காங்கயம்  🦁 லைன்ஸ் ஆன்மீக தளம்
காங்கயம் 🦁 லைன்ஸ் ஆன்மீக தளம்
February 26, 2025 at 01:55 AM
அன்புடன் காலை வணக்கம் - இந்த நாள் இனிய நாள் வரலாற்றில் இன்று..... பிப்ரவரி 26 / 2025 (February 26-Wednesday) சிறப்பு நாள் *மகா சிவராத்திரி*(Maha Shivaratri)இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். ஒரு உயிரினம் முக்தி அடைய வேண்டுமானால் அந்த உயிர் மனிதனாகப் பிறக்க வேண்டும். மனிதனால் மட்டுமே முக்தி அடைய முடியும். அப்படிப்பட்ட மனித பிறவி எடுத்த நாம் முக்தி அடைய சிவ பெருமானை வழிபட மிக சிறப்பான நாள் தான் மகாசிவராத்திரி. அன்றைய தினம் நாம் காலை முதல் இரவு முழுவதும் கண்விழித்து விரதம் இருந்து சிவபெருமானை வ அபிஷேக ஆராதனை செய்து வழிபட வேண்டும். மாசி மகாசிவராத்திரி இன்று கோலாகலமாக கொண்டாடப்பகிறது. நாடு முழுவதும் அனைத்து சிவ ஆலயங்களிலும் நான்கு கால பூஜைகள் நடைபெறும். சிவராத்திரி என்ற பெயர் வர காரணம் அம்பாள் தான். பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது “சிவராத்திரி” என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள். சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை(சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள். சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே “சிவராத்திரி” என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று. உலகில் உயிர்கள் பிறக்கின்றன. பல இன்பங்களையும், துன்பங்களையும் அனுபவிக்கின்றன. இன்பம் வரும் போது உலகம் இனிக்கிறது. படைத்தவன் அப்போது மட்டும், நிலா போல், நம் கண்களுக்கு குளிர்ச்சியாகத் தெரிகிறான்.கஷ்டம் வந்ததும், படைத்தவனை திட்டுகிறோம். அப்போது, நம் வாயில் வரும் முக்கிய சொற்றொடர், 'இதற்காகவா என்னைப் படைத்தாய்; இதற்கு என்ன அர்த்தம்; இவ்வளவு துன்பங்களையும் அனுபவித்து, நான் இங்கே வாழ விரும்பவில்லை...' என்பது தான்.பிறந்தால் தானே கஷ்டம். பிறக்காமல் இருந்து விட்டால், பசிக்காது, பணம் தேவைப்படாது, நோய் வராது, நேரம் கெட்ட நேரத்தில் துாக்கம் வராது, உயிருக்குயிராக நேசிப்பவர்களை இழக்க வேண்டி வராது. அப்போது, ஒரு ஆத்மாவின் நிலை எப்படி இருக்கும்? அது சிவத்துடன் ஒன்றி போயிருக்கும். 'இப்படி ஒரு நிலை எனக்கு வேண்டும், சிவனே... எனக்கு அழியா, நிலையான முக்தியைக் கொடு. உன்னோடு நான் இருந்து விட்டால், எனக்கு ஏது அழிவு?' என, கேட்பதாகும். இதற்காகத்தான், ஒரு குறிப்பிட்ட நாள் இரவில், விடிய விடிய கண்விழித்து, நம் பாவங்கள் கண்டு, சூடாய் இருக்கும், சிவனுக்கு அபிஷேகம் செய்து, 'என் பாவத்தை நிவர்த்தி செய்து, உன்னோடு இணைத்துக் கொள். இந்த பூமியில் வாழும் வரை, எனக்கு போதிய வசதி செய்து கொடு...' என, வேண்டுகிறோம். அந்த நாள், மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி; அந்த நாளே சிவராத்திரி. *எல்லா உயிர்களும் சிவத்துக்குள் அடக்கம் என்பதை விளக்க, புராணக்கதை உண்டு.* பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும், தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இந்த வழக்கு சிவனிடம் வந்தது. அவர்களிடம், 'நான் வானுக்கும், பூமிக்குமாக உயர்ந்து நிற்பேன். ஒருவர், என் முடியைக் கண்டு வர வேண்டும், இன்னொருவர், என் திருவடியை பார்த்து வர வேண்டும். யார் வெற்றி பெறுகிறாரோ, அவரே பெரியவர்...' என்றார், சிவன். அன்னப்பறவை வடிவெடுத்து, உயரே பறந்தார், பிரம்மா. வராக -பன்றி வடிவெடுத்து, பூமியை அகழ்ந்து சென்றார், விஷ்ணு. இருவராலும், வெல்ல முடியவில்லை. சிவனிடம், தன்னால் திருவடியைக் காண முடியாததை ஒப்புக்கொண்டார், விஷ்ணு. முடியைப் பார்த்து விட்டதாக பொய் சொன்னார், பிரம்மா. பொய்யும், மெய்யும் சிவனை அடைய முடியாது. ஒருவர் இறந்து விட்டால், 'ஜீவன் போய் விட்டது...' என, சொல்வது உலக வழக்கம். அதாவது, அந்த உடல் பொய்யாகி விட்டது. இனி, அது எழாது என்று அர்த்தம். அந்தப் பொய்யே, பிரம்மனின் பாத்திரம். நாம், பிரம்மன்களாய் இருக்கிறோம். இந்த உலக வாழ்க்கை உண்மை என நம்பி, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு, இறைவன் திருவடியை அடைய மறுக்கிறோம். விஷ்ணுவைப் போல உண்மையாக வாழ்ந்தாலும் கூட, இந்த உடல், உண்மை என நம்பி, மருந்துகளால் அதைக் குணப்படுத்த முயற்சிக்கிறோம். அது தற்காலிக தீர்வைத் தருமே தவிர, என்றேனும் ஒருநாள் உயிர் போய் விடும். எனவே, *'சிவனே! உன்னை நிரந்தரமாக அடைய எனக்கு நீ தான் வழிகாட்ட வேண்டும்...'