
Hindu Munnani - Tamilnadu
6.1K subscribers
About Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani is the organization started by Veerath Thuravi Shri. Ramagopalan to protect and develop
Similar Channels
Swipe to see more
Posts

கோயில் நிலத்தில் கல்லூரி கட்டுவது அவசியமா? அரசு நிலம் ஆயிரம் இருக்க, ஆலய நிலத்தை தாரைவார்க்க வேண்டிய அவசியம் என்ன? கபாலீஸ்வரர் கோவில் சார்பாக கல்லூரி அமைக்க கொளத்தூர் சோமநாத சாமிக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து கல்லூரி கட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு முன்பு நீதிமன்ற உத்தரவில் கோவில் சொத்து கோவிலின் உபயோகத்திற்கு மட்டுமே என்று கூறியுள்ளது. இப்போது சென்னை உயர்நீதிமன்றம் இந்த கருத்திற்கு முரணாக அந்த தடை உத்தரவை இப்போது தள்ளுபடி செய்துள்ளது. நீதிமன்றம் அதன் உத்தரவுகளில் இது போன்ற முரண்பாடு இருப்பது பல சந்தேகங்களை எழுப்பி வருகிறது. அரசு நிலம் பல்லாயிரம் ஏக்கர் இருக்கின்றன. அவற்றை உபயோகிக்காமல் விட்டு கோவில் நிலத்தை குத்தகைக்கு கொடுப்பதன் நோக்கம் என்ன? கோவிலுக்கு இடங்கள் நிலங்கள் தானமாக வழங்கியது அந்தந்த கோவிலின் பராமரிப்புக்காக மட்டுமே தவிர அதனை மற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கோ அல்லது அரசு எடுத்துக் கொள்வதற்கோ பக்தர்கள் தானமாக வழங்கவில்லை. மேலும் கல்வி, சுகாதாரம் நிர்வகிக்க வேண்டியது அரசின் கடமை. அதனை திருக்கோவில் மீது திணிக்க வேண்டாம். இதுபோல் கோவில் நிலங்களை இடங்களை குத்தகைக்கு எடுத்த அரசு துறை முறையாக சரியாக வாடகை/ குத்தகை பணத்தை செலுத்தியது இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இவ்வாறு துவக்கப்படும் கல்லூரியில் இந்து சமயம், ஆன்மீகம் குறித்தா, கற்பிக்கப் போகிறார்கள் என்ற கேள்வியை முன்னாள் நீதிபதிகள் எழுப்பி உள்ளனர் என்பதை சுட்டிக் காட்டுகிறோம். இதனை அரசும், நீதிமன்றங்களும் புரிந்து கொண்டு இத்திட்டத்தை கைவிட இந்து முன்னணி வலியுறுத்துகிறது... #மயிலாப்பூர் #கபாலீஸ்வரர்கோவில் #கோவில்இடம் #கல்லூரி #HighCourt #HinduMunnani

குன்றத்தில் இந்துக்கள் ஒன்று கூடியதால் சிவன் ராத்திரி விழாவை தடை செய்ததா தமிழக அரசு! தமிழக முழுவதும் சிவராத்திரி விழாவை அனைத்து சிவன் கோயில்கள் மற்றும் இதர கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சிவன் ராத்திரி விழாவை விரதமிருந்து தரிசிக்க பொதுமக்கள் தயாராக இருந்தனர். ஆனால் அனுமதி வாங்கவில்லை. இந்துக்கள் கோவிலில் இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே சட்டத்துக்கு புறம்பாக மதப் பிரச்சினை கொண்டு வந்தால் இந்துக்களின் வழிபாட்டை தடுத்து நிறுத்தலாமா? திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை தரிசிக்க பொதுமக்களுக்கு தடை விதித்தது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது வழிபாட்டு உரிமைக்கு எதிரானது. இந்து விரோத பாசிச திமுக வேண்டுமென்றே திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் விஷயத்தில் இந்துக்களுக்கு பாதகமாக செயல்படுகிறது. இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது... #mahasivaratri #thirupparangundram #திராவிடமாடல் #TNPolice #HinduMunnani


#சந்திரேசகரஆசாத் #ChandrashekharAzad #சான்றோர்தினம் #இந்துமுன்னணி “இவர் இறந்தப் பிறகும்கூட, எந்நேரமும் எழுந்து நம்மை துப்பாக்கியால் சுடுவார்” என, ஆங்கிலேய பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களுக்கு பயத்தை ஏற்படுத்திய மாவீரன். #சந்திரேசகரஆசாத் பலிதானம் இன்று (27.02.1931).


