கதம்பம்
கதம்பம்
February 13, 2025 at 05:01 PM
பூமிக்குள் ஓசையின்றி ஓடிக்கொண்டிருந்த தண்ணீர் மீது ஓர் இரும்புக் குழாய் வந்து இறங்கியபோது, தண்ணீர் மிரண்டுபோனது. மோட்டார் வைத்து மேலே இழுக்கப் பட்டபோது தண்ணீர் மயங்கிப்போனது. கண் விழித்துப் பார்த்தபோது அது ஒரு தொட்டிக்குள் அடைக்கப் பட்டிருந்ததைக் கண்டு அழுதது. ஆனால், அடுத்த நாள் விடிந்தும் விடியாத அழகிய அதிகாலைப் பொழுதில், அந்தத் தண்ணீரைக்கொண்டு நீ நீராடியபோது... அடடா யாரோ ஒரு புண்ணியவான் இவ்வளவு பாடுபட்டு, தன்னைக் கொண்டு ஒரு தேவதையைக் குளிப்பாட்ட வைத்துவிட்டானே என்று ஆர்ப்பரித்தது. அவனுக்கு என்ன கைமாறு செய்வது என்று நினைத்தபடியே, உன் மேனியை விட்டுப் பிரிய மனமின்றி இறங்கி ஓடி நீ வளர்க்கும் பூச்செடிகளுக்குப் பாய்ந்தது. அங்கே பூக்கும் பூக்களில் எல்லாம் தேன் ஆனது. காதலர் தின வாழ்த்துகள் 💗💐
❤️ 👍 👏 😂 5

Comments