* என, வழிபடும் நாளே, சிவராத்திரி. சிறப்பு பிறந்த நாள் *லெவி ஸ்ட்ராஸ்*(Levi Strauss,பெப்ரவரி 26, 1829-செப்டம்பர் 26, 1902_அகவை 73)உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜீன்ஸ்(jeans)வகை ஆடையை முதன்முதலில் தயாரித்த லெவி ஸ்ட்ராஸ் ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள பட்டன்ஹேம் நகரில் பிறந்தார். பெரும்பாலும் இன்றைய அவசர உலகில் ஆண்களின் முதல் தேர்வு ஜீன்ஸ் வகை உடைகள் தான். இந்தியாவை பொறுத்தமட்டில் ஆரம்ப நாட்களில் ஜீன்ஸ் என்பது ஆடம்பர உடையாக கருதப்பட்டது. ஆனால் காலப்போக்கில் ஆண்களும் பெண்களும் விரும்பி உடுத்தும் உடையாக மாறியது. இன்று பள்ளி செல்லும் குழந்தைகளின் ஜீன்ஸ் உடுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் தங்களை நேர்த்தியாக வெளிப்படுத்துவதில் ஜீன்ஸ் உடைக்கு முக்கிய பங்கு உண்டு என்று கருதுகின்றனர். தந்தை இறந்ததும், அம்மா, சகோதரிகளுடன் அமெரிக்காவில் குடியேறினார். நியூயார்க் நகரில் சகோதரர்களின் துணிக்கடையில் வேலை பார்த்தார். கலிபோர்னியாவில் தங்கச் சுரங்கப் பணி மும்முரமாக நடந்தது. பல இடங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து வேலை பார்த்தனர். அங்கு துணி வியாபாரம் செய்தால் லாபம் கிடைக்கும் என்பதால், இவரும் சென்றார். ‘லெவி ஸ்ட்ராஸ்’ என்ற பெயரில் வியாபாரம் தொடங்கினார். நகரில் உள்ள சிறு கடைகளுக்கு மொத்தமாக துணிகளை சப்ளை செய்தார். கூடாரம் அமைக்கப் பயன்படும் கேன்வாஸ் துணியையும் அதிகம் இருப்பு வைத்திருந்தார். கேன்வாஸ் துணிகளை தவிர மற்ற துணி வகைகள் விற்றுத் தீர்ந்தன. அதை என்ன செய்வது என்று யோசித்தபடியே இருந்தார். கரடுமுரடான கருவிகள் மத்தியில் வேலை செய்வதால் பேன்ட் அடிக்கடி கிழிந்துவிடுவதாக சுரங்கத் தொழிலாளர்கள் இவரிடம் வருத்தத்தோடு கூறினர். உடனே இவர் 'கேன்வாஸ் துணியில் பேன்ட் தைத்தால், தொழிலாளர்களின் பிரச்சனையும் தீரும், தேங்கிக் கிடக்கும் தனது துணியும் தீரும்' என்று யோசித்தார். டேவிட் ஸ்டென் என்பவரையும் சேர்த்துக்கொண்டு கேன்வாஸ் பேன்ட் தைக்கும் வேலையில் இறங்கினார். இந்த உறுதியான பேன்ட் சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அவை 'டெனிம்' என பெயர் மாற்றம் அடைந்து உலகம் முழுவதும் பரவியது. பிறகு, 'ஜென்னொஸ்' என்ற நீல நிறத் துணியை வாங்கி பேன்ட் தைத்தார். அதன் பெயர் 'ப்ள10 ஜீன்ஸ்' என்று மாறி அதுவே நிலைத்துவிட்டது. அதன்பின் 'லெவி ஸ்ட்ராஸ் அண்ட் கம்பெனி' தொடங்கப்பட்டது. ஜீன்சை வேலை செய்யும்போது மட்டுமே அணிந்து வந்த அமெரிக்கர்கள் சாதாரண நேரத்திலும் அணியத் தொடங்கினர். ஹாலிவுட் மற்றும் அமெரிக்கக் கலாசாரப் பாதிப்பால் ஜீன்ஸ் உலகம் முழுக்கப் பரவத் தொடங்கியது. லேவிஸ் நிறுவனம் பெரும் லாபம் அடையத் தொடங்கியது. தனது வியாபார உத்தியாலும், கடின உழைப்பாலும் மாபெரும் வளர்ச்சி பெற்று, வெற்றிகரமான வியாபாரியாக சாதனை படைத்த லெவி ஸ்ட்ராஸ் 73வது வயதில் (1902) மறைந்தார். இன்று லேவி & ஸ்ட்ராஸ் நிறுவனம் 110 நாடுகளில் 50,000 கிளைகளோடு இயங்கி வருகிறது. நிறுவனத்தின் நிர்வாகத்தை ஸ்ட்ராசின் சகோதரர் பிள்ளைகளின் வாரிசுகளும் ஹாஸின் குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் கவனித்து வருகின்றனர். போர்ப்ஸ் பத்திரிக்கை 2015ஆம் ஆண்டு இந்தக் குடும்பத்தை உலகின் 78வது பணக்கார குடும்பமாகக் கணித்தது. *கியூலியோ நட்டா*(Giulio Natta,26 பிப்ரவரி, 1903 – 2 மே, 1979_அகவை 76) ஓர் இத்தாலிய வேதியலாளர் ஆவார். இத்தாலியில் இம்பெரியா என்னுமிடத்தில் பிறந்தார். உயர் ரக பாலிமர் வகைகளைக் கண்டுபிடித்ததற்காக 1963 ஆம் ஆண்டு வேதியலில் நோபல் பரிசு பெற்றவர். கார்ல் சீக்லெர் என்பவருடன் இப்பரிசினை கியூலியோ நட்டா பகிர்ந்துகொண்டார். சிறப்பு நினைவு நாள் *வீர் சாவர்க்கர்* இயற்பெயர் விநாயக தாமோதர் சாவர்க்கர் (Vinayak Damodar Savarkar,மே 28, 1883-பெப்ரவரி 26, 1966_அகவை 82). இவர் 1883-ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலத்தில் நாசிக்கு அருகில் பாகுர் என்ற கிராமத்தில் தாமோதர் பந்த சாவர்க்கர், இராதா பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். சாவர்க்கர் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பங்குகொண்ட ஒரு குறிப்பிடத்தகுந்தவர். இவரை இவருடைய பற்றாளர்கள் "வீர் சாவர்க்கர்" என்றழைக்கின்றனர். இவர் ஆங்கிலேயரால் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையைப் பெற்றவர். வேறு யாரும் இவ்வளவு ஆண்டுக்கால சிறைத்தண்டனை பெற்றவர்கள் அல்லர். இவர் ஆங்கிலேயரைக் கடுமையாக எதிர்த்ததால் மிகக் கடுமையாக நடத்தப்பட்டார் என்று கருதப்படுகின்றது. இந்திய சுதந்திரத்திற்காக இந்தியாவில் அபிநவ பாரத சங்கத்தையும், இலண்டனில் சுதந்திர இந்திய சங்கத்தையும் உருவாக்கினார். இந்திய விடுதலை இயக்கம்-1857 என்ற நூலை எழுதினார். இந்து மகாசபையை உருவாக்கினார். 