Daily One Missionary Biography
January 27, 2025 at 12:46 AM
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚
✅ *ஜனவரி 27* ✅ *தமிழ் Tamil* 👍
🛐 *புனித ஆரிஜென் Saint Origen* 🛐
மண்ணில் : ~ கி. பி. 185
விண்ணில் : ~ கி. பி. 253
ஊர் : அலெக்ஸாண்ட்ரியா
தரிசன பூமி : அலெக்ஸாண்ட்ரியா, சிசேரியா
அலெக்ஸாண்டிரியாவின் புனித ஆரிஜெனின் முழுபெயர் ஆரிஜெனிஸ் அடமெண்டியஸ். அவர் ஆரம்பகால மிகப்பெரிய கிறிஸ்தவ இறையியலாளர்களில் ஒருவர். அவருக்கு கிறிஸ்தவ கோட்பாடுகளோடு இலக்கியம் மற்றும் தத்துவத்தையும் கற்பித்த அவரது தந்தை லியோனிடெஸ் அவர்களால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். சிறுவயதிலிருந்தே ஒவ்வொரு நாளும் வேதவசனங்களை மனப்பாடம் செய்யப் பழக்கப்பட்ட ஆரிஜென், தேவைப்படும் போதெல்லாம் அவற்றை ஞாபகபடுத்திகொண்டு அறிக்கை செய்வார். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினதற்காக அவரது தந்தைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது, குடும்ப பொறுப்பை ஆரிஜென் ஏற்றுக்கொண்டார். அவரது பதினெட்டு வயதில் "காடெகெடிகல் ஸ்கூல் ஆஃப் அலெக்ஸாண்ட்ரியா" என்ற கிறிஸ்தவ இறையியல் பள்ளியில் கிறிஸ்தவ கொள்கைகளை கற்பிக்கும் 'காடெகிஸ்டாக' நியமிக்கப்பட்டார். அங்கு அவர் ஒரு கிறிஸ்தவ துறவியின் வாழ்க்கை முறையை பின்பற்றி எளிய வாழ்க்கை வாழ்ந்தார். வெறுங்காலுடன் நடந்து செல்லும் ஆரிஜென், தனது பெரும்பாலான நேரத்தை கற்பித்தல், உபவாசம் மற்றும் ஜெபம் ஆகியவற்றில் செலவிட்டார்.
பல்வேறு உள்ளூர் கிறிஸ்தவ சபைகளிடையே கோட்பாடுகளில் ஒருமித்த கருத்து இல்லாத ஒரு காலத்தில் ஆரிஜென் வாழ்ந்து வந்தார். எனவே அவர் கிறிஸ்தவத்தின் நம்பிக்கையை விளக்குவதற்காக வேதாகம விளக்க உரைகளையும் பிரசங்கங்களையும் எழுதத் தொடங்கினார். ஆரிஜென் எழுதிய "ஆன் தி ஃபஸ்ட் ப்ரின்சிபள்ஸ்" (முதல் கோட்பாடுகளின் மேல்) என்ற கட்டுரை கிறிஸ்தவ இறையியலைப் பற்றி முறைப்படுத்தப்பட்ட முதல் கோட்பாடுகளின் வெளிப்பாடு ஆகும். கிறிஸ்தவத்தின் சில பிரிவுகளில் உள்ள புராணக்கதைகளையும் கற்பனைகளையும் அவர் கண்டித்து, வேத வசனங்களின் அடிப்படையில் சரியான கிறிஸ்தவ முறையை அவர்களுக்கு காட்டினார். வேத வசனங்களின் அடிப்படையில் சரியான கிறிஸ்தவ முறையானது எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பதை அவர் காட்டினார். அதுமட்டுமல்லாமல், அவர் காடெகிஸ்டாக தனது வேலையை விட்டுவிட்டு, மத்திய தரைக்கடல், ரோம் மற்றும் அரேபியா பகுதிகள் முழுவதும் பயணம் செய்து, வேதவசனங்களை ஒரு முறையான வழியில் எவ்வாறு புரிந்துகொள்வது என்பதை மக்களுக்கு கற்றுக்கொடுத்தார். பெரும்பாலும் அவர் வேதத்தின் வெவ்வேறு பகுதிகளை ஒன்றிணைத்து ஒரு ஆழமான இறையியல் உருவாக்குவார். இருப்பினும், ஆரிஜென் கொண்டிருந்த வேதவசனங்களைப் பற்றிய புரிதல் அவருடன் வாழ்ந்தவர்களுடன் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆகவே அவருடைய போதனைகளை அவர்கள் மறுத்து, அவருடைய ஊழியத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தினார்கள்.
எனவே அவர் சிசேரியாவுக்குச் சென்று, அங்கு இளைஞர்களுக்கு இறையியலில் பயிற்சி அளிக்க கிறிஸ்தவ கல்வி மையங்களை அமைத்தார். மேலும், அவர் பொது விவாதங்களை நடத்தி, இறையியல் ரீதியாக சரியான பக்தி வாழ்க்கையை வாழ பலரை சம்மதிக்க செய்தார். இருப்பினும், டெசியஸ் பேரரசரின் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவர்கள் பரவலாக துன்புறுத்தப்பட்டனர். ஏறக்குறைய கி.பி. 250 இல், ஆரிஜென் கூட கைது செய்யப்பட்டு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தை கைவிட மறுத்ததற்காக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டார். இரண்டு வருட கடுமையான சிறைவாசத்திற்குப் பிறகு, மோசமாக காயமடைந்த தனது உடலை இந்த உலகில் விட்டுவிட்டு, பரலோக வாசஸ்தலத்தில் தனது இறைவனை அடைய சென்றார்.
🚸 *பிரியமானவர்களே, தேவனுடைய வசனத்தைப் பற்றிய உங்கள் ஞானத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்களா?* 🚸
🛐 *"ஆண்டவரே, உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். ஆமென்!"* 🛐
*******
*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!
*******
"தினம் ஒரு மிஷனரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!
https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F
*******
🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏
*******
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
🙏
1