
Anbil Mahesh Poyyamozhi
February 8, 2025 at 11:58 AM
"தான தர்மங்களில் சிறந்தது பிற சகோதரர்களுக்கும் கல்விக் கற்றுக் கொடுப்பதே" என்றார் நபிகள் நாயகம் அவர்கள்.
2024ஆம் ஆண்டில் சிறப்பாக செயலாற்றிய 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களையும் பள்ளிகளையும் பாராட்டி பரிசுகள் வழங்கும் விழா, நபிகள் நாயகம் அவர்களை பின்பற்றும் தமிழ்நாடு முஸ்லீம் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பாக சென்னை புதுக்கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாணவச் செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தோம்.
"அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என 100 ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம், சமூகநீதி சமத்துவக் கொள்கைகளுக்கும் முக்கியத்துவம் அளித்தது. அதேபோல பொன்விழா காணும் முஸ்லீம் பட்டதாரிகள் சங்கமும் சமத்துவக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது" என்பதை குறிப்பிட்டு உரையாற்றினோம்.

❤️
👍
🙏
12