தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்   Tamilnadu Government Pensioners
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் Tamilnadu Government Pensioners
January 18, 2025 at 02:49 AM
🌀 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் மேசையிலிருந்து..... 💢 மாண்புமிகு முதல்வரின் மௌனம் களைத்திட, மாபெரும் போராட்ட களம் காண்போம்... தோழர்களே, 🙏 🌎 கடந்த 13.12.2024 மற்றும் 14.12.2024 ஆகிய இரண்டு நாட்கள் தூத்துக்குடியில் நமது சங்கத்தின் 15ஆம் மாநில மாநாடு மிக எழுச்சிகரமாக நடைபெற்றது. மாநாட்டின் துவக்கவுரையாக இந்திய தொழிற்சங்க மையத்தின் அகில இந்திய செயலாளர் தோழர்.கருமலையான் அவர்கள் மத்திய, மாநில அரசுகளின் முதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகளும், சாமானிய மக்களைப்பற்றி கவலைப்படாத தன்மை நமக்கான உரிமைகளை நாமே போராடிப்பெற வேண்டிய தேவை உள்ளதெனவும் அத்தகைய போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஒன்றுபட்ட தலைமையேற்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார். அதே போல வாழ்த்துரை வழங்கிய தோழமைச்சங்க, தொழிற்சங்க தோழர்கள் இன்றைய தேவை ஒன்றுபட்ட போராட்டமே என்பதை வழிமொழிந்தனர். தமிழகத்தின் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எதிர்கால திசைவழியை மாற்றியமைக்கக்கூடிய வகையில் நமது கோரிக்கைகளை நிறைவேற்றுவது, நமது ஒன்றுபட்ட போராட்டமே என்பதை மாநாட்டின் விவாதங்கள் எடுத்துக்காட்டாக அமைந்தது. தமிழக அரசு சட்டமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியான கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து மௌனம் சாதித்து வருவது ஊழியர்களிடையே மிகுந்த கோபாவேசத்தை ஏற்படுத்தியுள்ளதை மாநாடு சுட்டிக்காட்டியது. 🌀 எனவே, கீழ்கண்ட கோரிக்கை தீர்மானங்களை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி ஆறுகட்ட போராட்ட இயக்க நடவடிக்கைகள் நடத்திடும் வகையில் அறைகூவல் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. ✅ நமது அறைகூவல் தீர்மானத்தின் முதல் போராட்ட இயக்கமான மாண்புமிகு முதல்வரின் மௌனம் களைக்கும் அனைத்து அலுவலகங்களில் ஆர்பாட்டம் வெகு சிறப்பாக காலை 6.30 மணியிலிருந்தே ஒரு சில மாவட்டங்களில் ஆர்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதை வலைதள பதிவில் பார்த்தபோதும் அன்றைய ஆர்பாட்ட முடிவில் மாவட்டங்களில் வந்துள்ள நடைபெற்ற இடங்களின் எண்ணிக்கைகளும், பங்கேற்ற தோழர்களின் எண்ணிக்கைகளும் இதை கட்டியம் கூறுகின்றன. 💢 2025 ஆம் ஆண்டு நமது கோரிக்கைகளை வென்றெடுக்கும் ஆண்டாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 🌎 தமிழ்நாடு அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 2021 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்ட ஆயத்த மாநாட்டில் காணொலியில் கலந்துகொண்டு பேசிய இன்றைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி வைப்பேன் என வாக்குறுதி அளித்தார். 💢 சட்டப்பேரவைத் தேர்தல் - 2021 தி.மு.க.தேர்தல் அவ்வறிக்கையில், *ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் நலன்* 💢 309. புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். 💢 310. தமிழக அரசு அலுவலர்களின் பணி தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க மாநில நிர்வாகத் தீர்ப்பாயமும் (STATE ADMINISTRATIVE TRIBUNAL) தலைமைச்செயலாளர் / துறைச் செயலாளர் / துறைத் தலைவர் தலைமையிலான கூட்டு ஆலோசனைக்குழுக்களும் மீண்டும் அமைக்கப்படும். 