Aiadmk IT Wing
February 10, 2025 at 06:24 PM
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஸ்டாலின் மாடல் திமுக அரசால் வழங்கப்பட்ட குடல் புழு நீக்கம் மாத்திரையை உட்கொண்ட கவிபாலா எனும் 7ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாக வந்த செய்தியையடுத்து, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க, தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. சி. வி. சேகர் அவர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அதே பள்ளியில் மேலும் 4 மாணவிகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வரும் நிலையில்,
மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மருந்து காலாவதி ஆகாத மருந்து தானா? எந்த பின்விளைவுகளும் ஏற்படுத்தாத வகையில் முறையாக தான் வழங்கப்பட்டதா? உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் மாணவி கவிபாலாவின் உயிரிழப்பு குறித்து காவல்துறை தீர விசாரிக்க வேண்டும்.
https://x.com/AIADMKITWINGOFL/status/1888962288708989175?t=9hTHdRiUF7u21ahfg4Tatg&s=19
😢
👍
🙏
😂
15