Edus.lk 🎓
Edus.lk 🎓
June 5, 2025 at 04:37 AM
*🛑2026 ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்பை ஆரம்பிக்க நடவடிக்கை ; கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி!* ❇️நவீன உலகத்துடன் இணையக்கூடியவாறு எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்காக சகல பிரிவுகளையும் உள்ளடக்கியவாறு 2026ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்பை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ❇️அதன் பிரகாரம் தற்போது  பயன்படுத்தப்படும் பாடப்புத்தகங்களுக்கு பதிலாக தற்காலத்திற்கு ஏற்றவாறு மிகவும் அபிவிருத்தி அபிவிருத்தியடைந்த நவீன முறைகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறாேம் என கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ❇️பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (04)  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தினன் போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன, கல்வி மறுசீரமைப்பு திட்டங்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ❇️அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மிக வேகமாக மாற்றமடைந்து வரும் இந்த உலகின் காலத்தின் போக்குகளுக்கு இசைவாக கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்  என்பதனை ஏற்றுக்கொள்கின்றேன். ❇️விடயதானங்கள் மறுசீரமைப்பானது இலங்கையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமைகளுக்கமைய 8 வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறுகின்றது.  ❇️இதனை கருத்திற்கொண்டு தற்போதைய உலக போக்குக்கமைய அதனை செய்வது பொருத்தமானது. எவ்வாறாயினும் நாட்டின் சமூக பொருளாதார நிலவரத்தை கருத்திற்கொண்டு பௌதீக, மனித வளங்களை அபிவிருத்தி செய்து கல்வி மறுசீரமைப்பை 10 வருடங்களுக்கு ஒருதடவை செய்வது பொருத்தமானதாக இருக்கும் என்று அவதானிக்கப்பட்டுள்ளது.  ❇️அதேபோன்று தேவையானவாறு மறுசீரமைப்பு செய்ய வேண்டுமாயின் அதனை செய்ய வேண்டிய காலப்பகுதியை தீர்மானிக்க வேண்டும். இதேவேளை தற்போது மாணவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அதிக கல்வி சுமையை குறைக்கவும் மற்றும் சிறந்த கல்வி முறைமையை உருவாக்குவதற்காகவும் நவீன உலகத்துடன் இணையக்கூடியவாறு எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்காக தேவையான பின்னணிகளை ஏற்படுத்தக்கூடியவாறு சகல பிரிவுகளையும் உள்ளடக்கியவாறு 2026ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்பை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ❇️இதன்படி விடயதானங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு பிரிவு தொடர்பிலும் தற்போது கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன.  ❇️அத்துடன் தற்போது பயன்படுத்தப்படும் பாடப்புத்தகங்களுக்கு பதிலாக தற்காலத்திற்கு ஏற்றவாறு மிகவும் அபிவிருத்தியடைந்த நவீன முறைகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம். ❇️அதேபோன்று பாடத்திட்டங்கள் மறுசீரமைப்புக்கு அமைய மதிப்பீட்டு நடவடிக்கைகளிலும் மறுசீரமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன.  ❇️எழுத்து மூல பரீட்சை மற்றும் பரீட்சைகளால் அழுத்தங்களுக்கு உள்ளாகும் மாணவர்களை மீட்பதுடன், அவர்களை அபிவிருத்தியடைந்த உலகத்திற்கு அமைய  உருவாக்கும் வகையில் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படும் என்றார். 🌈 உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான அனைத்து சவால்களையும் எங்கள் கற்கை வசதிகள் எளிதாக்கும். இன்றே இணைந்திடுங்கள்! 📥 EDUS Tutor App-ஐ இன்றே பதிவிறக்கம் செய்யுங்கள்! 📲 Android: https://shorturl.at/JQwtf 🍎 iOS: https://shorturl.at/7GUdm 🎓 இன்றே அனுமதிகளை பெற்றிடுங்கள்! 👨‍🎓 இணைவதற்கு இங்கு கிளிக் செய்து சரியான விபரங்களுடன் விண்ணப்பிக்கவும் ✍️ : 🔗 https://shorturl.at/zjKq5 📱 மேலதிக விபரங்களுக்கு: 💁‍♂️ 📞 0777 123 330 🟢 WhatsApp: https://wa.me/94777123330 🌐 Web : https://edustutor.com 🎓Free Pastpapers : https://wiki.edustutor.com 🔔Channel : https://whatsapp.com/channel/0029Va5MKFD9xVJa6Rl4S218 👨‍🏫WhatsApp Group : https://chat.whatsapp.com/ILAebLLlBguJQkn4aGLAsG Edus உடன் இணைந்து, உங்கள் அறிவுப் பயணத்தை மேலும் உயர்த்துங்கள்! 🚀📖
Image from Edus.lk 🎓: *🛑2026 ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்பை ஆரம்பிக்க நடவடிக்கை ; கல்வி அமை...
👍 1

Comments