கல்விச்சுடர் / KALVICHUDAR WhatsApp Channel

கல்விச்சுடர் / KALVICHUDAR

866 subscribers

About கல்விச்சுடர் / KALVICHUDAR

ALL NEWS AT ONE PLACE Educational News, Employment News, Proceedings, Study Materials, Question papers, G.O, R.H List, Regularisation Orders.

Similar Channels

Swipe to see more

Posts

கல்விச்சுடர் / KALVICHUDAR
கல்விச்சுடர் / KALVICHUDAR
2/7/2025, 3:09:57 PM

மே 4-ம் தேதி நீட் UG தேர்வு

❤️ 1
Image
கல்விச்சுடர் / KALVICHUDAR
கல்விச்சுடர் / KALVICHUDAR
2/7/2025, 11:30:16 AM

> *🤳Kalanjiyam Mobile App New Update* *👉DOWNLOAD Link Attached!* _Version 1.21.0_ _Updated on 06/02/2025_ ❓What's New? 1. GPF Validation and date Formates are updated. 2. CPS Notes year updated. 3. Last 10 Recent Activity enabled for Employee. http://www.kalvichudar.com/2025/02/kalanjiyam-mobile-app-new-update-direct.html

கல்விச்சுடர் / KALVICHUDAR
கல்விச்சுடர் / KALVICHUDAR
2/9/2025, 9:24:01 AM

> *🔥👉தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளராக மருத்துவர் சந்திர மோகன் அவர்கள் நியமனம்* http://www.kalvichudar.com/2025/02/38.html

கல்விச்சுடர் / KALVICHUDAR
கல்விச்சுடர் / KALVICHUDAR
2/9/2025, 9:15:49 AM

*தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் திருமதி.மதுமதி அவர்கள் மாற்றம். சுற்றுலா & பண்பாட்டு துறையின் செயலாளர் மருத்துவர் திரு.சந்திர மோகன் அவர்கள் நியமனம்.*

கல்விச்சுடர் / KALVICHUDAR
கல்விச்சுடர் / KALVICHUDAR
2/6/2025, 11:38:16 PM

_*ஆசைகளுக்கு தான்*_ _*எதிர்காலம் தேவை .*_ _*ஆனந்தமாக வாழ்வதற்கு*_ _*நிகழ்காலம் போதும் .*_ _அமைதியாய் இருப்பதற்கும்,_ _மௌனமாய் இருப்பதற்கும்,_ _நிறைய வித்தியாசம் இருக்கின்றது._ _*நீ புரிந்து கொண்டாய் என்பதற்காக உன்னுடன் இருக்கும் எல்லாரும் புரிந்து கொண்டார்கள் என்று அர்த்தமல்ல, இங்கு திறக்க முடியாத பூட்டுகள் பல இன்னும் இருக்கின்றன.*_ _*நேற்று தேவைப்பட்டார்கள் என்பவர்களை விட/, நாளை தேவைப்படுவார்கள் என்பவர்களுக்கே இன்று முக்கியத்துவம் அதிகம்.*_ _*ஒருவரின் செயல் பிடிக்கவில்லை என்றால், அவர்களைப் பார்த்து கோபப்படுவதை விட அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படிப்படியாக குறைத்துக் கொள்வதே நல்லது.*_ _மனிதர்கள் கற்றுத்தரும் பாடத்தை கற்றுக் கொண்டாலே வாழ்க்கையில் தேர்ச்சி அடைந்து விடலாம்._ _*"வாழ்க்கை"*_ _*அர்த்தம் தேடிக்கொண்டிருப்பதற்கல்ல,*_ _*அனுபவிப்பதற்கு.*_ _*வாழ்வை விட ஒரு சொர்க்கம் வேறெங்கும் இல்லை. வாழ்வை அனுபவித்து வாழ்.*_ _வாழ்க்கை மிகவும் ஆதரவானது,_ _மிகவும் அன்பானது._ _நாம் தான் அதற்கு ஒருபோதும் இடம் கொடுப்பதில்லை._ _*நாம் எப்போதும் அதை நம் வழியில் வலிந்து திருப்ப முயல்கிறோம்.*_ _*அதுவோ சாத்தியமில்லை.*_ _*வாழ்க்கை நம்வழிக்கு வரமுடியாது. நாம்தான் வழ்வின் வழியில் போக வேண்டும்.*_ _வாழ்க்கை என்றுமே இனிக்கும்_ _இனிப்பை போல தான்.._ _அதை ரசித்து சுவைக்_ _தெரிந்திருந்தால்._ _*எல்லாமே முடிந்து விட்டது என்று ஒருபோதும் மனச்சோர்வில் இருக்காதீர்கள்.*_ _மனிதர்களின் வரம்பை மீறி பல விசயங்கள் இறைவனின் கைகளில் உள்ளது._ _*உங்களைப் பற்றி யார் என்ன கணக்கு போட்டால் என்ன ? நம் கணக்கு இறைவன் கையில்.*_ _கடவுளின் அருள் காப்பீடு போன்றது. அது உங்களுக்குத் தேவையான நேரத்தில் எந்த வரம்பும் இல்லாமல் உதவும்._ _*அவரின் தெய்வீக ஆற்றல் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் உங்களை காத்து நிற்கும். என்றும் அவர் பாதம் பணிந்திருங்கள்.*_

