ஆ..பக்கங்கள்
ஆ..பக்கங்கள்
February 18, 2025 at 04:44 AM
எப்போதும் சிறுவர்களின் ஆரவாரம் நிறைந்தும், கிரிக்கெட் பந்து மட்டையில் படும் ஓசையில் திளைத்தும், ராமு, பாபு ஓட்டப்பந்தயம் நடந்துகொண்டும், அவ்வப்போது ராதா கல்யாணத்துக்கான உஞ்சவ்ருத்தி கோஷ்டி நடந்துவரும் தெரு இது. 1970-90 வரை ரம்யமான நிகழ்வுகளைக் கண்டுவந்த தெரு இன்று, வீடுகள் இடிந்து, ஆள் அரவமற்ற, கைவிடப்பட்ட தன் நிலையைக் காட்டியபடி நிற்கிறது. இந்தத் தெருக்களில் வாழ்ந்தவர்களில் பலர் மடிந்து போயினர். அந்த மக்கள் வாழ்ந்த அக்கிரஹார வாழ்க்கைக்கு மௌன சாட்சியாக நிற்கிறது இந்தத் தெரு. 'நெய்வேலிக் கதைகள்' தொகுப்பில் 'பக்கு', 'ராணி', 'பால் வாய்ண்டு வரேன்', 'தாஸன்', 'கொலு', 'பாட்டு கிளாஸ்' என்று பல கதைகள் நிகழ்ந்த இடம்: நெய்வேலி டவுன்ஷிப் பிளாக் 2, திருநெல்வேலி சாலை ( வ.உ.சி.தெரு). பி.கு.: ராமு, பாபு - யார் என்பதை அறிய 'நெய்வேலிக் கதைகள்' வாங்கி வாசிக்கவும்.
😢 👍 3

Comments