
DMK Youth Wing
February 6, 2025 at 07:57 AM
ஒடுக்கப்பட்டோரில் ஒடுக்கப்பட்டோரான அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு அளித்து சமூகநீதியை விரிவு செய்தார் முத்தமிழறிஞர் கலைஞர். அவருடைய முடிவு சரியானதுதான் என்று சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது.
கலைஞர் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு அளித்தபோது அதை வரவேற்றும் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாதங்களை மறுத்தும் எழுதப்பட்ட நூல். தமிழின் மிக முக்கியமான எழுத்தாளரும் தலித் செயற்பாட்டாளருமான கவிஞர் ம.மதிவண்ணனின் இந்த நூல் உள் ஒதுக்கீடு குறித்த பல புரிதல்களை அளிக்கும்.
உள் ஒதுக்கீடு தொடரும் விவாதம் .- ம.மதிவண்ணன்
வெளியீடு : கருப்புப் பிரதிகள்
#வாசிப்போம்_யோசிப்போம்
❤️
👍
😂
19