Para
February 3, 2025 at 04:48 AM
பா. ராகவன் எழுதிய " கொலம்பிய போதை மாஃபியா " நூல் விமர்சனம் " போதை கும்பலின் ராஜா "என்று அழைக்கப்படும் " பாப்லோ எஸ்கோபரின் " வாழ்க்கையை விரிவாக விவரிக்கும் ஒரு முக்கியமான படைப்பு இந்த நூல், எஸ்கோபரின் வாழ்க்கை மூலம் கொலம்பிய போதை மாஃபியாவின் உருவாக்கம், வளர்ச்சி மற்றும் அதன் செயல்பாடுகளை விரிவாக விவரிக்கிறது. எஸ்கோபர் போதைப் பொருள் கடத்தலை ஒரு கார்ப்பரேட் தொழிலாக மாற்றி, கொலம்பியா மட்டுமின்றி உலகின் பல தீவிரவாதக் குழுக்களுக்கும் போதைப் பொருளின் மூலம் வருமானம் பெறும் வழியை காட்டிய ஒரு குற்றவாளி எஸ்கோபர் பல அரசியல் தலைவர்களையும் , ஒரே நாளில் 30 நீதிபதிகள், 300 போலீஸாரை கண்ணிமைக்கு முன் சுட்டுக்கொன்ற ஒரு பயங்கரவாதி மிகப் பிரபலமான AVIACA 203 விமானத்தைக் குண்டு வைத்து வெடிக்கச் செய்த மரண வியாபாரி பணம் வைத்திருந்தால் நாம் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என நினைப்பவருக்கு எஸ்கோபர் அழிவு ஓர் உதாரணம் பல அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து , அவன் கட்டுபாட்டில் வைத்து கொள்வான் மறுத்தால் கொலை செய்வான் இப்படி பல விசயங்களை நாம் சொல்லி இருந்தாலும் அவனை நல்லவன் என கொண்டாடும் சில கூட்டமும் இருந்தது இப்படிப்பட்ட ஓர் கொடூரனின் வாழ்க்கை யை படித்த பின்பு சுயநலத்திற்காக அராஜகம் செய்தவன் ஒரு நாள் அழிந்தே தீருவான் என்பதை உணர்ந்து கொண்டேன் திருடனான எஸகோபர் போதை மாபியாவின் தலைவர் ஆனது எப்படி என்று நீங்கள் யோசித்தால் அவசியம் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும் இந்த நூலைப் படித்த பின் , எஸ்கோபரின் வாழ்க்கையையும் , அவனது கொடூரங்களையும் நெருக்கமாக உணர முடிகிறது இது வெறும் வாழ்க்கை கதையல்ல... இது இரத்தம் வடிந்த கொலைகார பேரரசரின் சரித்திரம்! - சபீக் அஹமது
❤️ 1

Comments