💢 313. தமிழகத்தில் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப்பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும். அவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமும் பணிக்கொடையும் வழங்கப்படும். 💢 314. அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பணிக்காலத்தில் இறந்தால் அவர்களது குடும்பத்தினர் தற்போது வழங்கப்பட்டுவரும் குடும்ப நலநிதி ரூ.3 இலட்சம் என்பது 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 💢 315. அ.தி.மு.க. அரசினால் பழிவாங்கும் நோக்கத்தில் வேலைநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் இயற்கை எய்தியிருந்தால் அவர்களது வாரிசுக்கு அரசு வேலை வழங்குவதோடு, குடும்ப நிவாரண நிதியாக ரூ.5 இலட்சம் வழங்கப்படும். 💢 318. அரசுப் பணியாளர் களுக்கான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தில் குடும்ப மருத்துவச்செலவு வரம்பை உயர்த்துவதுடன், அறுவை சிகிச்சைக்கு மட்டுமின்றி தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெறும் அனைத்து வகையான மருத்துவ செலவினங்களும் அடங்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மாற்றியமைக்கப்படும். போன்ற வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. ♨️அதை நம்பி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த நம்பிக்கையோடு தேர்தல் களத்தில் இந்த அரசுக்கு முழு ஆதரவையும் தெரிவித்தார்கள். தேர்தல் முடிவுகளில் கூட பல சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்குகளில் வெற்றியை பெற முடிந்தது. ஒரு மூத்த சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சர் கூட தேர்தல் முடிவுகளின் போது வெற்றிவாய்ப்பு கைவிட்டுப்போகும் சூழலில் தபால் வாக்குகளைப் பிரித்தவுடன் வெற்றி உறுதியானது. எனவே, கழகத்தோழர்கள் என்னை கைவிட்டாலும் கூட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்னை கைவிடவில்லை என தெரிவித்தார். 💢 அந்த அளவு இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்து காத்திருந்தோம். ஆட்சி அமைந்தவுடன் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டிற்கும், அதையடுத்து ஜேக்டோ- ஜியோ வாழ்வாதார கோரிக்கை மாநாட்டில் கலந்துகொண்டு “உங்களால் நான், உங்களில் நான், உங்களுக்காக நான்” என்றும் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நான் “மறக்கவில்லை, மறைக்கவில்லை, மறுக்கவில்லை” என தேன் தடவிய வார்த்தைகளால் நம்மை ஆறுதல் படுத்தினார். ஆனால், 14% DA நிலுவைகளை அறிவித்ததோடு, இனி வருங்காலங்களில் DA நிலுவையின்றி வழங்கப்படும் என்ற அரசாணையோடு தனது ஏனைய வாக்குறுதிகளை மறந்தே போனார். 💢 அதுமட்டுமின்றி, 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தொகுப்பூதிய ஊழியர்களை நிரந்தரம் செய்வேன் என்று சொன்னவர், மேலும் மருத்துவத்துறை, நிலஅளவைத்துறை, நகராட்சி மாநகராட்சித்துறை, பேரூராட்சித்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசாணைகள் 115, 34, 152, 10 என பல்வேறு அரசாணைகள் மூலமாக ஆயிறக்கணக்கில் தொகுப்பூதிய ஊழியர்களையும், வெளிமுகமை மூலமாகவும் பணி நியமனங்கள் செய்துவருகிறார். 