Raj Bhavan, Tamil Nadu
January 26, 2025 at 04:33 PM
"சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று பாரம்பரியமான குடியரசு தின விழாவில் சிறப்பாகப் பங்கேற்ற தமிழ்நாட்டு மக்களுக்கு எனது ஆழ்ந்த மரியாதையையும், நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள், மீனவர்கள், தலித்துகள், நெசவாளர்கள், பழங்குடியினர், கைவினைஞர்கள், தொழில்முனைவோர், தொழிற்துறையினர், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், ஆன்மிக தலைவர்கள் மற்றும் சமூக சேவகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என ஆயிரக்கணக்கான சகோதர, சகோதரிகள் மற்றும் முதியோர் இந்த தேசிய கொண்டாட்டத்தில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். தேசத்தின் மீதான அவர்களின் அன்பால் நான் மிகவும் உற்சாகமடைந்தேன். என் மீதான அவர்களின் பாசத்தால் பணிவுடையவனாகவும் ஆசீர்வாதம் பெற்றவனாகவும் உணர்கிறேன்." - ஆளுநர் ரவி
❤️
👍
5