
காங்கயம் 🦁 லைன்ஸ் ஆன்மீக தளம்
512 subscribers
About காங்கயம் 🦁 லைன்ஸ் ஆன்மீக தளம்
இத்தளத்தில் ஆன்மீக சமந்தமான செய்திகள் மட்டும் பதிவு செய்யப்படும்
Similar Channels
Swipe to see more
Posts

வீட்டில் வைக்கக்கூடாத தெய்வங்கள் பொதுவாகவே நம் முன்னோர்கள் சாந்தஸ்வரூபமாக இருக்கக்கூடிய தெய்வ விக்கிரகங்களை மட்டுமே வீட்டில் வைத்து வழிபடுவார்கள். படமாக இருந்தாலும், இதே நிபந்தனை தான். ஒரு விரல் நீளத்திற்கு மேலே தெய்வ உலோக விக்கிரகங்களை வீட்டில் வைத்திருந்தால், அதை முறைப்படி பூஜை செய்ய வேண்டும் என்பது ஆகம விதியாகும். அப்படி செய்ய முடியாதவர்கள், அதனை வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்பது நம் முன்னோர் கூற்று! அந்த வகையில் வீட்டில் வைக்கக்கூடாத தெய்வத்திரு உருவங்கள் எவை எல்லாம்? ஏன் வைக்கக்கூடாது? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களைத் தான் இனி தொடர்ந்து காண இருக்கிறோம். தெய்வத்திரு உருவங்கள் உக்கரமாக இருந்தால் வீட்டிற்கு ஆகாது என்பார்கள். காளி, துர்க்கை அம்மன், நரசிம்மர் இது போன்ற உக்கிரமாக இருக்கக்கூடிய தெய்வங்களின் படங்களை வீட்டில் வைக்கக் கூடாது. இதே தெய்வங்கள் சாந்த ஸ்வரூபமான தோற்றத்தில் வைத்தால் தவறில்லை ஆனால் வதம் செய்வதைப் போல இவர்களின் திரு உருவங்கள் இருந்தால் அவற்றை தவிர்க்க வேண்டும் என்பது தான் இங்கு சூட்சமமாக சொல்லப்படும் உண்மை. வீடு என்பது எப்போதும் அமைதியாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். நாம் பார்க்கும் விஷயங்களும் கேட்கும் சப்தங்களும் கூட இனிமையாக இருக்க வேண்டும். அப்போது தான் நம்முடைய மனமும் அமைதியாகும். இதனாலேயே உக்கிர தெய்வங்கள் படத்தை வீட்டில் வைக்கக் கூடாது என்பார்கள். அடுத்து கிரக தோஷங்களை நீக்கக் கூடியது நவகிரகங்கள். இந்த நவகிரகங்களின் படங்களை வீட்டில் வைப்பது முறையானது அல்ல! நவகிரகங்களையும் நல்ல அதிர்வலைகள் நிரம்பியுள்ள, தெய்வீக அம்சம் கிடைக்கக்கூடிய கோவிலில் சென்று தான் வழிபட வேண்டும் என்பது நியதி! அப்போது தான் கிரக தோஷங்கள் விலகும். வீட்டில் நவகிரக படங்களை வைத்திருந்தால் தோஷங்கள் விலகாது. குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இருந்தால் தான் அந்த குடும்பத்திற்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். இதனால் நீங்கள் வைக்கக்கூடிய தெய்வ விக்கிரகங்களின் படங்களும் தாயாருடன் சேர்ந்தவையாக இருக்க வேண்டும். தாயார் இல்லாத சுவாமியின் படங்களை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். இதனால் குடும்பத்தில் அமைதி நிலைக்கும். “சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவமில்லை” என்பது போல தாயாரும், சுவாமியும் சேர்ந்து இருக்கும் படத்திற்கு தான் வலிமை அதிகம். மகாலட்சுமி ஆனவள் மென்மையானவள். இவள் நிற்கும் படியான படத்தையோ, விக்கிரகத்தையோ வைத்திருக்கக் கூடாது. தாமரை மலரில், மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கும் படியான படங்களையும், விக்கிரகங்களையும் வைத்திருந்தால் அங்கு செல்வத்திற்கு குறைவிருக்காது. இவளின் கால்கள் வலித்தால் வீட்டில் செல்வம் தங்காது என்பார்கள். ஆண்டி கோலத்து முருகன் சிலையையும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்பது நியதி. முருகன், சாந்த ஸ்வரூபமாக இருக்கக் கூடியவர். இவர் ஆண்டி கோலத்தில் இருப்பது கோபத்துடன் இருப்பதற்கு சமமாகும். எல்லாவற்றையும் துறந்து, எதுவும் வேண்டாம் என்கிற நிலை என்பதால், அதனை குடும்பமாக வாழும் வீட்டில் வைத்திருப்பது ஆகாது என்பார்கள். இந்த முருகன் சிலையை வீட்டில் வைத்திருப்பது வறுமைக்கு வழிவகுக்கும். முருகன் வள்ளி, தெய்வானையுடன் வேலும், மயிலும் கொண்டு மலர்ந்த முகத்துடன் இருப்பதாக இருந்தால் என்றென்றும் குடும்பத்தில் கணவன், மனைவிக்குள் சண்டையே வராது தவிர்க்கலாம். சுவாமி ஐயப்பன் படத்தையும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது. மிகுந்த சுத்தபத்தமும், பக்தியும் இருப்பவர்கள் இவற்றை தாராளமாக வீட்டில் வைத்து வழிபடலாம், ஆனால் முறையாக எதையும் செய்ய முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் ஆசைக்காக இவற்றை வைத்திருக்காமல், இவர்களுக்கு உரிய மரியாதை உடன் கோவிலுக்கு சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.

*தைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள்* *உங்களுக்காக* ........ 1. தைப்பூசம் (Thaipusam special informations) இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. 2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார். 3. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும். 4.தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது. 5. இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான். அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான். 6. சிதம்பரத்தில் நடராஜர், உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர்களுக்கு தைப்பூசம் தினத்தன்றுதான் தரிசனம் கொடுத்தார். 7. தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும். எனவே தைப்பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும். 8. தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அந்த பாடல்கள் ‘காவடி சிந்து’ என்று அழைக்கப்பட்டன. 9. தைப்பூசத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் எடுத்து தீர்த்தக் காவடியாக வருவதை கொங்கு மண்டல மக்கள் மிகவும் சிறப்பாக நினைக்கிறார்கள். 10. முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. 11. தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. 12. தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும். 13. தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு. 14. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம். 15. தைப்பூசம் முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழாவாகும். அன்றுதான் முருகன் வள்ளியை மணம் புரிந்து கொண்டான். 16. சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது. 17. தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. 18. தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார். இதையட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும். 19. தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும். 20. தைப்பூச நன்னாளில்தான் ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார். இது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத் தில்தான் நடந்தது. இதை மயிலைப்புராணம் கூறுகிறது. இச்சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகே உள்ளது. 21. தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர். 22. குளித்தலை கடம்பவன நாதர் ஆலயம் வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. சப்த கன்னி யருக்கு ஒரு தைப்பூச நாளில்தான் இங்கு ஈசன் காட்சி அளித்தார். 23. தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது. 24. முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தாராம். 25. தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பத்து மலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருவார். உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப் படுவது மலேசியாவில் மட்டுமே. 26. மயிலம் கோவிலில் தைப்பூசத்தன்று முருகன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை மீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது. 27. விராலிமலை முருகன் ஆலயத்தில் தைமாத பிரம்மோற்சவத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மயில் மேல் காட்சி தருவார். தைப்பூசத்தன்று இங்கு தேரோட்டம் நடைபெறும். 28. ஆய்குடி ஹரிராம சுப்பிரமணியர் ஆலயத்தில் தை மாதம் புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெறும். அன்று பாலசுப்பிரமணியர் கருவறையை பூக்களால் நிரப்புவர். தைப்பூசத்தன்று நடத்தப்படும் பரிவேட்டை உற்சவம் இங்கு மிகவும் புகழ் பெற்றது. 29. தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம். 30. நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள குமரக்கோவிலில் தைப்பூச நன்னாளில், முருகப் பெருமானுக்கு சந்தனம், குங்குமம் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்வதும் அதனைத் தரிசிப் பதும் சிறப்பு என்கின்றனர் பக்தர்கள். மேலும், செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் முருகப்பெருமானை வழிபட்டு, கோவிலில் உள்ள ஸ்ரீநாகநாத சுவாமிக்கு பால் வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வந்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். 31. நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வள்ளி மலை. வள்ளியை முருகப் பெருமான் திருமணம் செய்த தலம் என்று இது சொல்லப் படுகிறது. அந்த நாள் சைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது. 32. கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு காவேரி யானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெரு மாள் அவளுக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது. 33. இலங்கையில் நல்லூர் என்னும் திருத் தலத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் வேலாயுதத்தை கருவறையில் எழுந்தருளச் செய்து, அதை முருகப் பெருமானாகக் கருதி வழிபடு கிறார்கள். வேலின் இருபுறமும் வள்ளி, தெய்வானை காட்சி தருகிறார்கள். இங்கு தைப்பூச விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர். 34. மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பத்து குகை என்னும் இடம். இந்தக் குகைக் கோவிலின் முகப்பில் 42.7 மீட்டர் (141 அடி) உயரமுள்ள முருகப்பெருமான் அருள் புரிகிறார். இந்தச்சிலை அமைக்க இரண்டரை கோடி ரூபாய் செலவானது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்த பிரம்மாண்ட முருகன் விக்கிரகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பூமாரி பொழி வார்கள். இங்கு தைப்பூசம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 35. திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் தவிமிருந்த காந்திமதியம்மன் தைப்பூசத்தில் சிவனருள் பெற்றதாக ஐதீகம். எனவே தைப்பூசத்தில் நெல்லையப்பர் ஆலயம் விழாக்கோலம் காணும். 36. திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூச நாளில் நடைபெறுகிறது. வஜன், வரகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் பாவம் தீர தைப்பூசத்தன்று இங்குள்ள புனிதத்தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக ஐதீகம். இக்கோவிலிலுள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்தால் பரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பர். 37. சூரனை அழிக்க பராசக்தி தன் ஆற்றல் முழுவதையும் ஒன்று திரட்டி வேல் ஒன்றை உருவாக்கி அதை முருகனிடம் கொடுத்த நாள் தைப்பூச நாள்தான். இந்த வேல்தான் சக்திவேல். இது பிரம்ம பித்யா சொரூபமானது. இதை முருகனின் தங்கை எனவும் கூறுவர். 38. எல்லா முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறும். இருந்தாலும் பழனியில் நடைபெறும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளைக் கண்டுவழிபட்டால் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். தைப்பூச நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர். பூசத்தன்று விரதமிருக்க வேண்டும். பழைய உணவுகளை உண்ணக்கூடாது. ‘பூசத்தன்று பூனைகூட பழையதை உண்ணாது’ என்பது பழமொழி. 39.சனி பகவான் தொடாத கடவுள் முருகனே. சனியின் ஆதிக்க நட்சத்திரமான பூசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா எடுக்கின்றனர். வேல் வகுப்பு என்ற பாடலையும் தைப்பூசத்தன்று பஜனைப் பாடலாக வள்ளி மலையில் பக்தர்கள் பாடுகின்றனர். 40. திருவிடைமருதூரில் உள்ள காவிரியின் படித்துறைக்கு பூசத்துறை என்று பெயர். இதற்கு கல்யாண தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. தைப்பூசத்தன்று சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் இப்பூசத் துறைக்கு வந்து, தீர்த்தவாரி கண்டு வீதி வழி ஆலயம் வருவார்கள். இக்காட்சி காணக்கிடைக்காதது. அத்துடன் இப்பூச நன்னாளில் இங்கு மூன்று நாட்கள் ஆரியக் கூத்து நடத்துவார்கள். ஆலயத்தில் அன்று விசேஷ பூஜை நடைபெறும். 😟🙏😟🙏😟

*வேல் மாறல் - பாகம் 1* *முருகப் பெருமானின் வேலின் மகிமைகள்* முருகப் பெருமானின் வேலின் மகிமையை அறிந்து கொள்ளும் முன்னர் முருகப் பெருமானின் அவதாரத்தை அறிந்து கொள்வது அவசியம் ஆகும். அது என்ன? சனத்குமார முனிவர் என்பவர் பிரும்மாவின் மன எண்ணத்தில் இருந்து தோன்றியவர். அவர் ஒரு பிரம்ம ஞானி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று உணர்ந்திருந்தவர். வெளி வந்தது முதலே அவர் ஆழ்ந்த தவத்திலேயே இருந்தார். இப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஒரு கனவு வந்தது. அந்த கனவில் தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் சனத்குமாரர் தேவ சேனாபதியாக இருந்தவாறு யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் அழிக்கிறார். அந்த கனவைக் பார்த்துக் கொண்டிருந்த சனத்குமாரர் விழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் தனது கனவைக் குறித்து கூறி அதற்கான அர்த்தம் என்ன என்று கேட்டார். அதைக் கேட்ட பிரும்மா அவரிடம் கூறினார் ‘மகனே நீ பூர்வ ஜென்மத்தில் வேத அத்யயனம் (அத்யயனம் என்றால் கற்றுக் கொள்வது, படிப்பது, பலமுறை சொல்லிப் பார்ப்பது என்பது பொருள். வேதத்தை நாம் குருவிடம் இருந்து செவி வழியே கேட்டு, மறுபடியும் மறுபடியும் அதை பலமுறை சொல்லிப் பார்த்து கற்றுக் கொள்வது) செய்தாய். அதில் அசுரர்களுடன் யுத்தம் என்று வருவது உன் மனதில் ஆழப் பதிந்து விட்டது. வேதங்கள் ஓதி வேள்வி வளர்த்து தேவர்களை மகிழ்விக்கும் போது அதனால் மனம் மகிழ்ந்து அருள் புரிபவர்கள் தேவர்கள். அப்படிப்பட்டவர்களை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் ஆழ்ந்த பிடிமானம் இருந்ததினால், அசுரர்களையெல்லாம் நாமே அழித்து விட மாட்டோமா?’ என்று பூர்வ ஜன்மத்தில் நினைத்தாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜென்மாவிலும் தொடர்ந்து கனவாக வெளியாகி உள்ளது. உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது உண்மையில் நடந்து விடும். அதனால் நீ ஒருநாள் தேவ சேனாதிபதியாக பொறுப்பு ஏற்றுக் கொண்டு அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய். இந்த ஜன்மாவில் நீ ‘தேவராவது, அசுரராவது, எல்லாம் ஒரே பிரம்மம்’ என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்’ என்றார். சூரபத்மனின் கொடுமைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க ஒரு மகனை பிறப்பிக்க வேண்டும் என்பது விதியாக இருந்ததினால் அதை நிறைவேற்றும் சமயம் வந்து விட்டதை உணர்ந்து கொண்ட சிவபெருமான் தனது மனைவி பார்வதியுடன் தவத்தில் இருந்த சனத்குமாரரின் முன் தோன்றி அவரை தனது குழந்தையாக பிறக்குமாறு கூறினார். அதை ஏற்றுக் கொண்ட சனத்குமாரர் ‘சரி உனக்கு மகனாக பிறக்கின்றேன்’ என்று வாக்கு கொடுத்தார். அவர் பிரும்ம ரிஷி என்பதினால் யோனி மூலம் பிறப்பு தொடர்பான பாவங்களைத் தவிர்ப்பதற்காக பார்வதி தேவியின் மூலம் பிறக்க வேண்டாம் என முடிவு செய்து ‘உனக்கு மகனாக பிறக்கின்றேன்’ என சிவபெருமானிடம் வாக்கு கொடுத்தவர் பார்வதியையும் சேர்த்து ‘உங்களுக்கு மகனாக பிறக்கின்றேன்’ என வாக்கு கொடுக்கவில்லை. ஆகவே பார்வதி இன்றி எப்படி சிவபெருமானுக்கு மகனாக பிறப்பது? அதனால்தான் சிவபெருமான் சனத்குமாரனை தனது மனதில் ஏந்திக் கொண்டு தனது நெற்றி பொட்டில் இருந்து ஆறு தீப்பொறிகளை வெளியிட்டு அக்னி தேவனிடம் (நெருப்புக் கடவுள்) அவற்றைக் கொடுக்க, அவர் சூடு தாங்காமல் அதை பூமாதேவியிடம் (பூமி தெய்வம்) கொடுத்து விட, அவளால் அந்த சூட்டை கையில் வைத்துக் கொள்ள முடியாமல் போய், கங்கா (பார்வதி மாதாவின் சகோதரி) மாதாவிடம் கொடுக்க, அதைப் பெற்றுக் கொண்ட பூமா தேவி அதை வெந்நீராக மாற்றி புதருக்குள் தள்ளி விட்டாள். அதையே ஆறு சப்த கன்னிகைகள் எடுத்து பாலூட்ட, அவர்களிடம் இருந்து அந்த ஆறு குழந்தைகளையும் பெற்றுக் கொண்ட பார்வதி தேவி அவர்களை அணைத்துக் கொள்ள, அந்த ஆறு குழந்தைகளும், ஆறு முகம் கொண்ட ஒரே குழந்தையாக்கி விட்டார்கள். இப்படியாக சனத்குமாரரே இன்னொரு பிறவி எடுத்து முருகனாக அவதரித்தார் என்பதாக புராணக் கதை உள்ளது. சனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்று சந்தோக்ய உபநிஷத்திலும் சொல்லப்பட்டு உள்ளதாம்.

அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் குடந்தை

[10/2, 02:23] +91 95788 89664: *🕉🌻🌻🌻உ🌼🌼🌼🕉* *🚩 🕉️ௐ நமசிவாய🕉️ 🚩* *📖 பஞ்சாங்கம்* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *🎋 தை : 𝟮𝟴.* *🌻 𝟭𝟬• 𝟬𝟮 •𝟮𝟬𝟮𝟱.* *🌼திங்கட்கிழமை.* *♋ 1】வருடம்:~ ஸ்ரீ குரோதி:* *{ குரோதி நாம சம்வத்ஸரம்}* *🩸 2】அயனம்:~ உத்தராயணம்.* *🪵 3】ருது:~ ஹேமந்த - ருதௌ.* *🦢 4】மாதம்:~ தை:~* *( மகர -மாஸே ).* *🏮 5】பக்ஷம்:~ சுக்ல -பக்ஷம்:* *♨️ 6】திதி:- திரியோதசி:-* *இரவு: 08.08 வரை, பின்பு சதுர்த்தசி.* *✴️ 7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல- திரியோதசி.* *🌻 8】நேத்திரம்: 2 - ஜீவன்: 1.* *📅 9】நாள்:~ திங்கள்- கிழமை, { இந்து - வாஸரம்.}* *சம -நோக்கு நாள்:* ↔️ *🌟 10】நக்ஷத்திரம்:~* *புனர்பூசம்: இரவு: 07.12 வரை பின்பு பூசம்.* *🌸 11】நாமயோகம்:-* *முற்பகல்: 11.02 வரை ப்ரீதி, பின்பு ஆயுஷ்மான்.* *🦆 12】கரணம்: ~ 09.00- 10.30.* *காலை: 08.28 வரை கௌலவம், பின்பு இரவு: 08.08 வரை தைதுலம், பின்பு கரசை.* *💎 13】அமிர்தாதி- யோகம்:-* *காலை: 06.34 வரை சித்தயோகம், பின்பு இரவு 07.12 வரை அமிர்தயோகம், பின்பு சித்தயோகம்.* *⏰ நல்ல - நேரம்:-* *காலை:~ 09.30 - 10.30 AM.* *மாலை:~ 04.30 - 05.30 PM.* *🕰 கௌரி - நல்ல நேரம்:* *பகல் :~ 01.30 - 02.30 PM.* *இரவு: ~ 07.30 - 08.30 PM.* *🌐 ராகு காலம்:-* *காலை:~ 07.30 - 09.00 AM.* *🐃 எமகண்டம்:-* *காலை:~ 10.30 - 12.00 PM.* *☄ குளிகை:-* *பிற்பகல்:~ 01.30 - 03.00 PM.* *🧶( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)* *🌅 சூரிய - உதயம்:* *காலை:~ 06.35 AM.* *🌄 சூரிய- அஸ்தமனம்:-* *மாலை: ~ 06.11 PM.* *🩸 சந்திராஷ்டம நட்சத்திரம்:-* *கேட்டை - மூலம்.* *🌺 ௲லம்: ~ கிழக்கு.* *🍚 பரிகாரம்: ~ தயிர்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘 *_🔔இன்றைய-நன்நாளில்: 🙏_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🕉 சோமவார பிரதோஷம்.* *👩❤️👨 சுபமுகூர்த்த நாள்.* *☂ சர்வதேச குடை தினம்.* *🔅🔅⭕⭕⭕️🔅ॐ🔅⭕⭕🔅🔅* 🚩 *_தின- சிறப்புக்கள்:_* 🚩 *━━━━━━━ॐ━━━━━━━* *🌴🌴 தை: 𝟮𝟴🌴🌴* *⚜️ 𝟭𝟬• 𝟬𝟮 •𝟮𝟬𝟮𝟱 ⚜️* *🦚 திங்கட்கிழமை.*🦜 🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷 *_🔯 சந்திராஷ்டம ராசி_:* *━━━━━━━ॐ━━━━━━* *💥 முற்பகல்: 11.44 வரை விருச்சிகம் பின்பு தனுசு ராசி.* 🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘 *_🛕ஸ்தல- விசேஷங்கள்:_* *◦•●◉✿✿◉●•◦ॐॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில் மாலை சோமவார வழிபாடு. & ஸ்ரீகுற்றம்பொருத்த நாதர் ஆலயத்தில் மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.* *🪔 மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலில் தந்தப் பல்லக்கில் நாட்கதிரறுப்பு விழா.* *🪔 சகல சிவாலயங்களிலும் மாலை நந்தீஸ்வர பகவானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனை.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━━* *🪦 ஸ்ரீ சிவபெருமானை வழிபாடு செய்து வர கர்ம வினைகள் நீங்கும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 உயர் பதவிகள் ஏற்க சாதகமான நாள்.* *🌟 வியாபார பணிகளை செய்ய ஏற்ற நாள்.* *🌟 முக்கிய பிரமுகர்களை சந்திக்க நல்ல நாள்.* *🌟 புதிய ஆடைகளை அணிவதற்கு சிறந்த நாள்.* 🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠 *_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்:★★★★📝_* *════════ॐ═════════* *🌊 நீரில் எல்லா தேவதைகளும் உறைகின்றனர் நீர் நிலைகளில் ஆடை இன்றி குளிப்பதும், நீரில் எச்சில் உமிழ்வதும் மலம் கழுவுவதும் பாவச்செயலாகும்.* ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️ *_♊ லக்ன- நேரம் :_* *═════ॐ═════* *_📖 ( திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது. )_* *🏹 தனுசு - லக்னம்:-* *காலை: 02.50 - 04.56 AM வரை.* *🐴 மகரம் - லக்னம்:-* *காலை: 04.57 - 06.55 AM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:-* *காலை: 06.56 - 08.38 AM வரை.* *🐡 மீனம் - லக்னம்:-* *காலை: 08.39 - 10.19 AM வரை.* *♈ மேஷம் - லக்னம்:-* *பகல்: 10.20 - 12.04 PM வரை.* *🐂 ரிஷபம் - லக்னம்:* *பகல்: 12.05 - 02.06 PM வரை.* *🤼♀ மிதுனம் - லக்னம்:-* *பகல்: 02.07 - 04.18 PM வரை.* *🦀 கடகம் லக்னம்:-* *மாலை: 04.19 - 06.26 PM வரை.* *🦁 சிம்மம் லக்னம்:* *இரவு: 06.27 - 08.28 PM வரை.* *👩🦰 கன்னி லக்னம்:-* *இரவு: 08.29 - 10.28 PM வரை.* *⚖ துலாம் - லக்னம்:-* *இரவு: 10.29 - 12.34 AM வரை.* *🦀 விருச்சிகம் லக்னம்:-* *இரவு: 12.35 - 02.45 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *🚩திங்கள்கிழமை - ஓரை.* *🍃ஓரைகளின்- காலங்கள்.* ♊♊♊♊♊♊♊♊♊♊♊ *🌄 காலை: 🔔🔔✅* 6-7. சந்திரன்.💚 👈சுபம் ✅ 7-8. சனி ❤👈அசுபம் ❌ 8-9. குரு. 💚 👈சுபம் ✅ 9-10. .செவ்வா.❤ 👈அசுபம் ❌ 10-11. சூரியன்.❤ 👈அசுபம் 11-12. சுக்கிரன்.💚 👈சுபம் ✅ *☀️ பிற்பகல்: 🔔🔔* 12-1. புதன். 💚 👈சுபம் ✅ 1-2. சந்திரன்.💚 👈சுபம் ✅ 2-3. சனி ❤👈அசுபம் ❌ *🎇 மாலை: 🔔🔔* 3-4. குரு. 