1898-ல் மகாராட்டிராவில் இராண்ட மற்றும் ஐரசட்டு ஆகியோரைக் கொன்றதற்காக சபேகர் சகோதாரர்கள் தூக்கிலிடப்பட்டனர். அது சாவர்க்கரைக் கடுமையாகப் பாதித்தது. அவர் 15- ஆவது வயதிலேயே இந்திய சுதந்திரத்திற்காக துர்கா தேவி முன்பு சபதம் எடுத்தார் என்று கூறப்படுகின்றது. 1901-ஆம் ஆண்டு யமுனா பாயை மணந்தார். 1902-இல் பெர்கசன் கல்லூரியில் சேர்ந்தார். புனேயில் அபிநவ பாரத சங்கத்தை ஏற்படுத்தினார். பின்னர் திலகரின் சுயராச்சியக்கட்சியில் சேர்ந்தார். பாலகங்காதர திலகரே இவரது அரசியல் குரு ஆவார். இவரது வீரம் மிக்க சொற்பொழிவுகளால் எரிச்சலுற்ற ஆங்கில அரசு அவரைக் கல்லூரியில் இருந்து நீக்கியது. ஆனால் அவர் தேர்வு எழுதி பட்டம் பெற்றார். 1905-ல் திலகரின் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார். ஜூன் 1906-ல் பாரிஸ்டர் படிப்புக்கு இலண்டன் சென்றார். அங்கே இந்தியா அவுசு என்ற இடத்தில் இந்திய மாணவர்களைச் சேர்த்து சுதந்திர இந்திய சங்கத்தை உருவாக்கினார். அங்கே முக்கிய இந்திய விழாக்கள் கொண்டாடப்பட்டன. அங்கே கூடுபவர்களிடம் இந்திய சுதந்திரம் பற்றி எடுத்துக் கூறினார். அதில் பெண்களும் இருந்தனர். அங்கே குண்டுகள் தயாரிக்கவும் துப்பாக்கி சுடவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் குறித்து அறிய இயலாமல் இசுக்காட்லாந்து காவல் துறையினரே திணறினர். அவர் ஆயுதங்கள் மூலம் இந்திய சுதந்திரத்தை அடைய வழி தேடினார். இந்தியாவில் இருக்கும் ஆங்கில அதிகாரிகள் சிப்பாய்க் கலகம் என்று பூசி மெழுகியது கலகமோ, கலவரமோ இல்லை. அதை விரிவாக ஆராய்ச்சி செய்து அது இந்திய சுதந்திரப் போராட்டம்தான் என்பதை நிரூபிக்கும் "இந்திய சுதந்திரப் போராட்டம்-1857" என்னும் நூலை எழுதினார். அது வெளிவரும் முன்பே தடை செய்யப்பட்டது. 1909-ல் இந்தப் புத்தகம் மேடம் காமா அவர்களால் நெதர்லாந்தில் அச்சிடப்பட்டு வெவ்வேறு புத்தக அட்டைகளுடன் இந்தியாவிற்குக் கடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2000 புத்தகங்கள் மிக அதிக விலையில் விற்பனை ஆயின. இது ஓர் அலையையே ஏற்படுத்தியது. பிரித்தானியரின் கணக்குப்படி ஒரு புத்தகம் ஆறு பேரால் படிக்கப்பட்டது. இந்தப் புத்தகம் பின்னர் பகத்சிங்கால் வெளியிடப்பட்டது. 1909-ல் சாவர்க்கரின் சீடரான மதன்லால் டிங்கரா இலண்டனில் சர். கர்சன் வில்லியைச் சுட்டுக் கொன்றார். நாசிக்குக் கலெக்டர் சாக்சன், ஆனந்த இலட்சுமண் கான்னாரே என்ற இளைஞனால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் இந்தியா ஹவுஸ் ஆங்கிலேயரின் கண்காணிப்புக்குக் கீழ் வந்தது. அதனால் ஆங்கில அரசு சாவர்க்கரை 1910 மார்ச் 13-ல் கைது செய்து இந்தியாவிற்கு அனுப்பியது. இந்தியாவுக்குக் கப்பலில் வரும்போது கப்பலின் கழிப்பறை ஜன்னலை உடைத்துக் கடலில் குதித்து பிரான்ஸ் நாட்டின் மார்செய்ல் துறைமுகத்தை அடைந்தார். அங்கிருந்த ஒரு பிரஞ்சுக் காவலரால் பிடிக்கப்பட்டு மீண்டும் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்மீது சட்ட விரோதமாக ஆயுதம் அனுப்பியது, மக்களைத் தூண்டும் விதமாகப் பேசியது என்று குற்றம் சாட்டி 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்தமானுக்கு அனுப்பியது. இந்திய சுதந்திரத்திற்காக போராடியதற்காக அந்தமான் சிறையில் அவர் 11 ஆண்டுகள் சிரமப்பட்டார். 1921 மே 2-இல் இரத்தினகிரி சிறைக்கு மாற்றப்பட்டார். இரத்தினகிரி சிறையில் "இந்துத்வா" என்ற நூலை எழுதினார். இரத்தினகிரி மாவட்டத்தைவிட்டு வெளியேறக் கூடாது; அடுத்த 5 வருடங்களுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று நிபந்தனை விதித்து 1924 ஜனவரி 6 அன்று விடுதலை செய்யப்பட்டார். அவர் காந்திஜியின் அரசியலைக் கடுமையாக விமர்சித்தார். இந்தியப் பிரிவினையை எதிர்த்தார். இவர் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதி. தீண்டாமையை ஒழிக்கப்பாடுபட்டார். இந்திய விடுதலைப் போரில் சாவர்க்கரைப் போல சர்ச்சைகளுக்கு ஆளான தந்தரப் போராட்ட வீரர் வேறு யாரும் இருக்க முடியாது. இங்கிலாந்து பத்திரிகைகள் இவருடைய ஒவ்வொரு அசைவையும் வரிந்துகட்டிக்கொண்டு செய்தியாக்கிக் கொண்டிருக்க, இந்தியாவில் இவரை சாமானியராகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆங்கில அரசு இவருக்கு ஐம்பதாண்டுச் சிறை தண்டனை விதித்தபோதுதான் இவர்மேல் ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் குவிந்தது. போராளி. படைப்பாளி. காவிய நாயகன். சாவர்க்கரின் ஆளுமை பன்முகப்பட்டது. 20 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு உடல்நிலை காரணமாக விடுதலை செய்யப் பட்டார்... சிறையிலிருந்து விடு பட்டபின்பும் பல புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார் . வீர சாவர்க்கர் சொத்துக்களையும் அவரது குடும்பத்தினரது சொத்துக்களையும் பறிமுதல் செய்தது பிரிட்டிஷ் அரசாங்கம் என்பது குறிப்பிடத்தக்கது, கடைசியில் தனது 82 வது வயதில் நீதிமன்ற அனுமதி பெற்று தன்னை கருணை கொலைக்கு ஆளாக்கிக்கொண்டார் சாவர்க்கர். 