காங்கயம் 🦁 லைன்ஸ் ஆன்மீக தளம்
February 4, 2025 at 06:32 AM
👑எமதர்மராஜன் ஒரு குருவியை
வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்.
🐦அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த
கருடபகவான்,
🐥உடனடியாக அந்தக்குருவியை தூக்கிக் கொண்டு
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது.
🌳அந்த பொந்தில் வசித்து வந்த
ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில்
அந்த குருவியை விழுங்கிவிட்டது.
😟குருவியைக் காப்பாற்ற நினைத்து அந்த
குருவிக்கே எமனாகி விட்டோமே என்று வருந்தியது
கருடபகவான்,
😳குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது.
🤗“நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்றார் எமதர்மராஜன்"
👀நான் அந்தக் குருவியை உற்று நோக்கக் காரணம்,
🐍அந்த குருவி சில நொடிகளில்
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்த ஒரு பாம்பின் வாயால்
இறக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது;
🙇🏽அது எப்படி நிகழப் போகிறது?
என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன்.
😟அதற்குள் விதிப்படியே நடந்து விட்டது என்று கூறினார்.
👉🏻 *வாழ்க்கையில் என்ன நடக்கவேண்டுமோ அது நிகழ்ந்தே தீரும்.*
* *அதனால் அதுகுறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், வாழ்க்கையை வாழுங்கள்.*
*இறைவனின் மீது முழு நம்பிக்கையை வைத்து நம்முடைய கடமையை மனசாட்சியுடன் நேர்மையாக செய்தாலே நல்லதே நடக்கும்.*
🙏🙏🙏🙏🙏🙏