
Kani Maths (www.KaniMaths.com)
February 27, 2025 at 02:37 AM
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் .
Today's (27.02.2025) School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால்: அறத்துப்பால்
அதிகாரம்..
மெய்யுணர்தல் :
குறள் 354:
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு
விளக்கம்:
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.
பொன்மொழி :
1) அறிவில் முதலீடு செய்வது சிறந்த வட்டியைக் கொடுக்கும்
2) கல்வி இல்லாத குழந்தை.. சிறகு இல்லாத பறவை போன்றது
பழமொழி :
All things come to those who wait.
பொறுத்தார் பூமி ஆள்வார்
பொது அறிவு :
இந்திய கூட்டுறவின் தந்தை யார் ?
விடை : பிரடெரிக் நிக்கல்சன்.
முக்கியச் செய்திகள் :
மாநிலச்செய்தி:
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு
உள்நாட்டுச்செய்தி:
சி பி எஸ் இ, ஐ சி எஸ் இ, ஐ பி. பள்ளிகளில் தெலுங்கை கட்டாய மொழியாக அறிவித்தது தெலங்கானா அரசு!!
உலகச்செய்தி:
அமெரிக்காவில் ரூ.43.55 கோடி முதலீட்டில் தொழில் தொடங்கினால் தங்க விசா வழங்கப்படும் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு!!
விளையாட்டுச்செய்தி:
துபாய் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் போர்ச்சுகல் வீரர் நுனோ போர்ஜஸ் அபார வெற்றி..