Captain News & TV
Captain News & TV
February 2, 2025 at 01:53 PM
புரட்சிக் கலைஞர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு, இலங்கையில் உள்ள நிதர்சன் சிற்ப ஆலயத்தில் இருந்து அவரது புகைப்படத்துடன் கூடிய தேர் ஒன்று தத்ரூபமாக, கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் தமிழ் சொந்தங்கள், புரட்சி கலைஞர் பத்மபூஷன்  கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு, பெருமை சேர்க்கும் வகையில், அவரின் புகைப்படத்துடன் இந்தத் தேரை சிறப்பான முறையில் வடிவமைத்து திறப்பு விழாவை நிகழ்த்தியுள்ளனர். இந்த தேர் விரைவில் கேப்டன் ஆலயத்தில் நிறுவப்பட உள்ளது என்கிற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன். திரு. ஸ்தபதி கந்தசாமி இளங்கோவன் மற்றும் அந்த குழுமத்திற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக பணிவான வணக்கங்களையும் நன்றிகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் இருந்தபோதும், மறைந்தபோதும், தமிழர்களின் மீது அவர் கொண்ட அளவுக்கடந்த பற்றும் மரியாதையும் உலகறிந்த உண்மையென்றே சொல்லலாம். இந்தத் தேரை உருவாக்கிய அனைத்து இலங்கை தமிழ் சொந்தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இந்த தேர் திறப்பு விழாவில் நேரலையில் அவர்களோடு கலந்து கொண்டேன். இந்த நாளை என் வாழ்வில் மிகப்பெரிய ஒரு பெருமைக்குரிய நாளாக நான் கருதுகிறேன். "தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா! "இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே" "வீழ்வது நாமாகிலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்" -தேமுதிகபொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் #srilanka #colombo #captainvijayakanth #premalathavijayakanth #captainaalayam
❤️ 👍 7

Comments