
TN Fact Check, Govt. of Tamil Nadu
19.2K subscribers
Verified ChannelSimilar Channels
Swipe to see more
Posts

False Rumor Claims Government is Providing Ramzan Fasting Rice at Rs. 23,750 per Kg


டாஸ்மாக்கில் மும்மொழி அறிவிப்பு என்று பரவும் நீக்கப்பட்ட பழைய புகைப்படம்!


நான் மன்னிப்பு கேட்கவில்லை. காவல்துறை நல்லபடியாக நடந்து கொண்டது - சாமியாடி சிவராமன்(மதுரை)

'பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் நிதி வாங்கிவிட்டு, அந்த நிதியை அதற்காக உபயோகப்படுத்தாமல், சர்வ சிக்ஷா அபியானில் வேலைக்குச் சேர்ந்த ஆசிரியர்களை வைத்து கணக்கு காண்பிப்பதாக' பாஜகவைச் சேர்ந்தவர்கள் மீண்டும் பொய்யான தகவலைப் பரப்பியுள்ளனர். ஒன்றிய அரசின் பி.எம் ஸ்ரீ இணையதளத்தில், தமிழ்நாட்டில் 34 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மட்டுமே பி.எம் ஸ்ரீ பள்ளிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நிலையில், மாநில அரசின் எந்தப் பள்ளிகளும் பி.எம் ஸ்ரீ பள்ளிகளாகச் செயல்படுத்தப்படாத நிலையில், ஒன்றிய அரசு எப்படி நிதி ஒதுக்கியிருக்கும். ஒதுக்கப்படாத நிதிக்குத் தமிழ்நாடு அரசு எப்படி போலியாகக் கணக்கு காண்பித்திருக்க முடியும். ஏற்கெனவே, செயல்படுத்தப்படும் 'சமக்ர சிக்ஷா' திட்டத்திற்கான ரூ.2,152 கோடி நிதியையே ஒன்றிய அரசு தற்போதுவரை ஒதுக்கவில்லை. இந்த திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு அரசு இணைந்து நிதியை வாங்கிவிட்டதாகப் பொய்யான தகவலைப் பரப்பி வருகின்றனர்.

PM SHRI திட்டத்துக்கான நிதி முழுவதும் ஒன்றிய அரசு வழங்குவதாகவும், மாநில அரசு எந்த நிதியும் அளிக்கவில்லை என்று அண்ணாமலை சொன்ன தவறான தகவல். PM SHRI நிதி முழுவதும் ஒன்றிய அரசு வழங்குவதில்லை. 60:40 என்ற அடிப்படையில் 60% ஒன்றிய அரசும், 40% மாநில அரசும் பங்கிட்டுக் கொள்கின்றன. (திட்டத்தின் மொத்தத் தொகை - ரூ27,360 கோடி, ஒன்றிய அரசு பங்கு ரூ18,128 கோடி) இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் 14,500 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும். இதில், ஒன்றிய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளும் அடங்கும். இத்திட்டத்துக்கான ஒன்றிய அரசின் 60% பங்கும் 5 வருடங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 2022 - 2023 முதல் 2026 - 2027 வரை மட்டுமே நிதியுதவி வழங்கப்படும். அதன் பின்னர் அந்த பள்ளிகளுக்கான முழு செலவுகள் அனைத்தையும் அந்தந்த மாநிலங்களே பார்த்துக்கொள்ள வேண்டும். PM SHRI பள்ளிகளுக்கு முழு நிதியும் ஒன்றிய அரசு வழங்குகிறது, இத்திட்டத்தின் கீழ் 16,000 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும் என்று அண்ணாமலை சொன்னது தவறான தகவல்.

தஞ்சைப் பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகளைத் திணிப்பதாக மீண்டும் பரவும் வதந்தி!