒழிய, மற்றவர் மீது வெறுப்பை போதிக்கும் கருவியாக என்றும் ஆகிவிட கூடாது என்று எச்சரித்தார்... நிறைவாக, தமிழர்கள் வெறுப்பரசியலில் சிக்கிக் கொள்ளாமல், மற்ற நாடுகளுக்கு சென்று அவர்களது மொழியை கற்றுக்கொண்டு, அங்கே வாழும் சக தமிழர்களுக்கும் அந்நாட்டவர்க்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும் முதலீட்டாளர்களாக இருக்கிறார்கள் என்று பெருமையுடன் பதிவு செய்தார். மேலும், தமிழ்நாட்டில் மட்டுமின்றி, போரின் கோர பிடியில் சிக்கி இன்று மீண்டிருக்கும் ஈழ மண்ணில் அம்மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் வழியில் நமது செல்வந்தர்கள் செயல்பட வேண்டும் என்ற ஆலோசனையுடன், அது போன்ற திட்டங்களை வலுப்படுத்தும் ஓர் தளமாக இம்மாநாடு அமைய வேண்டும் என்று கூறி, தனது உரையை நிறைவு செய்தார்...
❤️ 1

Comments