
Hindu Munnani - Tamilnadu
February 15, 2025 at 01:19 PM
கலாச்சார விரோதமான
காதலர் தினத்தை எதிர்த்ததற்காக
சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் நள்ளிரவில் கைது…
ஆட்சியாளர்களின் கைப்பாவையாக செயல்படும்
கையாலாகாத காவல்துறை!!
சிவகங்கையில் பாரத கலாச்சாரத்திற்கு விரோதமான காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவகங்கை மாவட்ட பொதுச்செயலாளர் அக்கினிபாலா மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது தமிழக காவல்துறை.
தமிழகத்தில் பயங்கரவாத செயலை செய்யவும், அரசு கட்டுமானங்களை தகர்க்கவும், வங்கதேசத்தில் இருந்து ஊடுறுவி பதுங்கியிருந்த இஸ்லாமிய பயங்கரவாதியை அசாம் அதிவிரைவுப் படையும், ஆந்திர அதிவிரைவு படையும் கைது செய்துள்ளது.
இது குறித்து தமிழக உளவுதுறைக்கு ஒன்றுமே தெரியவில்லை, எள் முனையளவு தகவலையும் சேகரிக்க முடியவில்லை, தமிழக காவல்துறை ஒரு பயங்கரவாதியை கூட கைது செய்யவில்லை.
ஆனால் திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரமிப்பில் இருந்து காக்க போஸ்டர் ஒட்டியவர்களையும், துண்டு பிரசுரம் கொடுத்த சிறுவர்களையும் கைது செய்து தன் வீரத்தை காண்பித்துள்ளது தமிழக காவல்துறை...
தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சீமான் மீது 70 மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வழக்கிலும் பெயரளவு கைது நடவடிக்கை கூட இல்லை
ஆனால் கலாச்சார விரோதமான காதலர் தினத்தை எதிர்த்ததற்காக சிவகங்கை மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
என்னவோ சர்வதேச குற்றவாளியை கைது செய்து சாதனை படைத்ததை போல சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரிடையாக காவல் நிலையத்திற்கே வந்து காத்திருந்து நீதிமன்ற காவல் உத்தரவு (Remand) பெற்ற பிறகே காவல் நிலையத்தை விட்டு சென்று இருக்கிறார். அந்த வகையில் சில காவல்துறை அதிகாரிகள் சொத்தை வழக்கு போட்டாவது இந்து முன்னணி பொறுப்பாளர்களை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று தனிப்பட்ட வன்மத்துடன் செயல்படுகிறார்கள் என்று கருதவேண்டியுள்ளது.
தமிழகத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை கைது செய்யமுடியவில்லை. பல வழக்குகள் நிலுவையில் உள்ள நாம் தமிழர் சீமானை கைது செய்ய திராணி இல்லை. ஆனால் கலாச்சார சீரழிவை தடுக்க ஜனநாயகரீதியாக போராடிய இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலாவை மட்டும் நள்ளிரவில் கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளது தமிழக காவல்துறை.
தமிழக காவல்துறை நேர்மையாக செயல்படவில்லை. ஆட்சியாளர்களின் கைப்பாவையாக உள்ள கையாலாகத காவல்துறையை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது...
#karaikudi #feb14th #tnpolice #arrested #hindumunnani
👍
🙏
6