
👫தமிழ்நண்பன் -உலக தமிழர் செய்திகள்
February 2, 2025 at 12:09 PM
*சென்னையில் பத்திரிகையாளர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்*
*அண்ணா பல்கழைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான வழக்கில், விசாரணை என்ற பெயரில், பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையிலும் சட்டத்திற்கு புறம்பாக அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்த சிறப்பு புலனாய்வு காவல்துறையின் (SIT) அராஜக நடவடிக்கையை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நேற்று (01.02.2025) மாலை 4 மணியளவில், மன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெருந்திரளான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராகவும், சட்ட விதிமீறலை கண்டித்தும் கண்டன குரல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.* 💪🏼 👇🏽