
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் Tamilnadu Government Pensioners
February 6, 2025 at 05:26 PM
💢 *தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் மு.பாஸ்கரன் மற்றும் பொதுச்செயலாளர் மு.சீனிவாசன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஊடகச்செய்தி:*
=================
♨️ *நெஞ்சில் ஏந்திய வாளை உருவி முதுகில் குத்தும் முயற்சி*
ஓய்வூதிய முறை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டதை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக கண்டிக்கின்றோம்
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு கடந்த 01.04.2003 முதல் புதிய பென்சன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 01.01.2004 முதல் மத்திய அரசு அதே திட்டத்தை அமல்படுத்தியது. அன்று முதல் இன்று வரை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திடவும், பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திடவும் தொடர்ந்து சமரசமற்ற முறையில் போராடிவருகிறது. அவ்வாறு போராடியபோது போராட்டக்களத்தில் எங்களோடு பங்கேற்று, எங்களது கோரிக்கைகளின் நியாயத்தை புரிந்துகொண்டு 2021ல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்திய போராட்ட ஆயத்த மாநாட்டில் கலந்துகொண்டு ”கழக ஆட்சி வந்தவுடன் உங்கள் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்" என வாக்குறுதியளித்ததோடு,
2021 சட்டமன்ற தேர்தலின்போது திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதி பட்டியலில் வரிசை எண்: *309. புதிய ஓய்வூதியத்திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத்திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.* என எழுத்துபூர்வமாக அச்சிட்டு வெளியிட்டதோடு அனைத்து பிரச்சாரக்கூட்டங்களிலும் இவ்வாக்குறுதியை அளித்தவர் இன்றைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அனைவரும் பெருவாரியாக இந்த ஆட்சி அமைந்திட ஆர்வத்துடன் ஆதரவு தெரிவித்தனர். இதை தபால் வாக்குகளினால் வெற்றிபெற்றவர்களும், முன்னணி பெற்றவர்களும் அறிவர்.
*தேர்தல் முடிந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்திய 14ஆம் மாநாட்டிலும், 2022ல் JACTTO-GEO வாழ்வாதார கோரிக்கை மாநாட்டிலும் கலந்துகொண்டு உங்களால் நான் ஆட்சிக்கு வந்தேன். உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நான் _மறக்கவில்லை_, _மறுக்கவில்லை_ , _மறைக்கவில்லை_ எனவே நான் _Do ro Die_ என சொல்லமாட்டேன் _Do and Die_ என்று சொல்லி மீண்டும் நம்பிக்கை விதைகளை அரசு ஊழியர்கள் / ஆசிரியர் மத்தியில் விதைத்துவிட்டு சென்றீர்கள். ஆகவே உங்கள் மீது வைத்த நம்பிக்கை இப்போது தகர்ந்து போயிற்று. உங்கள் மீது வைக்கும் நம்பிக்கையைவிட எங்கள் ஒன்றுபட்ட போராட்டத்தின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ளோம். இந்த நம்பிக்கை எங்களை ஏமாற்றியதே இல்லை.*
மேற்கண்டவை நடந்து 3 ஆண்டுகள் கடந்தபின் 2024 ஆம் ஆண்டு மூன்று அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்தது என அனைத்தையும் மறைத்துவிட்டு கடந்த 10.01.2025 அன்று சட்டமன்றத்தில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் அளித்த அறிக்கை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு செய்த துரோகமாகவே பார்க்கிறோம். மத்திய அரசு அமல்படுத்தும் புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு, பொது சிவில் சட்டம் என அனைத்திற்கும் எதிர்வாதம் செய்யும் தமிழ்நாடு அரசு, எங்கள் ஓய்வூதியத்தை வழங்குவதில் மட்டும் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலை எதிர்பார்த்திருப்பது அப்பட்டமான காலம் தாழ்த்தும், ஏமாற்று வேலையே ஆகும்.
தற்போது 04.02.2025 அன்று தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்:271 அளித்த செய்தி வெளியீட்டில் பழைய ஒய்வூதியத்திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத்திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட திரு.ககன்தீப்சிங்பேடி, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, டாக்டர்.கே.ஆர்.சண்முகம், முன்னாள் இயக்குநர், Madras School of Economics திரு.பிரத்திக் தாயள். இ.ஆ.ப., துணைச்செயலாளர் (வரவு செலவு), நிதித்துறை, உறுப்பினர் செயலர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பதை வெளிக்காட்டுவதாகவே அமைந்துள்ளது. இது அப்பட்டமான காலம் தாழ்த்தும் ஏமாற்று வேலையே ஆகும். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதிய ஓய்வூதியத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளதாக கருதவில்லை. பெயரளவில் இரண்டு திட்டங்களும் வேறுவேறாக இருந்தாலும், இரண்டு திட்டங்களுமே ஊழியர்கள் நலன்சார்ந்த ஓய்வூதிய திட்டமாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கருதவில்லை. முழுமையாக மறுக்கிறோம்.
சட்டிஸ்கர், பஞ்சாப், மஹாராஸ்டிரா, கோவா உள்ளிட்ட 7 மாநிலங்கள் தங்களின் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை PFRDA நிதி ஆணையத்தில் செலுத்தியிருந்த நிலையிலும், அந்த தொகையை மத்திய அரசு திரும்ப தர மறுத்துள்ள நிலையிலும், பழைய ஓய்வூதியத்திட்டத்தை தங்கள் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 01.04.2003 முதல் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அறிவித்திட எவ்வித நெருக்கடியும் இருக்காது என நம்புகிறோம்.
எனவே, தமிழ்நாடு அரசு கடந்த 04.02.2025 அன்று அறிவித்துள்ள குழுவை திரும்பப்பெற்று, அரசு ஊழியர் நலன் சார்ந்த வகையிலும், தேர்தல் கால வாக்குறுதிப்படியும் உடன் பழைய ஓய்வூதியத்திட்டத்தை மேலும் காலதாமதப்படுத்தாமல் உடன் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
😢
😂
6