
Hindu Munnani - Tamilnadu
February 26, 2025 at 10:51 AM
தமுமுக மத அடிப்படைவாதிகள் நிகழ்ச்சியில்,
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலந்து கொண்டது - அதிர்ச்சி செய்தி
தேனி உத்தமபாளையத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக (தமுமுக) அமைப்பின் சார்பில் நடைபெற்ற,இரத்ததான முகாமில், அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செங்கோட்டு வேலவன் கலந்து கொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்பது இஸ்லாமிய மத அடிப்படை வாதத்தை கையில் எடுத்துக் கொண்டு பல்வேறு விரும்பத்தகாத செயல்கள் செய்வது அதன் வாடிக்கை.
இந்து இயக்கத் தலைவர்களின் கொலைகளிலும் அந்த அமைப்பினருக்கு தொடர்பு இருந்து, அந்த அமைப்பைச் சார்ந்த பல நபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
அந்த இயக்கத்தினர் குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டது குறித்து பத்திரிக்கை செய்திகள் வாயிலாக வெட்ட வெளிச்சமாகியுள்ளதை அனைவரும் அறிந்ததே.
மேலும் தமுமுக ஆம்புலன்ஸ் சேவை என்ற பெயரில் சமூக சேவை முகமூடி அணிந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட இவர்கள் காவல்துறையில் பிடிபட்டுள்ளனர்.
தங்களுடைய குற்றச் செயல்களை மறைக்க, மக்கள் சேவை செய்வதாக மருத்துவ முகாம், இரத்ததான முகாம் போன்ற நிகழ்ச்சிகள் இந்த அமைப்பினரால் நடத்தப்படுகிறது.
உத்தமபாளையத்திலேயே முஸ்லிம் பயங்கரவாத செயல் நடந்ததையும் நினைவு கூர்கிறோம்.
இந்நிலையில் உத்தமபாளையத்தில் தமுமுகவினரால் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரே கலந்து கொண்டதன் மூலம் இஸ்லாமிய அமைப்பினரின் குற்ற செயல்களை மறைப்பதற்கு காவல்துறை உதவுவதாக மக்கள் கருத இடமிருக்கிறது.
இது போன்ற மத அடிப்படைவாதிகளை நிகழ்ச்சியில் கலந்து கொள்வது அவர் பொறுப்பேற்றிருக்கின்ற பதவிக்கு அழகல்ல.
தமுமுகவினர் ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டால் காவல்துறை அதிகாரி எப்படி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார் என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே காவல்துறை அதிகாரிகள் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்க தமிழக காவல்துறை இயக்குநர் அறிவுறுத்த வேண்டும். மேலும் தன்னார்வமாக இஸ்லாமிய மத அமைப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அதிகாரிகளின் செயல்பாடு கண்காணிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்...
#tmmk #உத்தமபாளையம் #tnpolice #hindumunnani
😡
😮
👍
😂
🤬
10