💢 கடந்த 1982 ஆம் ஆண்டு தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட சத்துணவு ஊழியர்கள் கடந்த 40 ஆண்டுகால தங்களது இடையறாத போராட்டங்களினாலும், தொடர் முறையீடுகளினாலும் கண்ணீர் மற்றும் செந்நீர் வரலாறுகள் கொண்ட தங்களது இடையறாத பல்வேறு போராட்டங்களினால் கொஞ்சம், கொஞ்சமாக அந்த கொத்தடிமை கூலிமுறைகளிலிருந்து விடுபட்டுக்கொண்டு தற்போது சிறப்பு காலமுறை ஊதியத்தில் இருந்து கொண்டு எங்களுக்கு சிறப்பு வேண்டாம். காலை உணவுத்திட்டத்தை எங்களிடமே ஒப்படைத்து எங்களை முழுநேர ஊழியராக்கி முறையான காலமுறை ஊதியம் வேண்டும் என நரைகூடிய, தள்ளாத வயதிலும் கோரிக்கை நிறைவேராமல் பணி ஓய்வு பெற்று கூலி வேலை செய்தும் 100 நாள் வேலைத்திட்டத்திலும் தங்களது அந்திம வாழ்க்கையை கடத்திக்கொண்டுவருகிறார்கள். மீண்டும் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந 4-2) துறை, அரசாணை (நிலை) எண்.95, நாள் 16.12.2024 ன்படி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பணிபுரியும் காலியகவுள்ள 50% க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களில் 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் மட்டும் ரூ.3000/- தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 🌎 இந்தியாவில் New Pension, National Pension, Guarented Pension, Unified Pension என பல்வேறு பென்சன் புதிய பென்சன் திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும் அவைகள் அனைத்தும் Nil Pension என்பதை மறந்துவிடக்கூடாது. ♨️ தமிழகத்தில் PFRDA விலும் உறுப்பினராக்காமல் பழைய பென்சனும் வழங்காமல் எவ்வித பென்சன் திட்டமும் இல்லாமல் பென்சன் என்ற பெயரில் ஊதிய பிடித்தம் செய்யப்பட்டுவருகிறது. 💢 பல்வேறு மாநிலங்கள் பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் தங்களது அரசு ஊழியர்களுக்கு அறிவித்துவருகிறார்கள். ஒருசில மாநிலங்கள் Guaranted Pension, மத்திய அரசு Unified Pension தர முன்வந்துள்ளது. ஆனால் பல்வேறு புதிய பெயர்களில் மத்திய அரசும், சில மாநில அரசுகளும் பென்சன் திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும் அவையாவும் பழைய பயனளிப்பு ஓய்வூதியமாக இல்லாமல் ஏதாவது ஒருவகையில் நம்மிடமிருந்து ஊதிய பிடித்தம் செய்து, பெரு முதலாளிகளுக்கு ஊக வணிகத்தில் முதலீடு செய்திட வழிவகுக்கும் நோக்கத்திலேயே மத்திய, மாநில அரசுகள் உள்ளது என்பதை நாம் உணர வேண்டியுள்ளது. 💢 கடந்த ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத்தொகை என்பது நம்மைப்போன்ற நடுத்தர அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பெரிய தொகை என்பதை சொல்ல வேண்டியதில்லை. போராடிப்பெற்ற ஊதிய மாற்றத்தில் நிலுவைத்தொகையையும் போராடியே பெறவேண்டியுள்ளது என்பதுதான் வேதனையானது. 💢 நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டுமென்ற அவர்களின் நீண்ட நாளைய போராட்டம் நீதிமன்றத்தின் கதவுகளைத்தட்டி வழங்கிட தீர்ப்பு வழங்கப்பட்டும் இன்றுவரை அரசு மௌனம் சாதிக்கிறது. துறையை ஆணையம் என்ற பெயர்மாற்றம் செய்து ஆபாத்தான சூழலை உருவாக்குகிறது. ஏனெனில், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்தது, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்ற பெயர் மாற்றத்தினால் அந்நிறுவனத்தின் இன்றைய நிலையை நாம் அறிவோம். 💢 அந்த நிலை நெடுஞ்சாலைத்துறைக்கும் வந்துவிடக்கூடாது. துறையைக்காப்பாற்றும் நோக்கத்தில் அத்தோழர்கள் போராடி வருகிறோம். 💢 அரசுத்துறைகளில் உள்ள பணியிடங்களில் சுமார் 5 இலட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பாமல் உள்ளது. இதன் நோக்கம் இவ்வாறு அரசுத்துறைகளை நெருக்கடிக்கு உள்ளாக்கி மக்கள் மத்தியில் அரசுத்துறை என்றாலே செயலற்றது என்ற எண்ணத்தை உருவாக்கி அதன் மூலமாக தனியார்மயமாக்கும் நோக்கத்தில் அரசு முயற்சிக்கிறது என்பதை நாம் அறிவோம். 