🙏 2
கல்விச்சுடர் / KALVICHUDAR
கல்விச்சுடர் / KALVICHUDAR
2/9/2025, 9:15:52 AM
Image
கல்விச்சுடர் / KALVICHUDAR
கல்விச்சுடர் / KALVICHUDAR
2/11/2025, 11:37:39 AM

> *🔥👉Retirment Date -க்கும் Increment Date -க்கும் இடையில் காலாண்டு (மூன்று மாதம்) இருப்பின் ஓர் ஊதிய உயர்வு வழங்க அனுமதிக்கும் அரசாணை* http://www.kalvichudar.com/2025/02/retirment-date-increment-date.html

கல்விச்சுடர் / KALVICHUDAR
கல்விச்சுடர் / KALVICHUDAR
2/10/2025, 2:04:53 AM

> *🙏பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2025* http://www.kalvichudar.com/2025/02/10022025.html

கல்விச்சுடர் / KALVICHUDAR
கல்விச்சுடர் / KALVICHUDAR
2/7/2025, 12:13:58 AM

> *_🙏பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.02.2025_* http://www.kalvichudar.com/2025/02/07022025.html ❖ ── ✦ ──『✙ ✙』── ✦ ── ❖ > *_🎥பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு மறுப்பது ஏன்? அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கேள்வி?_* *வீடியோ* https://kalvichudarvideos.blogspot.com/2025/02/blog-post.html