மதசார்பின்மை என்ற பெயரில் ஹிந்து மதத்தை சிலர் இழிவுபடுத்தி பேசுகிறார்கள். நான் ஹிந்து தர்மத்தை காப்பாற்றுவேன். - பவன் கல்யாண், துணை முதல்வர் ஆந்திர பிரதேஷ்.. தொடர்ந்து சனாதன தர்மத்தையும், ஹிந்து கலாச்சாரத்தையும் ஆதரித்து கருத்து கூறிவரும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணை இந்து முன்னணி மனதார பாராட்டுகிறது... #PawanKalyan #AndhraPradesh #DuputyCM #sanatandharma #HinduMunnani


மதசார்பற்ற அரசு என மார்தட்டிக் கொள்வதில் எத்தனை பித்தலாட்டம் மறைந்து இருக்கிறது - மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை #இந்துமுன்னணி #மதசாற்பற்ற #ரம்ஜான் #அரிசி #திராவிடமாடல் https://hindumunnani.org/read-news.php?news=1796


#தி_ஜானகிராமன் #Janakiraman #சான்றோர்தினம் #இந்துமுன்னணி பெரும்பாலும் சமூகப் பிரச்சினைகளை குறித்து பேசக் கூடிய, படைப்புகள் இயற்றிய, நவீன இலக்கிய எழுத்தாளர், தி.ஜானகிராமன் பிறந்ததினம் இன்று (28.02.1921).


#கே_ஆர்_ராமநாதன் #KR_Ramanathan #சான்றோர்தினம் #இந்துமுன்னணி பல இளம் தலைமுறை விஞ்ஞானிகளை உருவாக்கியவர், அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் முதலாவது இயக்குநராகப் பணியாற்றிய இயற்பியலாளர், கே.ஆர். ராமநாதன் பிறந்ததினம் இன்று (28.02.1893).


ரம்ஜான் நோன்புக்கு அரிசி!! மக்களே! உங்க கருத்து என்ன..? கமெண்ட்ல சொல்லுங்க..!! https://www.facebook.com/HinduMunnani.org/posts/1063610329136683 #Ramzan #CommentPlease #HinduMunnani #CMStalin


தமுமுக மத அடிப்படைவாதிகள் நிகழ்ச்சியில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலந்து கொண்டது - அதிர்ச்சி செய்தி தேனி உத்தமபாளையத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக (தமுமுக) அமைப்பின் சார்பில் நடைபெற்ற,இரத்ததான முகாமில், அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செங்கோட்டு வேலவன் கலந்து கொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்பது இஸ்லாமிய மத அடிப்படை வாதத்தை கையில் எடுத்துக் கொண்டு பல்வேறு விரும்பத்தகாத செயல்கள் செய்வது அதன் வாடிக்கை. இந்து இயக்கத் தலைவர்களின் கொலைகளிலும் அந்த அமைப்பினருக்கு தொடர்பு இருந்து, அந்த அமைப்பைச் சார்ந்த பல நபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. அந்த இயக்கத்தினர் குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டது குறித்து பத்திரிக்கை செய்திகள் வாயிலாக வெட்ட வெளிச்சமாகியுள்ளதை அனைவரும் அறிந்ததே. மேலும் தமுமுக ஆம்புலன்ஸ் சேவை என்ற பெயரில் சமூக சேவை முகமூடி அணிந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட இவர்கள் காவல்துறையில் பிடிபட்டுள்ளனர். தங்களுடைய குற்றச் செயல்களை மறைக்க, மக்கள் சேவை செய்வதாக மருத்துவ முகாம், இரத்ததான முகாம் போன்ற நிகழ்ச்சிகள் இந்த அமைப்பினரால் நடத்தப்படுகிறது. உத்தமபாளையத்திலேயே முஸ்லிம் பயங்கரவாத செயல் நடந்ததையும் நினைவு கூர்கிறோம். இந்நிலையில் உத்தமபாளையத்தில் தமுமுகவினரால் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரே கலந்து கொண்டதன் மூலம் இஸ்லாமிய அமைப்பினரின் குற்ற செயல்களை மறைப்பதற்கு காவல்துறை உதவுவதாக மக்கள் கருத இடமிருக்கிறது. இது போன்ற மத அடிப்படைவாதிகளை நிகழ்ச்சியில் கலந்து கொள்வது அவர் பொறுப்பேற்றிருக்கின்ற பதவிக்கு அழகல்ல. தமுமுகவினர் ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டால் காவல்துறை அதிகாரி எப்படி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே காவல்துறை அதிகாரிகள் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்க தமிழக காவல்துறை இயக்குநர் அறிவுறுத்த வேண்டும். மேலும் தன்னார்வமாக இஸ்லாமிய மத அமைப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அதிகாரிகளின் செயல்பாடு கண்காணிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்... #TMMK #உத்தமபாளையம் #TNPolice #HinduMunnani