🌀 அதே சமயம் மாநிலத்தில் படித்து முடித்த இளைஞர்கள் அரசுப்பணிக்காக வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியல் 64.22 இலட்சம் என அரசே கூறுதிறது. அரசுப்பணி என்பது கேள்விக்குறியாகியுள்ளதால் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்வதை இந்தக்கால இளைஞர்கள் மறந்தே போனார்கள். அதையும் மீறி பல்வேறு வற்புறத்தல்களால் 64.22 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளார்கள். 2024 ஆம் ஆண்டு TNPSC மூலம் 75,000 பேர் மட்டுமே நிரப்பப்படுவார்கள் எனவும் அரசு அறிவித்துள்ளது. 🌀 இதனால் பல்வேறு துறைகளில் ஊழியர்கள் பணிச்சுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மக்கள்நலப்பணிகளும் முழுமையாக நடைபெறாமல் பாதிப்படைகிறது. 💢 எனவே, அரசுத்துறைகளை பாதுகாக்கவும், தனியார்மயக்கொள்ளையை தடுத்திடவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடவும் அரசு உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்பிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ✅ இந்த நேரத்தில் ஒரு விசயத்தை சொல்லியே ஆகவேண்டும். பல மாநிலங்கள் கடந்த 20 ஆண்டுகளில் பல நூறுகளிலும், ஒருசில ஆயிறங்களிலும் ஊழியர்களை பணி நியமனம் செய்துள்ளதாக புள்ளிவிபரங்கள் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 2003 லிருந்து சுமார் 5 இலட்சம் இளைஞர்கள் அரசுத் தேர்வாணையம் மூலம் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது கடந்த 2003 ஆம் ஆண்டு 1,76,000 அரசு ஊழியர், ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்யப்பட்டதும், சிறையிலடைக்கப்பட்டதும், நீதிமன்றங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டதும், அரசு குடியிருப்புகளிலிருந்து வெறியேற்றப்பட்டதும், என பல்வேறு அடக்குமுறைகளை அரசு கையாண்டாலும் அவைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வேலை நியமனத்தடைச்சட்டத்தை திரும்பப்பெற்றதன் பின்னனியை நாம் மறந்துவிடக்கூடாது. 💢 அரசுப்பணியிலிருக்கும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களை காப்பாற்றும் கடமை அரசின் கடமை என்பதை மருத்துவக்காப்பீட்டின் மூலம் அரசு கைகழுவி விட்டது. 🌎 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காப்பீட்டுத்திட்டத்தின் பெயர் Cashless Treatment-2016 ஆனால், இது ஒரு கட்டப்பஞ்சாயத்து திட்டமாக தற்போது நடைமுறையிலுள்ளது. எனவே, இத்திட்டத்தின் பெயரில் உள்ள Cashless என்பதை உத்திரவாதப்படுத்திட அரசே இத்திட்டத்தை ஏற்று நடத்திட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். ✅ எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தூத்துக்குடியில் கடந்த டிசம்பர் 13, 14 தேதிகளில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக இந்த அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் காத்திருந்து ஏமாந்து இனி பொறுமை காத்தது போதும், களம் காண்போம் என மாண்புமிகு தமிழக முதல்வரின் மௌனம் களைத்திட அறைகூவல் தீர்மானங்களை நிறைவேற்றி ஆறுகட்ட இயக்க நடவடிக்கைகளை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளோம். ♨️ 2025 போராட்ட ஆண்டாகவும், கோரிக்கைகளை வென்றெடுத்திடும் ஆண்டாகவும் அமைந்திடும் என உறுதியேற்போம். ♨️ ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல என்பதும், அதேசமயம் அது வெல்ல முடியாததும் அல்ல என்பதும் நாம் அறிவோம். ஏனெனில், நெருப்பாற்றில் நீந்தி வந்த மெழுகுவர்த்தி நாங்கள் என்று சொல்வது வெறும் அலங்கார, ஆணவமான வார்த்தைகளோ அல்ல. 