💚 👈சுபம் ✅ 4-5. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 5-6. சூரியன்.❤ 👈அசுபம் ❌ 6-7. சுக்கிரன்.💚 👈சுபம் ✅ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ [10/2, 02:23] +91 95788 89664: 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 *🕉️ராசி பலன்கள்* *🌈 தை: 𝟮𝟴 🇮🇳* *🌼திங்கட்கிழமை 🦜* *📆 𝟭𝟬•𝟬𝟮•𝟮𝟬𝟮𝟱 🦚* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* விவசாய பணிகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். புதிய வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம். ⭐️அஸ்வினி : ஆரோக்கியத்தில் கவனம். ⭐️பரணி : முன்னேற்றமான நாள். ⭐️கிருத்திகை : புத்துணர்ச்சியான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். நவீன தொழில்நுட்ப கருவிகள் மீதான ஈடுபாடு மேம்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்த நிலைகள் குறையும். அமைதி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம். ⭐️கிருத்திகை : மகிழ்ச்சியான நாள். ⭐️ரோகிணி : மேன்மையான நாள். ⭐️மிருகசீரிஷம் : மந்தநிலை குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼♀_* வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். வியாபார பணிகளில் வரவுகள் உண்டாகும். முகத்தில் பொலிவுகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்கு விஷயங்களில் மாற்றம் ஏற்படும். கலைகளை கற்கும் ஆர்வம் அதிகரிக்கும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். பிரீதி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு நிறம். ⭐️மிருகசீரிஷம் : சிந்தித்துச் செயல்படவும். ⭐️திருவாதிரை : ஆதரவான நாள். ⭐️புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கணவன், மனைவி இடையே அனுசரித்துச் செல்லவும். விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தை பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் உருவாகும். தோற்றப்பொலிவில் சில மாற்றம் உண்டாகும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். லாபம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம். ⭐️புனர்பூசம் : நெருக்கடியான நாள். ⭐️பூசம் : சிந்தனைகள் மேம்படும். ⭐️ஆயில்யம் : முடிவுகளில் கவனம். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* உலகம் பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில செலவுகள் இருந்தாலும் சமாளிப்பதற்கான சூழல் அமையும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் காணப்படும். நட்பு மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : கருநீல நிறம். ⭐️மகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ⭐️பூரம் : இன்னல்கள் குறையும். ⭐️உத்திரம் : மாற்றமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சேமிப்பு சார்ந்த எண்ணம் மேம்படும். பணி சார்ந்த சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உதவி கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம். ⭐️உத்திரம் : புதுமையான நாள். ⭐️அஸ்தம் : மாற்றமான நாள். ⭐️சித்திரை : புரிதல் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* வாகனப் பகுதிகளை சீர் செய்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கடன் விசயங்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். அரசுப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பெருமை மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️சித்திரை : அலைச்சல் உண்டாகும். ⭐️சுவாதி : கருத்துக்களில் கவனம் ⭐️விசாகம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டு செயல்களில் ஆர்வம் மேம்படும். நன்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம். ⭐️விசாகம் : குழப்பங்கள் அகலும். ⭐️அனுஷம் : ஆதரவான நாள். ⭐️கேட்டை : ஆர்வம் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி: 🏹_* மறைமுகமான சில விமர்சனங்கள் தோன்றி மறையும். பயணங்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வேலை ஆட்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிலும் திட்டமிட்டு செயல்படவும். விவேகம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️மூலம் : அலைச்சல் உண்டாகும். ⭐️பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும். ⭐️உத்திராடம் : திட்டமிட்டு செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சிறு கடன்களை அடைப்பீர்கள். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நேர்மை வெளிப்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம். ⭐️உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும். ⭐️திருவோணம் : புரிதல் மேம்படும் ⭐️அவிட்டம் : மகிழ்ச்சியான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு சூழல் அமையும். பயணங்களால் மகிழ்ச்சியான தருணம் அமையும். நினைத்த காரியம் கைகூடி வரும். வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர்கள். பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம். ⭐️அவிட்டம் : அனுகூலம் உண்டாகும். ⭐️சதயம் : மகிழ்ச்சியான நாள். ⭐️பூரட்டாதி : புதுமையான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* புதிய தொழில்நுட்ப துறைகள் தொடர்பான தேடல்கள் பிறக்கும். குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சூட்சமங்களை உணர்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் மேம்படும். பணிவு வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். ⭐️பூரட்டாதி : தேடல்கள் பிறக்கும். ⭐️உத்திரட்டாதி : புரிதல் அதிகரிக்கும். ⭐️ரேவதி : மதிப்புகள் மேம்படும். *┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