கல்விச்சுடர் / KALVICHUDAR
கல்விச்சுடர் / KALVICHUDAR
2/6/2025, 12:31:18 PM

*10 இலட்சம் அரசு ஊழியர் - ஆசிரியர் - பொதுத்துறைப் பணியாளர் குடும்பங்களின் வாழ்வாதார நம்பிக்கையைப் பாடையில் ஏற்றி, Pension நாடகமாடும் திமுக!* _✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_ 2003-ல் தாம் பறித்த பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான வல்லுந‌ர் குழுவை, தொடர் காத்திருப்புப் போராட்டங்களின் காரணமாக 22.02.2016-ல் அமைத்தது அப்போதைய அஇஅதிமுக அரசு. பல்வேறு இழுபறிகளுக்குப் பின்னர் 7 முறை காலநீட்டிப்பு செய்யப்பட்டு இறுதியாக 27.11.2018-ல் வல்லுநர் குழு தனது அறிக்கையை அரசிடம் அளித்தது. 2021 ஏப்ரல் வரை ஆட்சியிலிருந்த அஇஅதிமுக இதில் அடுத்த கட்டமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழுவின் அறிக்கையையும் வெளியிடவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று போராட்டக் களந்தோறும் வந்து வாக்களித்ததோடே, 309-வது தேர்தல் வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த திமுகவின் விடியலரசு 2021-22 பட்ஜெட்டின் ஓய்வூதியம் தொடர்பான மானியக் கோரிக்கைக் கொள்கை விளக்கத்தில் வரிசை எண் 11-ல் வல்லுநர் குழு எனும் தலைப்பில் தனது அதிகாரப்பூர்வ முதல் பதிலை அளித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2024-25ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 4 ஆண்டுகளாக ஓய்வூதிய மானியக் கோரிக்கை கொள்கை விளக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் விடியலரசு பல்வேறு அதிரடி அச்சு மாற்றங்களைச் செய்து வந்தது. அதன் விபரம் பின்வருமாறு. . . . *2021-22 பத்தி எண்.11:* தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசு பணியாளர்கள் / சங்கங்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான முடிவுகளை மேற்கொள்ள அரசிற்கு பரிந்துரைக்க ஏதுவாக 2016 ஆம் ஆண்டில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையினை 27-11-2018 அன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. *2022-23 பத்தி எண்.12:* தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசு பணியாளர்கள் / சங்கங்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான *முடிவினை* மேற்கொள்ள *அரசிற்* பரிந்துரைக்க ஏதுவாக *2016-ஆம்* ஆண்டில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையினை 27-11-2018 அன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு *அது அரசின் தீவிர* பரிசீலனையில் உள்ளது. *2023-24 பத்தி எண்.9:* வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு *அரசுபணியாளர்கள்* / சங்கங்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான *சாத்தியக் கூறுகளை* ஆராய்ந்து, பொருத்தமான முடிவினை மேற்கொள்ள *அரசிற்கு* பரிந்துரைக்க ஏதுவாக 2016-ஆம் ஆண்டில் ஒரு வல்லுநர்குழு அமைக்கப்பட்டது. *இக்குழுவின் அறிக்கையானது* 27-11-2018 அன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு *அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.* *2024-25 பத்தி எண்.8:* வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசுபணியாளர்கள் / சங்கங்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான முடிவினை மேற்கொள்ள அரசிற்கு பரிந்துரைக்க ஏதுவாக 2016-ஆம் ஆண்டில் ஒரு வல்லுநர்குழு அமைக்கப்பட்டது. *இக்குழுவின் அறிக்கையானது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது.* ஒட்டுமொத்தமாகக் கடந்த 4 நிதிநிலை அறிக்கையில் விடியலரசானது தனது கொள்கை விளக்கக் குறிப்பேட்டினில், *அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. . . .* *அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது. . . .* *அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. . . .* *அறிக்கையானது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. . . .* என்று மாற்றி மாற்றி அச்சடித்துக் கூறிவந்ததே அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும், மின்வாரியம், போக்குவரத்து உள்ளிட்ட த.நா பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களையும் ஏமாற்றிக் காலத்தைக் கடத்தத்தான் என்பது, 04.02.2025ல் வெளியான தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீட்டு எண் 271ன் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஆம். 