💢 ஏனென்றால் 1988, 2003, 2016, 2019 போராட்டங்கள் அவ்வளவு எளிதான போராட்டங்கள் அல்ல. உண்மையில் நாம் நெருப்பாற்றில் தான் நீந்தி வந்தோம். ✅ 1984ல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆரம்பித்தபோது, நம்மை ஒரு சங்கமாகவே அங்கீகரிக்க தயங்கிய சகோதர அமைப்புகள் நாம் நடத்திய 10.02.1988 ல் நாம் நடத்திய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் நாம் தாடியோடு பிறந்த குழந்தை என்பதை தோழமைகளுக்கு உணர்த்தினோம். நாமும் உணர்ந்தோம். ♨️ ஒரு கூட்டமைப்பை உருவாக்குவதற்கு எத்தனை சிரமங்களை, வேதனைகளை அனுபவித்து இந்திய வரலாற்றில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்ட மாநிலத்தில் மாநில கவர்னர் ஆட்சியில் மாபெரும் போராட்டம் நடத்தி, இறுதியில் பேச்சுவார்த்தையும் நடத்தி அதில் உடன்படிக்கையும் ஏற்படுத்தி மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை 41 வருட கனவை நனவாக்கினோம். இது ஒரு பாராவில் எழுதக்கூடிய வாக்கியமல்ல, ஒரு வரலாறு. 💢 அதனால்தான் அவற்றை மீண்டும், மீண்டும் ஒவ்வொரு கூட்டங்களிலும் நினைவு படுத்திக்கொண்டே இருக்கின்றோம். இந்தியாவில் ஊதிய விகிதாச்சாரத்தில் கடைக்கோடி மாநில அரசு ஊழியர்களாக இருந்து நாம் அதிலிருந்து முன்னனி மாநிலமாக உயர்ந்தோம். அடுத்தகட்டமாக பொதுத்துறைக்கு இணையான ஊதியம் என்ற கோரிக்கைக்கு முன்னேறினோம். அதன் ஆரம்பமே மேம்படுத்தப்பட்ட ஊதியம் பெற்றோம். 🌎 ஆனால், தேசம் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு ஆளாகிக்கொண்டிருந்தது. ஆம், 1991ஆம் ஆண்டு புதிய பொருளாதாரக்கொள்கைளை அன்றைய மத்திய அரசு அமுல்படுத்தியது. உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என அடுத்தடுத்த தாக்குதல்கள் தொடுக்க ஆரம்பித்தன. காட் ஒப்பந்தங்களும், டங்கல் திட்டங்களும் அந்த கொடிய கொள்கைகளை அமுல்படுத்திட பட்டுக்கம்பளம் விரித்து வாய்ப்புகளை அறிமுகப்படுத்தின. வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுத்தன. மூன்று பத்தாண்டுகளில் இத்திட்டம் இந்த தேசத்தில் முழுமையாக அமுல்படுத்தப்படும் என அறிவித்தபோது அதன் பாதிப்புகளை அன்றைய முன்னோர்கள் வகுப்புகள், கூட்டங்கள், துண்டறிக்கைகள், சிறு புத்தகங்கள் என அடுத்தடுத்து நமக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். 💢 ஆனால், நாம் கட்டியிருந்த கோவணமும் களவாடப்படும் என்பதை அப்போது அரியவில்லை. அந்த அளவு நாம் போராடிப்பெற்ற உரிமைகள் களவாடப்பட்டு பறிக்கப்பட்டன. புதிய திட்டங்களுக்கான புதிய பணியிடங்கள் உருவாக்கமில்லை, பணி நியமனங்கள் இல்லை, துறைகளில் உள்ள பிரிவுகள் மூடப்பட்டு, துறைகள் சுருக்கப்பட்டன, பல்வேறு பணியிடங்கள் பறிக்கப்பட்டன, அரசு ஊழியர்களின் குரல்வளை நெறிக்கப்பட்டன. 💢 2002 மற்றும் 2003 போராட்டங்கள். ஒரு அரசாங்கம் கூட பேச்சுவார்த்தை நடத்தி, உத்திரவாதம் கொடுத்தபிறகு, நாங்கள் அப்படி சொல்லவில்லை, பேச்சுவார்த்தையில் கூறியது சாத்தியமில்லை என தடம்மாறி, தரம்மாறி பேசியதை 2002 போராட்டத்தில் கண்டோம். ♨️ அந்த தாக்கமே, அந்த கோபமே, 2003 ல் நாம் போராடிப்பெற்ற உரிமைகளான 1. முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டுகள் என்றிருந்ததை 33 ஆண்டுகள் ஆணையிடப்பட்டது, 2. பணி ஓய்வின்போது அரசுக்கு ஒப்படைக்கப்படும் ஈட்டாவிடுப்புக்கான ஊதியத்தில் DA தவிர மற்றவை ரத்துசெய்யப்பட்டது, 3. Commutation குறைக்கப்பட்டது, 4. Death Cum Retirement Gratuity சேமிப்பு பத்திரமாக வழங்க ஆணையிடப்பட்டது, 5. Encashment of leave 300 நாளிலிருந்து 240 நாட்களாகவும், Encashment of Unearned leave 120 நாளிலிருந்து 60 