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1966 பிப்ரவரி 26-ல் இறந்தார். ஒருவரது வாழ்க்கையின் நோக்கம் பூர்த்தியான பிறகு, சமூகத்திற்கு சேவை செய்யும் வலிமை இழந்த நிலையில் இறப்புக்காக காத்திருக்காமல் இறப்பைச் சந்திப்பது சிறந்தது என்று கூறினார். *இந்தியாவின் முதல் லேடி டாக்டர் ஆனந்தி கோபால் ஜோஷி* (அல்லது ஆனந்திபாய் ஜோஷி) (Anandi Gopal Joshi,மார்ச் 31, 1865 –பெப்ரவரி 26, 1887_அகவை 21) ஐரோப்பிய மருத்துவத்தில் முதலாவதாகப் பட்டம் பெற்ற இரு இந்தியப் பெண்களில் இவர் ஒருவர். மற்றொருவர் கடம்பினி கங்கூலி. மகாராஷ்டிராவிலுள்ள பூனாவில் ஒரு பணக்கார வைதீக பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஆனந்திபாய்க்கு பெற்றோர் இட்ட பெயர் யமுனா. இவருக்கும் கோபால்ராவ் ஜோஷிக்கும் திருமணம் நடந்தபோது இவருக்கு 9 வயதுதான். முதல் மனைவியை இழந்த கோபால் ஜோஷி இவரைவிட 20 வயது மூத்தவர். ஜோஷி தன் மனைவிக்குப் படிப்பிலிருந்த ஆர்வத்தைக் கண்டுகொண்ட அவர் ஆனந்திபாய் கல்வி பயிலவும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் உதவினார்.ஆனந்திபாயின் 14 வது வயதில் அவருக்குப் பிறந்த ஆண் குழந்தை மருத்துவ வசதியில்லாததால் பத்தே நாட்களில் இறந்து போனது.குழந்தையின் மரணம் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மருத்துவராக வேண்டுமென்ற எண்ணம் அவருக்குள் தீவிரமாக எழுந்தது. கோபால்ராவ் ஆனந்திபாயை மருத்துவம் படிப்பதற்கு ஊக்கமளித்தார். ஆனந்திபாய்க்கு மருத்துவம் படிப்பதில் இருந்த அதீத ஆர்வமும் கோபால்ராவ் தனது மனைவியை மட்டும் மருத்துவம் படிக்க அமெரிக்கா அனுப்ப முடிவு செய்தார். மேற்கத்திய நாட்டில் மேற்படிப்புக்குச் செல்ல ஆசைப்பட்ட ஆனந்திபாயை இந்து வைதீகவாதிகள் பழித்தனர். பாராட்டி ஊக்கப் படுத்திய கிருத்துவர்களோ மதம் மாறத் தூண்டினர். ஸ்ரீராம்பூர் கல்லூரிக் கூடத்தில் ஆனந்திபாய் மக்களைக் கூட்டி அவர்களிடம் தனது மருத்துவராகும் கனவையும் அதை நிறைவேற்றத் தானும் தனது கணவரும் சந்திக்கும் பிரச்சனகளையும் விளக்கிப் பேசினார். இந்தியாவில் பெண்மருத்துவர்களின் அத்தியாவசியத்தையும் இந்தியாவில் பெண்களுக்காக ஒரு மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கவேண்டுமென்ற தனது குறிக்கோளையும் அவர்களுக்குப் புரிய வைத்தார். எந்தக் காலத்திலும் தான் கிருத்துவ மதத்திற்கு மாறமாட்டேன் என்று உறுதியும் அளித்தார். அவரது பேச்சு எங்கும் பரவி நாடு முழுவதிலிருந்தும் அவருக்கு பண உதவி வர ஆரம்பித்தது. அப்போதைய இந்திய வைசிராய் அவரது படிப்பிற்காக ரூபாய் 200 அளித்தார். 1883ல் ஆனந்திபாய் கொல்கத்தாவிலிருந்து நியூயார்க் நகருக்குக் கப்பலில் புறப்பட்டார். ஆனந்திபாய் பெண்கள் மருத்துவக் கல்லூரிக்கு (பென்சில்வேனியா) விண்ணப்பித்தார்.[3] விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அக்கல்லூரித் தலைவர் ரேச்சல் போட்லி, அவரைக் கல்லூரியில் சேர்த்துக்கொண்டார். ஆனந்திபாய் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது அவருக்கு வயது 19. அமெரிக்காவின் கடுங்குளிரும் பழக்கமில்லாத உணவும் அவரது உடல் நலத்தை மிகவும் மோசமாக்கின. காச நோய் அவரைத் தாக்கியது. அத்தனை இடர்பாடுகளையும் தாண்டி அவர் மார்ச் 11, 1886ல் மருத்துவப் பட்டம் (எம். டி) பெற்றார். அவரது ஆராய்ச்சிக் கட்டுரையின் தலைப்பு - ஆரிய இந்துக்களின் தாய்மை மருத்துவம். மருத்துவராகப் தேர்ச்சி பெற்ற அவருக்கு விக்டோரியா மகாராணி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.1886 இறுதியில் ஆனந்திபாய் இந்தியா திரும்பினார். கோலாப்பூர் சமஸ்தானத்தில் உள்ள மருத்துவமனையில் பெண்கள் மருத்துவப்பிரிவின் பொறுப்பு மருத்துவராக அவர் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமானது. அவரைத்தாக்கிய காச நோய் முற்றியதால் 1887-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந் தேதி மரணம் அடைந்தார். மரணம் அடைந்த போது ஆனந்தியின் வயது 22 தான். மரணப்படுக்கையில் இருந்தபோது ‘என்னால் முடிந்த அளவு நான் செய்துவிட்டேன்’ என்று ஆனந்தி கடைசியாக கூறினார். இந்தியாவிலும் பெண்களுக்கென்று தனி மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது அவரது பெரும் கனவு. 19 -வது நூற்றாண்டிலே புரட்சி பெண்ணாக வாழ்ந்த இவர் வாழ்க்கை போராட்டங்கள் இன்றைய பெண்கள் கல்விக்கு ஆனந்தி தொடக்க புள்ளியாக இருந்தார் நிகழ்வுகள் 364 – முதலாம் வலெந்தீனியன் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1233 – மங்கோலிய-சின் போர்: மங்கோலியர்கள் சீனாவின் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் நகரைக் கைப்பற்றினர். 