2016ல் அமைத்து 2018ல் இறுதியான பழைய ஓய்வூதியத் திட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையைப் பரிசீலித்து வருவதாக 2021 முதல் 2025 வரை 4 ஆண்டுகளாகக் கூறி வருடாவருடம் சட்டசபையில் மாற்றி மாற்றி வாசித்துக் காட்டிய கொள்கைவிளக்கக் குறிப்பிற்கே முரணாகவும், தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு நேர்மாறாகவும் OPS - CPS - UPS பற்றி ஆராய புதிதாக 3 நபர் அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது. PFRDAவில் ஒப்பந்தமிட்டு (பாதிப்புகளிருப்பினும்) பணிக்கொடையுடன் கூடிய NPSஐக்கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலையில், NPSன் அகோர வடிவமாக பாஜக கொண்டு வந்துள்ள UPSஐயும் சேர்த்து ஆராயப்போவதாக அறிவித்துள்ளது என்பது கொடுமையிலும் கொடுமையாக - துரோகத்தின் உச்சமாக அரசு ஊழியர்கள் கருதுகின்றனர். முன்னதாக, இடைநிலை ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கைக்காக - தேர்தல் அறிக்கையில் ஏற்றுக் கொண்ட ஊதியக் கோரிக்கைக்காக 1.1.2023ல் குழு அமைத்து 2 ஆண்டுகள் கடந்தும், கோரிக்கைக்கே தொடர்பில்லாத பட்டதாரி ஆசிரியர்களின் சங்கங்களையெல்லாம் அழைத்தும், புதிது புதிதாக சங்கங்களை உருவாக்கியும் அவர்களிடமும் கருத்துக் கேட்கிறோம் என்ற பெயரில் நீண்ட நெடிய நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில்தான் *ஆட்சியின் முழுமையான இறுதி நிதிநிலையறிக்கை சமர்ப்பித்து வரும் இந்நாள்களில்கூட தனது வாக்குறுதியை நிறைவேற்ற மனதின்றி மேலும் மேலும் காலங்கடத்தும் நோக்கோடே* (இடைக்கால நிதிநிலையறிக்கைகக்கும் 12 மாதங்களே உள்ள நிலையில்) 9 மாத கால அவகாசமளித்து இந்த OPS-CPS-UPSஐ ஆராயும் அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளது. அதுவும் மாநில அரசின் நிதி நிலையினையும் கருத்தில் கொண்டு ஆராய அக்குழு பணிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் போக்கு எவ்வாறு இருக்கும் என்பதற்கு இடைநிலை ஆசிரியர் ஊதியக் குழுவும், 9 மாதங்களுக்குள் குழு அறிக்கையைச் சமர்ப்பித்தாலும் அதன் முடிவை அறிவிப்பார்களா என்பதற்கும் கண்முன்னே வரலாறுகள் உள்ளன. ஒருவேளை தங்களது வரலாறுகளைப் பொய்ப்பித்து நல்ல தீர்வு கிடைக்க வழிவகை இருக்கிறதா என்றால், தாங்கள் போராட்ட மேடைதோறும் தேடிவந்து வாக்களித்த - தமது தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்ட வாக்குறுதிகளுக்கு நேர் மாறாக. . . . * Incentive முன் தேதியிட்டு இரத்து, * EL Surrender இரத்து, * SG Teacher Pay அழிப்பு * SG Teacher - BT Promotion இரத்து, * HM Promotion இரத்து, * TRB/TET Posting இழுவை, * Outsourcing நியமனம், * அரசுப்பணிகள் தனியார்மயம் * பணி நிரந்தரம் மறுப்பு etc., என்று விடியலரசின் அடுக்கடுக்கான விண்ணைமுட்டும் செய்கைகளால் விழி வியர்த்துப் போயுள்ள யாவருக்கும், நிதி நிலையினையும் கருத்தில் கொண்டு ஆராய வேண்டுமென பணிக்கப்பட்டுள்ள இக்குழுவின் முடிவு என்னவாக இருக்குமென்பதும் கண்முன் காட்சியாக நிழலாடிக்கொண்டுதான் இருக்கிறது. 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என திமுக தலைவர் பதவியேற்கும் போது, ஏதோ தானே முதலமைச்சர் ஆகிவிட்ட உணர்விலிருந்தோருக்கும் - அவர்களின் குடும்பங்களுக்கும் விடியலரசு இக்குழுவின் மூலம் உறுதிபட உணர்த்தியுள்ளது. . . . *'நஞ்சை உண்டுவிட்டீர்கள்; நாண்டு கொண்டு தொங்கத் தூக்குக்கயிற்றைத் தேடித்தருகிறேன் காத்திருங்கள்!'* என்பதேயன்றி வேறென்னவாக இருக்கக்கூடுமென்பதே அரசு ஊழியர்களின் உள்ளக்குமுறலாக உள்ளது. நம்பி வாக்களித்தோர் இப்படியென்றால் நம்பிக்கை காட்டி கூட்டி வந்த சங்கத் தலைமைகளில் சிலரோ இவ்வளவு நடந்தும் ஆட்சியாளர்கள் மீதான தமது 100% நம்பிக்கையில் துளியளவும் குறையவில்லையென கூட்டங்கூடி அறிவித்து வருகின்றனர். இவர்களது நம்பிக்கை அறைகூவல், 'எப்படியும் தூக்குக் கயிற்றைத் தேடித்தந்துவிடுவார் காத்திருங்கள்' என்பதாக உள்ளதே அன்றி உண்ட நஞ்சிற்கான முறிவு மருந்தாக இல்லவேயில்லை என்பதே கள எதார்த்தமாக உள்ளது. *நச்சு முறிவு மருந்து ஒன்றே!* *அஃது* *ஒன்றுபட்ட உறுதியான போராட்டமே!!* *அதுவரை,* *ஓய்வூதிய நாடகங்கள் தொடர்கதையே!!!*

Link copied to clipboard!