
Daily One Missionary Biography
January 24, 2025 at 01:02 AM
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚
✅ *ஜனவரி 24* ✅ *தமிழ் Tamil* 👍
🛐 *அந்தியோகியாவின் புனித இக்னேஷியஸ் St. Ignatius of Antioch* 🛐
மண்ணில் : கி.பி. 50
விண்ணில் : கி.பி 108
ஊர் : -
நாடு : சிரியா
தரிசன பூமி : அந்தியோகியா
ஆதி கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்காக துன்புறுத்தப்படுவதை விட பெரிய பாக்கியம் வேறுஒன்றுமில்லை என்று நம்பினர். கஷ்டங்களையும் துன்புறுத்தல்களையும் தாங்குவதில் அவர்களின் விடாமுயற்சி கிறிஸ்துவின் மீது அவர்கள் கொண்டிருந்த அன்புக்கு ஒரு சான்றாகும். அத்தகைய ஆதி கிறிஸ்தவர்களில் இக்னேஷியஸும் ஒருவர். மரணத்தை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும் கிறிஸ்துவை மறுக்காத ஒரு நல்ல கிறிஸ்துவின் போர்வீரர் அவர்.
அந்தியோகியாவின் புனித இக்னேஷியஸ், "ஆண்டவரை சுமப்பவர்" (bearing God) என்று பொருள்படும் இக்னேஷியஸ் தியோபோரஸ் என்றும் அழைக்கப்படுவார். சிறு வயதிலேயே அவர் கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். அவர் பாலிகார்ப் அவர்களுடன் புனித யோவானின் சீடராக இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் அந்தியோகியாவின் பிஷப்பாக நியமிக்கப்பட்டார். கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல் குறித்த பயத்திலிருந்து தனக்கு ஒப்படைக்கப்பட்ட மந்தையில் பலவீனமானவர்களை பலப்படுத்துவதற்கு அவர் அயராது உழைத்தார். புதிய ஏற்பாட்டில் பழைய ஏற்பாடு நிறைவேற்றப்படுகிறது என்பதை அவர் உறுதிப்படுத்தி பிரசங்கித்தார்.
கி.பி. 107 ஆம் ஆண்டில், ட்ரோஜன் பேரரசர் ரோமானிய தெய்வங்களை வணங்க கிறிஸ்தவர்களும் மற்றவர்களுடன் ஒன்றுபட வேண்டும் என்று கட்டளையிட்டார். இந்த கட்டளை அந்த ராஜ்ஜியம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களை சிலைகளுக்கு பலியிட கட்டாயப்படுத்தியது. அதற்கு கீழ்ப்படியாதவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. கிறிஸ்துவை மறுக்க மறுத்ததற்காக இக்னேஷியஸுக்கும் அவர்கள் மரண தண்டனை விதித்தனர். ஆகவே, படையினர் அவரை சங்கிலியால் கட்டி ரோம் நகருக்கு அழைத்துச் சென்றனர். அவர் பயணம் செய்தபோது, பிலதெல்பியா, சர்தை மற்றும் சிமிர்னா நகரங்களின் வழியாகப் பயணம் செய்தார். கிறிஸ்தவ திருச்சபையின் மூப்பர்களும், பிரதிநிதிகளும் நகரத்திலிருந்து நகரத்திற்கு அவருடன் சென்றார். இறுதியாக சிமிர்னாவில் அவர் தனது நண்பரான பாலிகார்பை சந்தித்தார்.
அந்த பயணத்தையும் கர்த்தரின் சேவைக்கு பயன்படுத்தினார் இக்னேஷியஸ். தனது பயணத்தில், கிறிஸ்துவில் உறுதியுடன் நிலைத்திருக்கவும், அவருக்கு உண்மையாக வாழவும் கிறிஸ்தவர்களை ஊக்குவிக்க ஏழு கடிதங்களை எழுதினார். இந்த கடிதங்கள் கிறிஸ்தவர்களை தவறான போதனைகளைப் பற்றி எச்சரித்தன, மேலும் வசனத்தில் உள்ள உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தெய்வீக வாழ்க்கையை வாழ வழிகாட்டின. ரோமில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு அவர் எழுதிய கடைசி கடிதத்தில், கிறிஸ்துவுக்காக தான் ஒரு இரத்தசாட்சியாக மரணிக்கும் பாக்கியத்தை நிறுத்த வேண்டாம் என்று அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். கிறிஸ்துவின் பரிபூரண சீடராக இருப்பதற்கு கிறிஸ்துவின் சாயலில் நடப்பதும், அவருடைய துன்பங்களில் அவரோடு பங்கெடுப்பதும் தான் சிறந்த வழி என இக்னேஷியஸ் நம்பினார். ரோம் நகரை அடைந்த பிறகு அவர் காட்டு மிருகங்கள் நிறைந்த விளையாட்டு மைதானத்திற்குள் வீசப்பட்டு கிறிஸ்துவுக்காக தனது உயிரை இழந்தார்.
🚸 *பிரியமானவர்களே, கிறிஸ்துவுக்கு உண்மையாக வாழ நீங்கள் மற்றவர்களை ஊக்குவிக்கிறீர்களா?* 🚸
🛐 *"ஆண்டவரே, என் துன்பங்களை சகித்து விசுவாசத்துடன் தொலைநோக்கு பார்வையை கொண்டிருக்கவும், உம்மில் மற்றவர்களை ஊக்குவிப்பதற்கான ஒரு கருவியாக இருக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்!"* 🛐
*******
*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!
*******
"தினம் ஒரு மிஷனரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!
https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F
*******
🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏
*******
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
❤️
👍
2