1606 – இடச்சு கப்பலோட்டி வில்லியம் யான்சூன் ஆத்திரேலியாவை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். ஆனாலும் அவர் இதனை நியூ கினியின் ஒரு பகுதியாகவே கருதியிருந்தார். 1616 – பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற தனது கொள்கையைப் பரப்புவதைத் தடுப்பதற்காக கலீலியோ கலிலி உரோமைக் கத்தோலிக்க திருச்சபையினால் தடை செய்யப்பட்டார். 1658 – வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசன் கிட்டத்தட்ட அரைபகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினான். 1748 – ஜேக்கப் டி ஜொங் (இளையவர்) யாழ்ப்பாணத்தின் இடச்சுத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.[1] 1794 – கோபனாவன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது. 1815 – இத்தாலியின் எல்பாத் தீவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் அங்கிருந்து தப்பினார். 1841 – இலங்கையின் முதலாவது இசுக்கொட்லாந்து பிரெசுபிட்டேரியத் தேவாலயத்திற்கான அடிக்கல் கொழும்பு புறக்கோட்டையில் நாட்டப்பட்டது.[2] 1876 – யப்பானியக் குடிமக்களுக்கு கொரியாவில் யப்பானிய வணிக வசதிகளுக்காக மூன்று துறைமுகங்களை அமைக்க, யப்பானுக்கும் கொரியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 1909 – கினிமாக்கலர் என்ற முதலாவது வெற்றிகரமான வண்ண அசையும் திரைப்பட அமைப்பு முறை இலண்டனில் அரண்மனை அரங்கில் பொதுமக்களுக்குக் காண்பிக்கப்பட்டது. 1935 – இராபர்ட் வாட்சன்-வாட் என்பவர் இங்கிலாந்தில் நடத்திய பரிசோதனை ஐக்கிய இராச்சியத்தில் ரேடாரை உருவாக்க வழிசமைத்தது. 1936 – சப்பான் அரசைக் கவிழ்க்க நடத்தப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது. 1952 – ஐக்கிய இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார். 1960 – நியூயார்க் சென்று கொண்டிருந்த விமானம் அயர்லாந்தில் இடுகாடு ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 52 பேரில் 34 பேர் உயிரிழந்தனர். 1971 – ஐநா பொதுச் செயலர் ஊ தாண்ட் இளவேனிற் புள்ளியை புவி நாளாக அறிவித்தார். 1980 – எகிப்தும் இசுரேலும் முழுமையான தூதரக உறவை ஏற்படுத்தின. 1984 – பெய்ரூட்டில் இருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறின. 1991 – வளைகுடாப் போர்: குவைத்தில் இருந்து ஈராக்க்கியப் படைகள் வெளியேறுவதாக அதிபர் சதாம் உசேன் அறிவித்தார். 1992 – நகோர்னோ-கரபாக் போர்: ஆர்மீனிய இராணுவத்தினர் அசர்பைசானிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1993 – நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 2001 – ஆப்கானித்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது. 2013 – வெப்பக் காற்று ஊதுபை ஒன்று எகிப்தில் வீழ்ந்து வெடித்ததில் 19 பேர் உயிரிழந்தனர். 2018 – பப்புவா நியூ கினியின் ஏலா மாகாணத்தில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 31 பேர் உயிரிழந்தனர், பிறப்புகள் 1564 – கிறித்தோபர் மார்லொவ், ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1593) 1780 – கிறித்தியன் சாமுவேல் வெயிசு, செருமானியக் கனிமவியலாளர் (இ. 1856) 1802 – விக்டர் ஹியூகோ, பிரான்சிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1885) 1842 – காமில் பிளம்மாரியன், பிரான்சிய வானியலாளர் (இ. 1925) 1861 – நதியெஸ்தா குரூப்ஸ்கயா, உருசிய அரசியல்வாதி (இ. 1939) 1866 – எர்பர்ட்டு என்றி டவ், கனடிய-அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1930) 1896 – கோபால் சுவரூப் பதக், இந்தியாவின் 4வது குடியரசுத் துணைத் தலைவர் (இ. 1982) 1903 – கியூலியோ நட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியியலாளர் (இ. 1979) 1928 – ஏரியல் சரோன், இசுரேலின் 11வது பிரதமர் (இ. 2014) 1947 – தாராபாரதி, தமிழகக் கவிஞர் (இ. 2000) 1952 – தங்கேஸ்வரி கதிராமன், இலங்கை வரலாற்றாளர், எழுத்தாளர், அரசியல்வாதி (இ. 2019) 1954 – ரசிப் தைய்யிப் எர்டோகன், துருக்கியின் 12வது அரசுத்தலைவர் 1982 – லீ நா, சீன டென்னிசு வீராங்கனை 1983 – பேபே, பிரேசில்-போர்த்துக்கீசக் காற்பந்து வீரர் 1986 – மா கா பா ஆனந்த், தமிழக நடிகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் இறப்புகள் 1878 – ஏஞ்செலோ சேச்சி, இத்தாலிய வானியலாளர் (பி. 1818) 1887 – ஆனந்தி கோபால் ஜோஷி, இந்திய மருத்துவர் (பி. 