
BIBLEVOICE77
February 18, 2025 at 02:45 AM
*வித்தியாசமுமிராதபடி*
*விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார்.*
(அப்போஸ்தலர் 15:9)
நாம் இந்த அதிகாரங்களை வாசிக்கும்போது எருசலேம் உள்ள விசுவாசிகளுக்கும், பவுலுக்கும் மிகத் தர்க்கங்கள் உண்டாகிறது.
காரணம் யூதர்கள் காலத்தில் விருத்தசேதனம் செய்வது அவசியமாக இருந்தது.
அது அன்றைய கால ஆபிரகாம் மூலம் தேவன் சொல்லப்பட்ட கட்டளையாக இருந்தது அதைத் தொடர்ந்து இஸ்ரவேல் மக்களுக்கும் மோசே நியாயப்பிரமாணம் விருத்தசேரும் செய்ய வேண்டும் என்று பிரமாணமாக இருந்தது.
இதனால் இரு வேறு மக்களுக்கும் தர்க்கங்கள் உண்டாகி இதற்கான முடிவை அப்போஸ்தலமாகிய பேதுருவிடத்திலும்,சீஷர்களிடம் கேட்பதற்கென்று கூட்டத்தினை கூட்டுகிறார்கள்.
அப்பொழுது அப்போஸ்தலாகிய பேதுரு சொன்ன வசனங்களே இது.
காரணம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கூட இருந்த 12 சீஷர்களின் பேதுரு பிரதானமானவர் இருப்பினும் புறஜாதி மக்களுக்கும் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும் என்பது தேவன் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளும் போது அவர்கள் கட்டளையாக கொடுத்திருந்தார் அதன் அனுபவத்தை பேதுரு பெற்றுக் கொண்டார் என்பதை நம் அப்போஸ்தலர் 10 அதிகாரத்தில் சொல்லப்பட்டதை காண்கிறோம். தேவனை விசுவாசிக்கிற எந்த நபரும் வித்தியாசம் காணாமல் அனைவரையும் சமமானவர் என்பதை தேவன் நமக்கு காண்பிக்கிறார்.
இரு வேறு விசுவாசிகளுக்கு இருந்த தர்க்கத்திற்க்கு இந்த கூட்டத்தின் மூலம் முடிவு பெற்றது.
இந்த பகுதி நமக்கு சாட்சியாக அமைகிறது.
ஆமென்
❤️
1