Tamil Nadu Congress
May 13, 2025 at 08:02 AM
https://x.com/SPK_TNCC/status/1922199186138923483?t=j2nAi5hxWi1HO9-5oOPRXQ&s=19
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயள்தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. அரசியல்வாதிகளால் தாங்கள் காப்பற்றப்படுவோம் என்று நினைத்திருந்த குற்றவாளிகளுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறது நீதிமன்றத்தித்தின் இந்த தீர்ப்பு.
கொடூர குற்றம் இழைத்தவர்களுக்கு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதியின் இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். இதுபோன்ற பெண்களுக்கு எதிரான குற்றமிழைத்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையானது, பெண்கள் பாதுகாப்பாக உணரவும், வன்கொடுமைகள் இல்லாத சமூகமாக உருவாக காரணமாக அமையும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து நமது சமூகத்தைப் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். குற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்து, தவறிழைத்தோருக்கு தண்டனை கொடுக்கும் என்ற எண்ணம் உருவானால், குற்றங்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும்.
👍
❤️
🙏
7