
Daily One Missionary Biography
January 23, 2025 at 12:22 AM
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚
✅ *ஜனவரி 23* ✅ *தமிழ் Tamil* 👍
🛐 *ஜோஹன் பிலிப் பெப்ரீஷியஸ் Johann Phillip Fabricius* 🛐
மண்ணில் : 22-01-1711
விண்ணில் : 23-01-1791
ஊர் : ஃபிராங்ஃபர்ட்
நாடு : ஜெர்மனி
தரிசன பூமி : இந்தியா
ஜோஹன் பிலிப் பெப்ரீஷியஸ் இந்தியாவில் பணியாற்றிய ஒரு ஜெர்மன் மிஷனரி. அவர் கீசன் பல்கலைக்கழகத்தில் சட்ட கல்வி பயின்றார், மற்றும் ஹாலே பல்கலைக்கழகத்தில் இறையியல் பட்டம் பெற்றார். 1739ஆம் ஆண்டில் கோபன்ஹேகனில் கர்த்தருடைய ஊழியம் செய்ய தகுதி பெற்ற பிறகு, அவர் இந்தியாவில் டிராங்கிபார் மிஷனுக்கு நியமிக்கப்பட்டார். எனவே 1740ஆம் ஆண்டில் டிராங்கிபாரை அடைந்த அவர் விரைவிலே தமிழ் மொழியை சிறப்பாக கற்றுக்கொண்டார். பின்னர் அவர் மெட்ராஸுக்குச் சென்று, அங்கு வேப்பரியில் உள்ள ஒரு சிறிய தமிழ் லூத்தரன் திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பை எடுத்துக்கொண்டார். அவருடைய 30 வருட ஊழியத்தில், சபை வளர்ந்தது மற்றும் பல ஆத்துமாக்கள் சபையில் சேர்க்கப்பட்டனர்.
ஜீகன்பால்க் மற்றும் சுல்ஸ் ஆகியோரால் முடிக்கப்படாத பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் தமிழ் மொழிபெயர்ப்பை முடிப்பதில் பெப்ரீஷியஸ் மிகவும் கவனம் செலுத்தினார். பொதுவான மக்களுக்கு எளிதில் புரியும்படி தற்போதுள்ள மொழிபெயர்ப்புகளை திருத்துவது அவசியம் என்று அவர் உணர்ந்தார். எனவே, ‘முத்து’ என்ற தனது நண்பரின் உதவியுடன் அவர் புதிய ஏற்பாட்டை திருத்தும் பணியை மேற்கொண்டார். இந்த மொழிபெயர்ப்பு பல ஆலோசனைகள் மற்றும் திருத்தங்களுக்குப் பிறகு முடிக்கப்பட்டு, 1766ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அவர் பழைய ஏற்பாட்டை மொழிபெயர்க்கத் தொடங்கினாலும், 1756ஆம் ஆண்டில் சங்கீத புத்தகத்தை மட்டுமே வெளியிட முடிந்தது.
பெப்ரீஷியஸ் ஒரு சிறந்த பாமாலை எழுத்தாளராகவும் இருந்தார். அவர் தனது சொந்த அனுபவங்களிலிருந்து பல பாடல்களை எழுதி இயற்றினார். சில பாடல்களை அவர் ஜெர்மன் மொழியிலிருந்து மொழிபெயர்த்தார். அவர் வெளியிட்டுள்ள 335க்கும் மேற்பட்ட தமிழ் பாமாலைகள் இன்றும் கிறிஸ்தவ திருச்சபைகளில் பாடப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், 1779 இல் முதல் தமிழ்-ஆங்கில அகராதியையும் பெப்ரீஷியஸ் வெளியிட்டார்.
பெப்ரீஷியஸின் ஊழியத்தில் சிரமங்கள் இல்லாமல் இல்லை. அரசியல் அமைதியின்மையின் கடினமான காலங்களில் அவர் ஊழியத்தையும், மொழிபெயர்ப்பதையும் தொடர்ந்து செய்தார். 1758 இல் பிரெஞ்சுக்காரர்கள் கோரமண்டல் மீது படையெடுத்தபோது, அவர் வசித்திருந்த வீடு அழிக்கப்பட்டது. அதனால் அவர் மெட்ராஸ் மற்றும் கடலூர் இடையே அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருந்தது. அத்தகைய குழப்பமான சூழ்நிலைகளில் அவருடைய சில மொழிபெயர்ப்புகளையும், மொழிபெயர்ப்புக்கு உதவியான பொருள்களையும் அவர் இழந்தார். இருப்பினும், சாமானிய மக்களுக்கும் வேதாகமம் கிடைக்க வேண்டும் என்ற அவரது ஆழ்ந்த வாஞ்சை முன்னோக்கி செல்ல அவரை தூண்டியது. கர்த்தரால் தனக்கு ஒப்புவிக்கப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்தபின், 1791ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி, தனது மீட்பரை அடைய இந்த உலகத்தை விட்டு சென்றார் ஜோஹன் பெப்ரீஷியஸ்.
🚸 *பிரியமானவர்களே, கடினமான காலங்களில் கர்த்தரின் மேல் உள்ள உங்கள் பக்தி எப்படி இருக்கிறது?* 🚸
🛐 *"ஆண்டவரே, கடினமான காலங்களிலும் உமது அன்பில் உறுதியுடன் இருந்து, உமது ஊழியத்தை வல்லமையுடன் தொடர்ந்து செய்ய எனக்கு உதவி செய்யும். ஆமென்!"* 🛐
*******
*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!
*******
"தினம் ஒரு மிஷனரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!
https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F
*******
🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏
*******
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
🙏
2