*ஸ்ரீராமஜயம்* *காட்டேரி அம்மன் உருவான கதை* காட்டேரி அம்மன் பார்வதி தேவியின் வடிவமாகக் கருதப்படுகிறார். அவர் நகரத்தின் காவல் தெய்வமாக இருக்கிறார். காட்டேரி அம்மன் உருவான கதையைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம். ஒரு சமயம் பரமசிவனும், பார்வதி தேவியும் தூங்கச் சென்றனர். பரமசிவன் நன்றாகத் தூங்கிவிட்டார். அவர் தூங்கிய பிறகு எப்போதும் கிளம்புவது போல பார்வதி தேவி கிளம்பி சென்று விட்டார். அன்று மட்டும் தற்செயலாக பரமசிவன் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டார். பரமசிவன் சுற்றும் முற்றும் பார்த்தார், பார்வதி தேவியை காணவில்லை. அவரைத் தேடிப்பார்த்துவிட்டு பரமசிவன் மீண்டும் தூங்கிப்போனார். தனது வேலையை முடித்துக்கொண்ட பார்வதி தேவி ஒன்றும் தெரியாதது போல பரமசிவன் அருகில் வந்து படுத்துக்கொண்டார். 'இரவு எங்கே சென்றாய்?' என்று பரமசிவன் பார்வதி தேவியிடம் கேட்க, 'எனக்குத் தூக்கம் வரவில்லை. அதனால் உலாவி விட்டு வந்தேன்' என்றார். அதற்கு மேல் பரமசிவன் எதுவும் கேட்கவில்லை. மறுநாள் இரவு பரமசிவனுக்கு தூக்கம் வரவில்லை. நடு இரவில் பார்வதி தேவி வழக்கம் போல் கிளம்பினாள். அவளுக்குத் தெரியாமல் பரமசிவன் அவளைப் பின்தொடர்ந்து சென்றார். பார்வதி தேவி சுடுகாட்டிற்குச் சென்று விகாரமான உருவம் எடுத்து, அங்கிருக்கும் பிணங்களை எடுத்துச் சாப்பிட்டாள். இதைப் பார்த்த சிவபெருமான் அதிர்ச்சியடைந்தார். இதற்காகத்தான் பார்வதி தேவி தினமும் வருகிறார் என்பதை உறுதி செய்துக்கொண்டு வீடு திரும்பினார். பார்வதி தேவியின் இந்தச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு திட்டம் போட்டார் சிவபெருமான். பார்வதி தேவி செல்லும் சுடுகாட்டு வழியில் அகலமாகவும், ஆழமாகவும் ஒரு குழியைத் தோண்டினார். அதன் மீது தழைகளைப் போட்டு மூடிவிட்டு வந்தார். அன்றைய தினமும் நள்ளிரவு வந்தது. பார்வதி தேவி சுடுகாட்டிற்குப் புறப்பட்டார். சிவபெருமானும் அவரைப் பின்தொடர்ந்தார். மிகவும் ஆர்வமாக சென்ற பார்வதி தேவி அங்கிருந்த குழியில் விழுந்தார். பின்னாடியே சிவபெருமான் வந்து நிற்பதை பார்த்த பார்வதி தேவி அவரிடம் மன்னிப்பு கேட்டார். அதற்கு சிவபெருமான், 'உன்னை என்னால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. உன்னில் இருக்கும் ராட்சஸ குணத்தை விட்டுவிட்டு வந்தால் மட்டுமே உன்னை ஏற்றுக்கொள்வேன்' என்று கூறினார். 'அப்படியே செய்கிறேன். இந்தக் குழியிலேயே அந்த ராட்சஸ குணத்தை விட்டு வருகிறேன். என்னை வணங்குபவருக்கு நான் நல்லதே செய்வேன்' என்றார் பார்வதி தேவி. குழியில் இருந்து வெளியே வந்ததும் அந்தக் குழியை மூடினார் சிவபெருமான். இன்றும் புதையுண்ட பார்வதி தேவியின் சக்தி பூமிக்கடியில் உள்ளதாக நம்பப்படுகிறது. அந்தக் காட்டேரியம்மனே காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் வழிபடப்படுகிறார்.🍀

[9/2, 02:41] +91 95788 89664: *🕉️🌹🌹🌼உ🌹🌹🌸🕉* *🚩🕉️ௐ நமசிவாய🕉️🚩* *📖 பஞ்சாங்கம்* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *🎋 தை : 𝟮𝟳.* *🌼𝟬𝟵• 𝟬𝟮 •𝟮𝟬𝟮𝟱.* *🌞ஞாயிற்றுகிழமை.* *🕉 1】வருடம்: ஸ்ரீ குரோதி:* *[ குரோதி - நாம சம்வத்ஸரம் ]* *🩸 2】அயனம்:~ உத்தராயணம்.* *🌐 3】ருது:~ ஹேமந்த - ருதௌ.* *🌴 4】மாதம்:~ தை:-* *( மகர - மாஸே ).* *🏮 5】பக்ஷம்:~ சுக்ல - பக்ஷம்:* *🌙 வளர் - பிறை.* *♨️ 6】திதி:~ துவாதசி:-* *இரவு: 08.47 வரை, பின்பு திரியோதசி.* *🔥 7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல- துவாதசி:* *🌻 8】நேத்திரம்: 2 - ஜீவன்: 1.* *💠 09 】நாள்: ~ ஞாயிறு-கிழமை. { ஆதித்ய வாஸரம் } ~* *மேல் - நோக்கு நாள்.* ⬆️ *🌟 10】நக்ஷத்திரம்:~* *திருவாதிரை:- இரவு: 07.17 வரை பின்பு புனர்பூசம்.* *🦋 11】நாம யோகம்:* *பிற்பகல்: 12.59 வரை விஷ்கம்பம், பின்பு ப்ரீதி.* *💎 12】அமிர்தாதி - யோகம்:-* *இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம்.* *🐿 13】கரணம்: ~ 10.30 -12.00.* *காலை: 09.21 வரை பவம், பின்பு இரவு: 08.47 வரை பாலவம், பின்பு கௌலவம்.* *🦚 நல்ல நேரம்:-* *காலை: ~ 07.30 - 08.30 AM.* *மாலை: ~ 03.30 - 04.30 PM.* *🐿 கௌரி- நல்ல நேரம்:-* *காலை: 10.30 - 11.30 AM.* *மதியம்: 01.30 - 02.30 PM.* *🌎 ராகு- காலம்:-* *மாலை: ~ 04.30 - 06.00 PM.* *🐃 ௭மகண்டம்:-* *பகல்: ~ 12.00 - 01.30. PM.* *🌻 குளிகை:-* *மாலை: ~ 03.00 - 04.30. PM.