
காங்கயம் 🦁 லைன்ஸ் ஆன்மீக தளம்
February 3, 2025 at 10:50 AM
🌹திருஅண்ணாமலை தரிசிக்க முக்தி*
🌿🌿அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையார் மலர் பாதம் சரணம் . 🌿🌿
திருவண்ணாமலையை தரிசிக்க முக்தி என்பதன் உண்மைப் பொருள். சூரியக்கலை யோகத்தில் பத்மாசனமிட்டு அமர்ந்து கொஞ்சம் புருவ மத்தியை கவனியுங்கள்.
கால்களை பின்னிக் கொண்டு அமரும் நிலையில் இரண்டு கண்களை பாதி மூடியும் மூடாமலும் அரை தூக்க நிலையில் புருவ மத்தியை கவனிக்க வேண்டும். அத்துடன் வாசி எனும் மூச்சுக் காற்றை மெதுவாக செயலாற்ற பழகினால் அது முச்சந்தியில் ஒடுங்கும்
முச்சந்தி என்பது உள்நாக்கின் மேற்புறமும், மூக்கு துவாரத்தின் பின்னாடியும் மூளை பகுதிக்கு கீழேயும் சங்கமிக்கும் இடமாகும். தியான நிலையில் இருக்கும் போது நமது அடிவயிற்றில் அதாவது மூலதாரத்தில் உற்பத்தியாகும் வாயு முதுகு தண்டு வழியாக மேலே ஏறி கபாலத்தை சுற்றி வந்து மேலே சொன்ன முச்சந்தியில் ஒடுங்கும். இதற்கு பெயர் தான் அண்ணாமலை கிரிவலம். கால் கொண்டு கிரிவலம் செல்வது சிறப்பு என்பார்கள் சித்தர்கள்.
சித்தர்கள் சொன்னது தலையில் இருக்கும் அண்ணாமலையை "கால்" என்னும் சுவாசம் மூலம் கிரிவலமாகிய மூலாதார காற்றை முதுகு வழியாக தூக்கி தலையை சுற்றி
முச்சந்தியில் நிறுத்துவது இந்த தியானதின் பலனாய் நம் ஞானகண்ணின் பலம் கூடும் முக்தி கிட்டும்.
திருவண்ணாமலையை தரிசிக்க முக்தி என்பதின் பொருள் இதுவே.
**சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம் . சிவனே சரணாகதி. சிவமே என் வரமே
இனிய ஈசன் அகிலம் காக்கும் அண்ணாமலையார் அருளால் எல்லா நாளும் இனிய நாளே 🌹