
Anbil Mahesh Poyyamozhi
February 1, 2025 at 08:33 AM
எனது திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 8 பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு, அமர்ந்து எழுதும் மற்றும் வாசிக்கும் வகையிலான மேசைகளை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தோம்.
சமுதாய பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் சார்பாக ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் 200 மேசைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களுக்கும்,
மாணவச் செல்வங்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளையும், மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டோம்.
❤️
👍
8