BIBLEVOICE77
BIBLEVOICE77
February 10, 2025 at 01:29 AM
*பாத்திரமாயிருக்கிறான்* *15.அதற்கு கர்த்தர்; நீ போ. அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.* *16.அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.* (அப்போஸ்தலர் 9:15 - 16) இந்தப் பகுதியில் எருசலேமில் உள்ள கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தினால் சவுல் தேவனுக்கென்று பயன்படுத்தக்கூடிய புதிய பாத்திரமாக மாறுகிறார். இது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது காரணம் ஸ்தேவான் இரத்த சாட்சியாக மரிக்கும்போது உடன் சவுல் இருந்தார். பின்னர் எருசலேமில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களையும் துன்பப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் இன்னும் அநேக பேரை துன்பப்படுத்துவதற்கென்று பயம் படுத்துவதற்கு என்றும் தமஸ்குவில் உள்ள ஜெபஆலயத்தில் நிருபங்களை வாங்க செல்கிறார். தமஸ்க்கு போகிற வழியில் தேவன் சவுலுக்கு தரிசனமானார் இந்த தரிசனத்தின் மூலமாக தேவனை அறிந்து கொண்டார். இது சவுலின் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதன் பின்பாக சவுலின் கண்கள் இருளடைகிறது அவரின் கண்ணை மீண்டும் சரி செய்வதற்கு தமஸ்க்குவில் உள்ள அனனியா என்னும் ஒரு சீஷன் கொண்டு தேவன் பயன்படுத்துகிறார் அப்பொழுது உரைக்கப்பட்ட வசனமே இரண்டு வசனம். முற்காலத்தின் கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தின சவுல் இப்பொழுது பிரசங்கம் செய்ய ஆரம்பிக்கிறார் ஆண்டவராக இயேசு கிறிஸ்துவை குறித்து சுற்றி இருக்க ஜனங்களால் நம்ப முடியவில்லை. கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே நம்முடைய வாழ்வில் அநேகர் நபரை நம் சந்திப்போம் கிறிஸ்தவர்களை வெறுக்கிற நபர்கள் அவர்களை தேவன் தன்னுடைய திட்டத்திற்காக பயன்படுத்துவார் என்பது சவுலுடைய வாழ்க்கை நமக்கு சாட்சியாக அமைகிறது. ஆமென்
❤️ 1

Comments