Para
                                
                            
                            
                    
                                
                                
                                January 31, 2025 at 10:47 AM
                               
                            
                        
                            படித்து ரசித்தேன் - சஃபீக் அஹ்மத்
இயல்வாகை பதிக்கப்பத்தில் நக்கீரன் எழுதிய "கண்ணுக்கு தெரியாமல் களவு போகும் நீர்" - நூல் விமர்சனம் 
 நீர் மேலாண்மை, இயற்கைசார் வளங்கள் , நீர் களவாடுதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற முக்கிய தலைப்புகளை ஆழமாக ஆராய்கின்றது
 நீரின் முக்கியத்துவத்தை நமக்கு புரிய வைக்க, அதனை சரியான முறையில் கையாள முடியுமானால், அதன் பலன்கள் எவ்வாறு பொதுவாக கிடைக்கும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இந்நூல் உள்ளது
 நீரின் "கண்ணுக்கு தெரியாமல்" போகும் தன்மையை பற்றி ஆராயும்போது, நூலாசிரியர் நாம் அதிகம் கவனிக்காத பருவ மாற்றங்கள் மற்றும் மனித செயல்களின் விளைவுகளை எடுத்துரைக்கிறார். 
இது உலகம் முழுவதும் நீர் அரிதான வளமாக மாறுவதற்கான முக்கிய காரணிகளாக உள்ளன. அந்த வகையில், நாம் வாழும் காலகட்டத்தில் நீர் மூலதனத்தை நாம் எப்படி பத்திரப்படுத்த முடியுமோ, அதற்கு உரிய முறைகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பதையே இந்த நூல் ஆராய்கிறது
நிலத்தடி நீர் அளவுகள் குறைவடைவது, பெரும் விவசாய பகுதிகளில் நீர் ஆதாரங்களின் குறைவு, மற்றும் மழையின் குறைவான அளவு ஆகியவை பெரிதும் பேசப்படுகின்றன. 
இந்த புத்தகம் வாசகர்களுக்கு நீர், அதன் சரியான பயன்பாடு மற்றும் அதன் பாதுகாப்பு பற்றி பல எச்சரிக்கைகள் மற்றும் அறிவுரைகளை அளிக்கும் விதமாக உள்ளது 
நூலாசிரியர் மிகவும் நேர்த்தியான, எளிய முறையில் கருத்துகளை தொகுத்து இப்போது நாம் எதிர்கொள்வது பிரச்சினைகளைக் கண் முன்னே கொண்டு வந்துள்ளார் 
ஒரு பொருள் தயாரிக்க லட்சகணக்கான லிட்டர் தண்ணீர் பயன்படுத்துவதும் , ஒரு உணவு தயாரிக்க ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் பயன்படுத்துவதையும் படித்த போது இவ்வளவு நாட்கள் இயற்கை கொடுத்த தண்ணீரை அழித்து நமக்கு கிடைத்ததா என்ற கேள்வி எழுகிறது 
நாம் எவ்வாறு கண்ணுக்கு தெரியாமல் நீரை இழக்கின்றோம்? என்பதை இந்நூலை படித்த பின்பு உணர்த்துகொண்டேன்
"கண்ணுக்கு தெரியாமல் களவு போகும் நீர்" என்ற தலைப்பு உண்மையில் மக்கள் கவனிக்கவில்லை என்றாலும், நீர் எவ்வாறு மொத்த உலகத்தில் களைந்து போகின்றது என்பதை உணர்த்துகிறது
இந்நூலை வாசித்த பின்பு ஒரு பொருளை பார்த்தால் எத்தனை லட்சம் லிட்டரை கொண்டு இப்பொருளை உருவாகி இருக்கும் என்ற கேள்வி ஓடிக்கொண்டே இருக்கிறது
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                    
                                        2