* *💈 ( குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் ஹம்செய்யும் செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)* *🌅 சூரிய- உதயம்:~* *காலை: ~ 06.35 AM.* *🌄 சூரிய- அஸ்தமனம்:~* *மாலை: ~ 06.10 PM.* *🌎 சந்திராஷ்டம நட்சத்திரம்:-* *அனுஷம், - கேட்டை.* *💢 ௲லம்: ~ மேற்கு.* *🧆 பரிகாரம்: ~ வெல்லம்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘 *_🔔 இன்றைய-நன்நாளில்: 🙏_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🐚 வராஹ துவாதசி.* *👩❤️👨 உலக திருமண தினம்.* *🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅* *_🚩 தின- சிறப்புக்கள்:- 🚩_* *══════ॐ════════* *_🌴🌴 தை :~ 𝟮𝟳 🌴🌴_* *🌼🌼 𝟬𝟵• 𝟬𝟮 •𝟮𝟬𝟮𝟱 🌻🌻* *🌞ஞாயிற்றுகிழமை.* 🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷 *_🔯 சந்திராஷ்டம ராசி:_* *══════ॐ══════* *🪐 இன்றைய நாள் முழுவதும் விருச்சிகம் ராசி.* 🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠 *_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_* *•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 காஞ்சி உலகளந்த பெருமாள் திருக்கோயிலில் சுவாமி பவனி வரும் காட்சி.* *🪔 கோவை ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஆலயத்தில் சுவாமி மயில் வாகனத்தில் பவனி வரும் காட்சி.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🪦 ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரரை வழிபட தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 மந்திரம் ஜெபிக்க உகந்த நாள்.* *🌟 தானியத்தை களஞ்சியத்தில் சேர்ப்பதற்கு நல்ல நாள்.* *🌟 உழவு மாடுகளை வாங்குவதற்கு ஏற்ற நாள்.* *🌟 கிணறு வெட்ட சாதகமான நாள்.* *🌟 கண்ணூறு கழிக்க, சூரிய வழிபாடு, ஆரோக்ய ஸ்நானம் செய்திட உகந்த நாள்.* 🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵 *_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல் :★★★★_:* *━━━━━━━ॐ━━━━━━━━* *🌳 நெல்லி ஆயுளை வளர்க்கும்:* *ஆரோக்கியம் தரும். அதனடியில் மகாலட்சுமி உறைகிறாள். நெல்லி திருமாலின் அருள் பெற்றது. ஹரிபலம் என்று இதற்கு ஒரு பெயர். நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள். துவாதசியன்று நெல்லிக்காய் சேர்த்தால்தான் ஏகாதசிப் பலன் உண்டு.* ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️ *_♊ லக்ன- நேரம்:-_* •━━••✦✦•✤•✤•✦✦••━━• *_❄️ ( திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது. )_* *🏹 தனுசு - லக்னம்:* *காலை: 02.54 - 05.00 AM வரை.* *🐴 மகரம் - லக்னம்:* *காலை: 05.01 - 06.59 AM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:* *காலை: 07.00 - 08.42 AM வரை.* *🐠 மீனம் - லக்னம்:-* *காலை: 08.43 - 10.23 AM வரை.* *♈ மேஷம் - லக்னம்:-* *காலை: 10.24 - 12.08 PM வரை.* *🐂 ரிஷபம் லக்னம்:-* *பகல்: 12.09 - 02.10 PM வரை.* *🤼♀ மிதுனம் - லக்னம்:-* *பகல்: 02.11 - 04.22 PM வரை.* *🦀 கடகம் - லக்னம்:-* *மாலை: 04.23 - 06.30 PM வரை.* *🦁 சிம்மம் - லக்னம்:-* *மாலை: 06.31 - 08.32 PM வரை.* *🙎♀ கன்னி - லக்னம்:-* *இரவு: 08.33 - 10.32 PM வரை.* *🏹 துலாம் - லக்னம்:-* *இரவு: 10.33 - 12.38 AM வரை.* *🦂 விருச்சிகம் லக்னம்:-* *இரவு: 12.39 - 02.49 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *🚩ஞாயிற்றுக்கிழமை- ஓரை* *⛲ஒரைகளின்- காலங்கள்.* ♊♊♊♊♊♊♊♊♊♊♊ *🌄 காலை: 🔔🔔* 6-7. சூரியன்.👈 அசுபம்.❌ 7-8. சுக்கிரன்.💚 👈சுபம் ✅ 8-9.. புதன். 💚 👈சுபம் ✅ 9-10.. சந்திரன்.💚 👈சுபம் 10-11. சனி.. ❤👈அசுபம் ❌ 11-12. குரு. 💚 👈சுபம் ✅ *☀️ பிற்பகல்: 💚💚* 12- 1. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 1-2. சூரியன்.❤ 👈அசுபம் ❌ 2-3. சுக்கிரன்.💚 👈சுபம் ✅ 3-4. புதன். 💚 👈சுபம் ✅ *☄️ மாலை: 🔔🔔* 4-5. சந்திரன்.💚 👈சுபம் ✅ 5-6 சனி.. ❤👈அசுபம் ❌ 6-7 குரு. 💚 👈சுபம் ✅ *⏰ நல்ல நேரம் பார்த்து , நல்ல- ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 🕰️* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ [9/2, 02:41] +91 95788 89664: 🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞 *🕉️ராசி பலன்கள்* *🌈 தை: 𝟮𝟳 🇮🇳* *🌞ஞாயிற்றுகிழமை 🦜* *📆 𝟬𝟵•𝟬𝟮•𝟮𝟬𝟮𝟱 🦚* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வியாபாரம் நிமித்தமான அலைச்சல் உண்டாகும். இணையத் துறைகளில் திறமைகள் வெளிப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். கணவன், மனைவி இடையே நெருக்கம் மேம்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மேன்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம். ⭐️அஸ்வினி : திறமைகள் வெளிப்படும். ⭐️பரணி : விட்டுக்கொடுத்துச் செல்லவும். ⭐️கிருத்திகை : ஆதரவான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். காப்பீடு செயல்களில் ஆர்வம் உண்டாகும். வாசனை திரவிய பணிகளில் மேன்மை உண்டாகும். தாய் வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். அத்தியாவசியமான தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர்வு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம். ⭐️கிருத்திகை : மதிப்புகள் அதிகரிக்கும். ⭐️ரோகிணி : மேன்மை உண்டாகும். ⭐️மிருகசீரிஷம் : தேவைகள் நிறைவேறும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼♀_* மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். வியாபார பணியில் மேன்மை உண்டாகும். எதிலும் திருப்தி அல்லாத சூழல் அமையும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. அதிகாரிகளால் அலைச்சல்கள் உண்டாகும். ஆதரவு மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம். ⭐️மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள். ⭐️திருவாதிரை : மாற்றமான நாள். ⭐️புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். தவறிய சில பொருட்கள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தடைப்பட்டு வந்த ஒப்பந்த பணிகள் சாதகமாகும். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். கடன் சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். முயற்சி மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம். ⭐️புனர்பூசம் : பக்குவம் பிறக்கும். ⭐️பூசம் : சிந்தனை மேம்படும். ⭐️ஆயில்யம் : விவேகம் வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வருமான வாய்ப்பை மேம்படுத்துவீர்கள். இழுபறியான சில விஷயங்களை முடிப்பீர்கள். கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். நன்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம். ⭐️மகம் : பொறுப்புகள் கிடைக்கும். ⭐️பூரம் : வாய்ப்புகள் மேம்படும். ⭐️உத்திரம் : பயணங்கள் சாதகமாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். உறவுகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். பணி நிமித்தமான சில நுட்பங்களை அறிவீர்கள். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். துணைவர் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு காரியங்களில் ஆதரவுகள் மேம்படும். போட்டி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம். ⭐️உத்திரம் : ஒத்துழைப்பான நாள். ⭐️அஸ்தம் : தெளிவுகள் பிறக்கும். ⭐️சித்திரை : ஆதரவுகள் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* விலகிச் சென்றவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் சாதகமாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். அலுவல் பணிகளில் துரிதத்துடன் செயல்படுவீர்கள். புதுவிதமான வாய்ப்புகள் உருவாகும். கலைத்துறைகளில் இருப்பவர்களின் சந்திப்புகள் கிடைக்கும். நீண்ட தூர பயண சிந்தனைகள் உண்டாகும். முதலீடுகள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம். ⭐️சித்திரை : உதவிகள் சாதகமாகும். ⭐️சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும். ⭐️விசாகம் : லாபகரமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* மற்றவர்களின் செயல்பாடுகளில் குறை கூறாமல் இருக்கவும். வியாபார பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். மறைமுகமான சில தடைகளால் பணிகளில் தாமதம் உண்டாகும். வாகன பழுதுகள் மூலம் விரயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் நிதானம் அவசியமாகும். இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம் விசாகம் : சிந்தித்து செயல்படவும். அனுஷம் : விரயம் உண்டாகும். கேட்டை : குழப்பமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி: 🏹_* குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். போட்டித்தேர்வுகளில் சாதகமான சூழல் உண்டாகும். மறைமுக திறமைகள் வெளிப்படும். சுபகாரியம் எண்ணங்கள் கைகூடிவரும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐️மூலம் : அறிமுகம் ஏற்படும். ⭐️பூராடம் : சாதகமான நாள். ⭐️உத்திராடம் : முடிவுகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். விருந்தினர்களின் வருகைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். லாபம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். ⭐️உத்திராடம் : ஒத்துழைப்பு மேம்படும். ⭐️திருவோணம் : மதிப்புகள் உயரும். ⭐️அவிட்டம் : வாய்ப்புகள் சாதகமாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணம் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். கவனம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️அவிட்டம் : பிரார்த்தனைகள் நிறைவேறும். ⭐️சதயம் : ஆர்வம் மேம்படும். ⭐️பூரட்டாதி : கனவுகள் பிறக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவீர்கள். அரசு பணிகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். வழக்கு விசயங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். எதிர்பார்த்திருந்த கடன் உதவிகள் கிடைக்கும். பகை மறையும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம். ⭐️பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள். ⭐️உத்திரட்டாதி : சிக்கல்கள் குறையும். ⭐️ரேவதி : உதவிகள் கிடைக்கும். *┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*