1865) 1931 – ஓட்டோ வாலெக், நோபல் பரிசு பெற்ற செஅன்புடன் காலை வணக்கம் - இந்த நாள் இனிய நாள் வரலாற்றில் இன்று..... பிப்ரவரி 26 / 2025 (February 26-Wednesday) சிறப்பு நாள் *மகா சிவராத்திரி*(Maha Shivaratri)இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். ஒரு உயிரினம் முக்தி அடைய வேண்டுமானால் அந்த உயிர் மனிதனாகப் பிறக்க வேண்டும். மனிதனால் மட்டுமே முக்தி அடைய முடியும். அப்படிப்பட்ட மனித பிறவி எடுத்த நாம் முக்தி அடைய சிவ பெருமானை வழிபட மிக சிறப்பான நாள் தான் மகாசிவராத்திரி. அன்றைய தினம் நாம் காலை முதல் இரவு முழுவதும் கண்விழித்து விரதம் இருந்து சிவபெருமானை வ அபிஷேக ஆராதனை செய்து வழிபட வேண்டும். மாசி மகாசிவராத்திரி இன்று கோலாகலமாக கொண்டாடப்பகிறது. நாடு முழுவதும் அனைத்து சிவ ஆலயங்களிலும் நான்கு கால பூஜைகள் நடைபெறும். சிவராத்திரி என்ற பெயர் வர காரணம் அம்பாள் தான். பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது “சிவராத்திரி” என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள். சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை(சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள். சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே “சிவராத்திரி” என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று. உலகில் உயிர்கள் பிறக்கின்றன. பல இன்பங்களையும், துன்பங்களையும் அனுபவிக்கின்றன. இன்பம் வரும் போது உலகம் இனிக்கிறது. படைத்தவன் அப்போது மட்டும், நிலா போல், நம் கண்களுக்கு குளிர்ச்சியாகத் தெரிகிறான்.கஷ்டம் வந்ததும், படைத்தவனை திட்டுகிறோம். அப்போது, நம் வாயில் வரும் முக்கிய சொற்றொடர், 'இதற்காகவா என்னைப் படைத்தாய்; இதற்கு என்ன அர்த்தம்; இவ்வளவு துன்பங்களையும் அனுபவித்து, நான் இங்கே வாழ விரும்பவில்லை...' என்பது தான்.பிறந்தால் தானே கஷ்டம். பிறக்காமல் இருந்து விட்டால், பசிக்காது, பணம் தேவைப்படாது, நோய் வராது, நேரம் கெட்ட நேரத்தில் துாக்கம் வராது, உயிருக்குயிராக நேசிப்பவர்களை இழக்க வேண்டி வராது. அப்போது, ஒரு ஆத்மாவின் நிலை எப்படி இருக்கும்? அது சிவத்துடன் ஒன்றி போயிருக்கும். 'இப்படி ஒரு நிலை எனக்கு வேண்டும், சிவனே... எனக்கு அழியா, நிலையான முக்தியைக் கொடு. உன்னோடு நான் இருந்து விட்டால், எனக்கு ஏது அழிவு?' என, கேட்பதாகும். இதற்காகத்தான், ஒரு குறிப்பிட்ட நாள் இரவில், விடிய விடிய கண்விழித்து, நம் பாவங்கள் கண்டு, சூடாய் இருக்கும், சிவனுக்கு அபிஷேகம் செய்து, 'என் பாவத்தை நிவர்த்தி செய்து, உன்னோடு இணைத்துக் கொள். இந்த பூமியில் வாழும் வரை, எனக்கு போதிய வசதி செய்து கொடு...' என, வேண்டுகிறோம். அந்த நாள், மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி; அந்த நாளே சிவராத்திரி. *எல்லா உயிர்களும் சிவத்துக்குள் அடக்கம் என்பதை விளக்க, புராணக்கதை உண்டு.* பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும், தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இந்த வழக்கு சிவனிடம் வந்தது. அவர்களிடம், 'நான் வானுக்கும், பூமிக்குமாக உயர்ந்து நிற்பேன். ஒருவர், என் முடியைக் கண்டு வர வேண்டும், இன்னொருவர், என் திருவடியை பார்த்து வர வேண்டும். யார் வெற்றி பெறுகிறாரோ, அவரே பெரியவர்...' என்றார், சிவன். அன்னப்பறவை வடிவெடுத்து, உயரே பறந்தார், பிரம்மா. வராக -பன்றி வடிவெடுத்து, பூமியை அகழ்ந்து சென்றார், விஷ்ணு. இருவராலும், வெல்ல முடியவில்லை. சிவனிடம், தன்னால் திருவடியைக் காண முடியாததை ஒப்புக்கொண்டார், விஷ்ணு. முடியைப் பார்த்து விட்டதாக பொய் சொன்னார், பிரம்மா. பொய்யும், மெய்யும் சிவனை அடைய முடியாது. ஒருவர் இறந்து விட்டால், 'ஜீவன் போய் விட்டது...' என, சொல்வது உலக வழக்கம். அதாவது, அந்த உடல் பொய்யாகி விட்டது. இனி, அது எழாது என்று அர்த்தம். அந்தப் பொய்யே, பிரம்மனின் பாத்திரம். நாம், பிரம்மன்களாய் இருக்கிறோம். இந்த உலக வாழ்க்கை உண்மை என நம்பி, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு, இறைவன் திருவடியை அடைய மறுக்கிறோம். விஷ்ணுவைப் போல உண்மையாக வாழ்ந்தாலும் கூட, இந்த உடல், உண்மை என நம்பி, மருந்துகளால் அதைக் குணப்படுத்த முயற்சிக்கிறோம். அது தற்காலிக தீர்வைத் தருமே தவிர, என்றேனும் ஒருநாள் உயிர் போய் விடும். எனவே, *'சிவனே! உன்னை நிரந்தரமாக அடைய எனக்கு நீ தான் வழிகாட்ட வேண்டும்...'