Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
February 26, 2025 at 12:21 PM
கோயில் நிலத்தில் கல்லூரி கட்டுவது அவசியமா? அரசு நிலம் ஆயிரம் இருக்க, ஆலய நிலத்தை தாரைவார்க்க வேண்டிய அவசியம் என்ன? கபாலீஸ்வரர் கோவில் சார்பாக கல்லூரி அமைக்க கொளத்தூர் சோமநாத சாமிக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து கல்லூரி கட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு முன்பு நீதிமன்ற உத்தரவில் கோவில் சொத்து கோவிலின் உபயோகத்திற்கு மட்டுமே என்று கூறியுள்ளது. இப்போது சென்னை உயர்நீதிமன்றம் இந்த கருத்திற்கு முரணாக அந்த தடை உத்தரவை இப்போது தள்ளுபடி செய்துள்ளது. நீதிமன்றம் அதன் உத்தரவுகளில் இது போன்ற முரண்பாடு இருப்பது பல சந்தேகங்களை எழுப்பி வருகிறது. அரசு நிலம் பல்லாயிரம் ஏக்கர் இருக்கின்றன. அவற்றை உபயோகிக்காமல் விட்டு கோவில் நிலத்தை குத்தகைக்கு கொடுப்பதன் நோக்கம் என்ன? கோவிலுக்கு இடங்கள் நிலங்கள் தானமாக வழங்கியது அந்தந்த கோவிலின் பராமரிப்புக்காக மட்டுமே தவிர அதனை மற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கோ அல்லது அரசு எடுத்துக் கொள்வதற்கோ பக்தர்கள் தானமாக வழங்கவில்லை. மேலும் கல்வி, சுகாதாரம் நிர்வகிக்க வேண்டியது அரசின் கடமை. அதனை திருக்கோவில் மீது திணிக்க வேண்டாம். இதுபோல் கோவில் நிலங்களை இடங்களை குத்தகைக்கு எடுத்த அரசு துறை முறையாக சரியாக வாடகை/ குத்தகை பணத்தை செலுத்தியது இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இவ்வாறு துவக்கப்படும் கல்லூரியில் இந்து சமயம், ஆன்மீகம் குறித்தா, கற்பிக்கப் போகிறார்கள் என்ற கேள்வியை முன்னாள் நீதிபதிகள் எழுப்பி உள்ளனர் என்பதை சுட்டிக் காட்டுகிறோம். இதனை அரசும், நீதிமன்றங்களும் புரிந்து கொண்டு இத்திட்டத்தை கைவிட இந்து முன்னணி வலியுறுத்துகிறது... #மயிலாப்பூர் #கபாலீஸ்வரர்கோவில் #கோவில்இடம் #கல்லூரி #highcourt #hindumunnani
😡 👍 😂 😤 😭 😮 🙏 14

Comments