
Vck Social Media
June 11, 2025 at 07:28 AM
*மதச்சார்பின்மை காப்போம்* பேரணி குறித்து தலைவர் *எழுச்சித்தமிழர்* அவர்கள் முகநூல் நேரலையில் பகிர்ந்த முக்கிய தகவல்கள்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* சூன் 14, மதச்சார்பின்மை காப்போம்! மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியை நாம் திருச்சியில் ஒருங்கிணைப்பதற்கு முக்கிய காரணம் திருச்சி மாவட்டம் தமிழகத்தின் மைய பகுதி என்பதால் நான்கு முனையில் இருந்தும் அனைவரும் எளிதாக வந்துசேர இயலும்.
* தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் இருந்தும் காலை 10 மணிக்குள்ளாக அனைவரும் புறப்பட வேண்டும், பிற்பகல் 2 மணிக்கு எல்லாம் திருச்சி மாநகரை வந்து அடைய வேண்டும்.
* மாலை சரியாக 4:00 மணிக்கு எல்லாம் பேரணி துவங்கும்.
* TVS - டி.வி.எஸ் சென்னை - மதுரை நான்கு வழி நெடுஞ்சாலையில் பேரணி புறப்படும் இடமாகும். நகராட்சி பள்ளி அருகே பேரணி நிறைவடையும். பேரணிக்கான தூரம் 2.8 கிலோமீட்டர். (காவல்துறை அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் தூரம்)
* பேரணி துவங்கும் டிவிஎஸ் ரவுண்டான அருகே மேடை அமைத்து பேரணிக்கான துவங்கும் அறிவிப்புகள் அறிவிக்கப்படும்.
* பேரணிக்கு முன்பாக மூன்று அலங்கார ஊர்தி வாகனங்கள் (மேலும் வரும் அலங்கார வாகனங்கள்) அணிவகுத்து செல்லும்.
* அலங்கார ஊர்தி வாகனங்களை அடுத்து கோட் சூட் அணிந்தவர்கள் வருவார்கள்.
* அதற்கு அடுத்தபடியாக சீருடை அணிந்த பெண்கள் அணிவகுத்து வருவார்கள்.
* சீருடை அணிந்த பெண்களுக்கு பின்னால் இடைவெளி விட்டு நீலச்சட்டை அணிந்த சிறுத்தைகள் கட்டுப்பாடுடன் அணிவகுத்து வர வேண்டும்.
* பேரணிக்கு வரும் அனைவரும் கட்டாயம் நீலச்சட்டை அணிந்து வர வேண்டும்.
* முழக்கங்கள் அச்சிடப்பட்ட பதாகைகள் கொண்டு வர வேண்டும்.
* நமது கட்சி மப்ளர் அணிந்து வர வேண்டும்.
* டி-சர்ட் நீலக் கலரில் மட்டுமே அணிந்து வர வேண்டும்.
* திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
* பெண்களுக்கென்று பிரத்தேகமாக நடமாடும் கழிப்பறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
* நடமாடும் மருத்துவ உதவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
வாகனம் நிறுத்துமிடங்கள:
1. டிவிஎஸ் ரவுண்டானா அருகே வட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்தும் இடமாகும்.
2. மேற்கு மாவட்டங்கள் மற்றும் சில வட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நிறுத்தும் இடமாகும்.
3. பஞ்சப்பூர் என்னுமிடத்தில் தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்தும் இடமாகும்.
கட்டுப்பாடு:
பேரணிக்கு வரும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் ஒவ்வொருவரும் முழு கட்டுப்பாட்டோடு இருந்தால் தான் பேரணி வெற்றி பெறும், நாம் சொல்லும் நோக்கமும் முழு வெற்றி அடையும். எனவே கட்டுப்பாடு ஒழுங்கு என்பது மிக முக்கியமாகும்.
சூன் 14, திருச்சியில் சந்திப்போம்!
திருப்புமுனையை உருவாக்குவோம்!
தலைவர் முகநூல் உரை 11-06-2025 *சிதம்பரம்*

❤️
❤
7