* என, வழிபடும் நாளே, சிவராத்திரி. சிறப்பு பிறந்த நாள் *லெவி ஸ்ட்ராஸ்*(Levi Strauss,பெப்ரவரி 26, 1829-செப்டம்பர் 26, 1902_அகவை 73)உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜீன்ஸ்(jeans)வகை ஆடையை முதன்முதலில் தயாரித்த லெவி ஸ்ட்ராஸ் ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள பட்டன்ஹேம் நகரில் பிறந்தார். பெரும்பாலும் இன்றைய அவசர உலகில் ஆண்களின் முதல் தேர்வு ஜீன்ஸ் வகை உடைகள் தான். இந்தியாவை பொறுத்தமட்டில் ஆரம்ப நாட்களில் ஜீன்ஸ் என்பது ஆடம்பர உடையாக கருதப்பட்டது. ஆனால் காலப்போக்கில் ஆண்களும் பெண்களும் விரும்பி உடுத்தும் உடையாக மாறியது. இன்று பள்ளி செல்லும் குழந்தைகளின் ஜீன்ஸ் உடுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் தங்களை நேர்த்தியாக வெளிப்படுத்துவதில் ஜீன்ஸ் உடைக்கு முக்கிய பங்கு உண்டு என்று கருதுகின்றனர். தந்தை இறந்ததும், அம்மா, சகோதரிகளுடன் அமெரிக்காவில் குடியேறினார். நியூயார்க் நகரில் சகோதரர்களின் துணிக்கடையில் வேலை பார்த்தார். கலிபோர்னியாவில் தங்கச் சுரங்கப் பணி மும்முரமாக நடந்தது. பல இடங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து வேலை பார்த்தனர். அங்கு துணி வியாபாரம் செய்தால் லாபம் கிடைக்கும் என்பதால், இவரும் சென்றார். ‘லெவி ஸ்ட்ராஸ்’ என்ற பெயரில் வியாபாரம் தொடங்கினார். நகரில் உள்ள சிறு கடைகளுக்கு மொத்தமாக துணிகளை சப்ளை செய்தார். கூடாரம் அமைக்கப் பயன்படும் கேன்வாஸ் துணியையும் அதிகம் இருப்பு வைத்திருந்தார். கேன்வாஸ் துணிகளை தவிர மற்ற துணி வகைகள் விற்றுத் தீர்ந்தன. அதை என்ன செய்வது என்று யோசித்தபடியே இருந்தார். கரடுமுரடான கருவிகள் மத்தியில் வேலை செய்வதால் பேன்ட் அடிக்கடி கிழிந்துவிடுவதாக சுரங்கத் தொழிலாளர்கள் இவரிடம் வருத்தத்தோடு கூறினர். உடனே இவர் 'கேன்வாஸ் துணியில் பேன்ட் தைத்தால், தொழிலாளர்களின் பிரச்சனையும் தீரும், தேங்கிக் கிடக்கும் தனது துணியும் தீரும்' என்று யோசித்தார். டேவிட் ஸ்டென் என்பவரையும் சேர்த்துக்கொண்டு கேன்வாஸ் பேன்ட் தைக்கும் வேலையில் இறங்கினார். இந்த உறுதியான பேன்ட் சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அவை 'டெனிம்' என பெயர் மாற்றம் அடைந்து உலகம் முழுவதும் பரவியது. பிறகு, 'ஜென்னொஸ்' என்ற நீல நிறத் துணியை வாங்கி பேன்ட் தைத்தார். அதன் பெயர் 'ப்ள10 ஜீன்ஸ்' என்று மாறி அதுவே நிலைத்துவிட்டது. அதன்பின் 'லெவி ஸ்ட்ராஸ் அண்ட் கம்பெனி' தொடங்கப்பட்டது. ஜீன்சை வேலை செய்யும்போது மட்டுமே அணிந்து வந்த அமெரிக்கர்கள் சாதாரண நேரத்திலும் அணியத் தொடங்கினர். ஹாலிவுட் மற்றும் அமெரிக்கக் கலாசாரப் பாதிப்பால் ஜீன்ஸ் உலகம் முழுக்கப் பரவத் தொடங்கியது. லேவிஸ் நிறுவனம் பெரும் லாபம் அடையத் தொடங்கியது. தனது வியாபார உத்தியாலும், கடின உழைப்பாலும் மாபெரும் வளர்ச்சி பெற்று, வெற்றிகரமான வியாபாரியாக சாதனை படைத்த லெவி ஸ்ட்ராஸ் 73வது வயதில் (1902) மறைந்தார். இன்று லேவி & ஸ்ட்ராஸ் நிறுவனம் 110 நாடுகளில் 50,000 கிளைகளோடு இயங்கி வருகிறது. நிறுவனத்தின் நிர்வாகத்தை ஸ்ட்ராசின் சகோதரர் பிள்ளைகளின் வாரிசுகளும் ஹாஸின் குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் கவனித்து வருகின்றனர். போர்ப்ஸ் பத்திரிக்கை 2015ஆம் ஆண்டு இந்தக் குடும்பத்தை உலகின் 78வது பணக்கார குடும்பமாகக் கணித்தது. *கியூலியோ நட்டா*(Giulio Natta,26 பிப்ரவரி, 1903 – 2 மே, 1979_அகவை 76) ஓர் இத்தாலிய வேதியலாளர் ஆவார். இத்தாலியில் இம்பெரியா என்னுமிடத்தில் பிறந்தார். உயர் ரக பாலிமர் வகைகளைக் கண்டுபிடித்ததற்காக 1963 ஆம் ஆண்டு வேதியலில் நோபல் பரிசு பெற்றவர். கார்ல் சீக்லெர் என்பவருடன் இப்பரிசினை கியூலியோ நட்டா பகிர்ந்துகொண்டார். சிறப்பு நினைவு நாள் *வீர் சாவர்க்கர்* இயற்பெயர் விநாயக தாமோதர் சாவர்க்கர் (Vinayak Damodar Savarkar,மே 28, 1883-பெப்ரவரி 26, 1966_அகவை 82). இவர் 1883-ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலத்தில் நாசிக்கு அருகில் பாகுர் என்ற கிராமத்தில் தாமோதர் பந்த சாவர்க்கர், இராதா பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். சாவர்க்கர் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பங்குகொண்ட ஒரு குறிப்பிடத்தகுந்தவர். இவரை இவருடைய பற்றாளர்கள் "வீர் சாவர்க்கர்" என்றழைக்கின்றனர். இவர் ஆங்கிலேயரால் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையைப் பெற்றவர். வேறு யாரும் இவ்வளவு ஆண்டுக்கால சிறைத்தண்டனை பெற்றவர்கள் அல்லர். இவர் ஆங்கிலேயரைக் கடுமையாக எதிர்த்ததால் மிகக் கடுமையாக நடத்தப்பட்டார் என்று கருதப்படுகின்றது. இந்திய சுதந்திரத்திற்காக இந்தியாவில் அபிநவ பாரத சங்கத்தையும், இலண்டனில் சுதந்திர இந்திய சங்கத்தையும் உருவாக்கினார். இந்திய விடுதலை இயக்கம்-1857 என்ற நூலை எழுதினார். இந்து மகாசபையை உருவாக்கினார். 1898-ல் மகாராட்டிராவில் இராண்ட மற்றும் ஐரசட்டு ஆகியோரைக் கொன்றதற்காக சபேகர் சகோதாரர்கள் தூக்கிலிடப்பட்டனர். அது சாவர்க்கரைக் கடுமையாகப் பாதித்தது. அவர் 15- ஆவது வயதிலேயே இந்திய சுதந்திரத்திற்காக துர்கா தேவி முன்பு சபதம் எடுத்தார் என்று கூறப்படுகின்றது. 