Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
February 20, 2025 at 12:02 PM
பள்ளி மாணவர்களை போராட வைக்க திட்டமிட்டு சதியா?! பாளையங்கோட்டை இக்னிஸ் கான்வென்ட் பள்ளியில் ஆசிரியர்கள், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக வீட்டிற்கு முன் கோலம் போட வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோருக்கு வாட்ஸ்அப் தகவலை அனுப்பிய அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. ஏழை மாணவர்கள் வாழ்வில் வளம் பெற தமிழகத்தில் தமிழ் ஆங்கிலத்திற்கு அப்புறம் மூன்றாவது ஏதேனும் ஒரு மொழி கற்க வழிவகை செய்யும் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக வீட்டில் முன் கோலம் போட தனியார் மாணவர்களின் பெற்றோர்களை கட்டாயப்படுத்தும் பாளையங்கோட்டை இக்னீஷ் கான்வென்ட் நிர்வாகம். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக கோலம் போட மாணவர்களை வலியுறுத்தியது சட்டவிரோதமானது. ஆர்ப்பாட்டங்களில் மாணவர்கள் வந்ததற்கு போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு போடுகிறது காவல்துறை. இதற்கு ஏன் வழக்கு போடவில்லை? மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக மாணவர்களை தூண்டியதற்கு அப்பள்ளியின் அங்கிகாரத்தை பள்ளி கல்வித்துறை ரத்து செய்ய வேண்டும். ஏழை அரசு பள்ளி மாணவர்களின் வாழ்வில் வளம் பெற மூன்றாவது ஒரு மொழி கற்பது அவசியம் என்பதை உணர்வோம். பெற்றோர்களே தேசத்திற்கு விரோதமாக மாணவர்களை வழிநடத்தும் கிறித்துவ மிஷனரிகளின் பள்ளி கல்லூரிகளின் உண்மை நோக்கத்தை புரிந்து கொண்டு புறக்கணிப்பீர்கள் என்பது பொது மக்களின் வேண்டுகோளாகும்... #கல்வியை_அரசியலாக்காதே #தேசிய_புதிய_கல்விகொள்கை #தேசிய_கல்விக்கொள்கை #nationalneweducationpolicy #nationaleducationpolicy #hindumunnani
👍 🔥 ❤️ 🙏 9

Comments