நாட்களாகவும் குறைக்கப்பட்டது, ஏல்லாவற்றிற்கும் மேலாக, 6. வேலை நியமனத்தடைச்சட்டம் அமுலுக்கு வந்தது. இனி தமிழ்நாடு அரசு அரசுப்பணிக்கு நிரந்தரப்பணியில் நியமனம் (TNPSC) செய்வதில்லை என உரிமை பறிப்பு அரசாணைகள் நீண்டுகொண்டே போனது. ♨️ இழப்பதற்கு இனி ஏதுமில்லை என வெகுண்டெழுந்தோம். அறிவிக்கப்பட்ட நாளுக்கு முன்பாகவே தலைவர்கள் கைது, ESMA, TESMA என கடுமையான சட்டங்கள் கைது, டிஸ்மிஸ், சிறையிலடைப்பு, நீதிமன்றம், சங்கங்கள் முடக்கம், நிதி கொடுக்கவும், பெறவும் தடை என எத்தனை தடைகள் வந்தாலும், ஓ......... இவ்வளவு சோதனைகள் இருந்தாலும், இந்த வையகம் இதுவரை கண்டிராத உன்னத சக்தி வாய்ந்தது உழைக்கும் மக்களின் இயக்கம் ஒன்றுதான்! என்ற தொழிற்சங்க இலக்கணத்தின்படி வரலாறு படைத்தோம். 💢 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை சாட்டையாலடித்து வேலை வாங்குவேன் என்று சொன்னவர்கள் காணாமல் போனார்கள். நாம் உரிமைகளை மீட்டெடுத்தோம். 💢 2016 வேலை நிறுத்தப்போராட்டம். போராட்டக்களத்தில் தன்னந்தனியாக அரசு ஊழியர் சங்கம் மட்டுமே தனித்து 10 நாட்கள் வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தை அறிவித்து, மிக எழுச்சிகரமாக இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் அலுவலகத்தில் என இரவு பகலாக காத்திருப்பு என்ற புதிய ஆயுதத்தை கையிலெடுத்து அசைக்கமுடியாத அரசையும் அசைத்து சட்டமன்றத்தில் போராட்டக்களத்தில் இருக்கும் போதே 11 அறிவிப்புகளை அறிவிக்க செய்து, பின்னர் அரசாணைகளைப்பெற்றதும் வராலறு. 💢 2017 ஊதிய மாற்றத்தை அமுல்படுத்திட நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை சாதுரியமாக நீதிமன்றத்தை நமக்கு எதிராக திருப்பிட எண்ணி நீதிமன்றத்தை நாடியது. ஆனால் நமது நியாயமான கோரிக்கைகளும், விடாப்பிடியான போராட்டமும் நீதிமன்றத்தை நிலைகுழைய வைத்தது. இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தின் தலைமைச்செயலாளரை நீதிமன்றத்தில் ஊதிய மாற்றத்தை அறிவிக்க வைத்த இயக்கத்திற்கு சொந்தக்காரர்கள் நாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதையடுத்த 2019 போராட்டம் என தொடர் போராட்டங்களின் மூலமே நாம் உரிமைகளை பெற்றிருக்கின்றோம், மீட்டிருக்கின்றோம். ✅நமது ஆசான் தோழர்.MRA அவர்கள் கூறியது போல நாம் *"பெற்றுக்கொண்டிருக்கின்ற உரிமைகள் யாவும், அரசுகளின் கருணையினாலே. காருண்யத்தாலோ பெறப்பட்டவையல்ல. நமது விடாப்பிடியான போராட்டங்களினாலும், அளப்பரிய தியாகங்களினாலும் அரசாங்கங்களின் கரங்கங்களிலிருந்து பிடுங்கப்பட்டவை"* என்பதை ஒவ்வொரு முறையும் நாம் நிரூபித்துக்கொண்டிருக்கின்றோம். 💢 எனவே, தங்போதைய நமது கோரிக்கைகளைக்கூட நாம் ஒன்றுபட்ட விடாப்பிடியான போராட்டத்தின் மூலம் பெறமுடியும் என்ற அசாத்தியமான நம்பிக்கை உள்ளது தோழர்களே. இது வெறும் ஆரூடம் அல்ல, நடைபெற்ற இயக்கங்களும், பெற்ற உரிமைகளுமே சாட்சி. ✅ எனவே, அதற்கான இயக்கப்பணிகளில் அது ஸ்தாபன விரிவாக்கப்பணியான 2025 உறுப்பினர் சேர்க்கைப்பணி மற்றும் இரண்டாம் அறைகூவல் தீர்மானமான ✅ 06.01.2025 முதல் 10.01.2025 வரையான பிரச்சார இயக்கத்தில் ஸ்தாபன விரிவாக்கமே நமது பலம் என்ற வகையில் நமது உறுப்பினர் சந்தா இலக்கான 2 இலட்சம் உறுப்பினர் சேர்க்கையை உறுதிப்படுத்திட உறுப்பினர் சந்தா சேகரிப்பு இயக்கம் மற்றும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஊழியர்கள் மத்தியில் விளக்கிடவும், ஊழியர்களை அடுத்து வரக்கூடிய போராட்டங்களுக்கு தயார்படுத்தும் விதமாகவும், தமிழகம் முழுவதும் மிக எழுச்சியோடு பிரச்சார இயக்கம் நடத்திடுவோம்.🌷
👍 🙏 8

Comments