1901-ஆம் ஆண்டு யமுனா பாயை மணந்தார். 1902-இல் பெர்கசன் கல்லூரியில் சேர்ந்தார். புனேயில் அபிநவ பாரத சங்கத்தை ஏற்படுத்தினார். பின்னர் திலகரின் சுயராச்சியக்கட்சியில் சேர்ந்தார். பாலகங்காதர திலகரே இவரது அரசியல் குரு ஆவார். இவரது வீரம் மிக்க சொற்பொழிவுகளால் எரிச்சலுற்ற ஆங்கில அரசு அவரைக் கல்லூரியில் இருந்து நீக்கியது. ஆனால் அவர் தேர்வு எழுதி பட்டம் பெற்றார். 1905-ல் திலகரின் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார். ஜூன் 1906-ல் பாரிஸ்டர் படிப்புக்கு இலண்டன் சென்றார். அங்கே இந்தியா அவுசு என்ற இடத்தில் இந்திய மாணவர்களைச் சேர்த்து சுதந்திர இந்திய சங்கத்தை உருவாக்கினார். அங்கே முக்கிய இந்திய விழாக்கள் கொண்டாடப்பட்டன. அங்கே கூடுபவர்களிடம் இந்திய சுதந்திரம் பற்றி எடுத்துக் கூறினார். அதில் பெண்களும் இருந்தனர். அங்கே குண்டுகள் தயாரிக்கவும் துப்பாக்கி சுடவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் குறித்து அறிய இயலாமல் இசுக்காட்லாந்து காவல் துறையினரே திணறினர். அவர் ஆயுதங்கள் மூலம் இந்திய சுதந்திரத்தை அடைய வழி தேடினார். இந்தியாவில் இருக்கும் ஆங்கில அதிகாரிகள் சிப்பாய்க் கலகம் என்று பூசி மெழுகியது கலகமோ, கலவரமோ இல்லை. அதை விரிவாக ஆராய்ச்சி செய்து அது இந்திய சுதந்திரப் போராட்டம்தான் என்பதை நிரூபிக்கும் "இந்திய சுதந்திரப் போராட்டம்-1857" என்னும் நூலை எழுதினார். அது வெளிவரும் முன்பே தடை செய்யப்பட்டது. 1909-ல் இந்தப் புத்தகம் மேடம் காமா அவர்களால் நெதர்லாந்தில் அச்சிடப்பட்டு வெவ்வேறு புத்தக அட்டைகளுடன் இந்தியாவிற்குக் கடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2000 புத்தகங்கள் மிக அதிக விலையில் விற்பனை ஆயின. இது ஓர் அலையையே ஏற்படுத்தியது. பிரித்தானியரின் கணக்குப்படி ஒரு புத்தகம் ஆறு பேரால் படிக்கப்பட்டது. இந்தப் புத்தகம் பின்னர் பகத்சிங்கால் வெளியிடப்பட்டது. 1909-ல் சாவர்க்கரின் சீடரான மதன்லால் டிங்கரா இலண்டனில் சர். கர்சன் வில்லியைச் சுட்டுக் கொன்றார். நாசிக்குக் கலெக்டர் சாக்சன், ஆனந்த இலட்சுமண் கான்னாரே என்ற இளைஞனால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் இந்தியா ஹவுஸ் ஆங்கிலேயரின் கண்காணிப்புக்குக் கீழ் வந்தது. அதனால் ஆங்கில அரசு சாவர்க்கரை 1910 மார்ச் 13-ல் கைது செய்து இந்தியாவிற்கு அனுப்பியது. இந்தியாவுக்குக் கப்பலில் வரும்போது கப்பலின் கழிப்பறை ஜன்னலை உடைத்துக் கடலில் குதித்து பிரான்ஸ் நாட்டின் மார்செய்ல் துறைமுகத்தை அடைந்தார். அங்கிருந்த ஒரு பிரஞ்சுக் காவலரால் பிடிக்கப்பட்டு மீண்டும் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்மீது சட்ட விரோதமாக ஆயுதம் அனுப்பியது, மக்களைத் தூண்டும் விதமாகப் பேசியது என்று குற்றம் சாட்டி 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்தமானுக்கு அனுப்பியது. இந்திய சுதந்திரத்திற்காக போராடியதற்காக அந்தமான் சிறையில் அவர் 11 ஆண்டுகள் சிரமப்பட்டார். 1921 மே 2-இல் இரத்தினகிரி சிறைக்கு மாற்றப்பட்டார். இரத்தினகிரி சிறையில் "இந்துத்வா" என்ற நூலை எழுதினார். இரத்தினகிரி மாவட்டத்தைவிட்டு வெளியேறக் கூடாது; அடுத்த 5 வருடங்களுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று நிபந்தனை விதித்து 1924 ஜனவரி 6 அன்று விடுதலை செய்யப்பட்டார். அவர் காந்திஜியின் அரசியலைக் கடுமையாக விமர்சித்தார். இந்தியப் பிரிவினையை எதிர்த்தார். இவர் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதி. தீண்டாமையை ஒழிக்கப்பாடுபட்டார். இந்திய விடுதலைப் போரில் சாவர்க்கரைப் போல சர்ச்சைகளுக்கு ஆளான தந்தரப் போராட்ட வீரர் வேறு யாரும் இருக்க முடியாது. இங்கிலாந்து பத்திரிகைகள் இவருடைய ஒவ்வொரு அசைவையும் வரிந்துகட்டிக்கொண்டு செய்தியாக்கிக் கொண்டிருக்க, இந்தியாவில் இவரை சாமானியராகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆங்கில அரசு இவருக்கு ஐம்பதாண்டுச் சிறை தண்டனை விதித்தபோதுதான் இவர்மேல் ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் குவிந்தது. போராளி. படைப்பாளி. காவிய நாயகன். சாவர்க்கரின் ஆளுமை பன்முகப்பட்டது. 20 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு உடல்நிலை காரணமாக விடுதலை செய்யப் பட்டார்... சிறையிலிருந்து விடு பட்டபின்பும் பல புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார் . வீர சாவர்க்கர் சொத்துக்களையும் அவரது குடும்பத்தினரது சொத்துக்களையும் பறிமுதல் செய்தது பிரிட்டிஷ் அரசாங்கம் என்பது குறிப்பிடத்தக்கது, கடைசியில் தனது 82 வது வயதில் நீதிமன்ற அனுமதி பெற்று தன்னை கருணை கொலைக்கு ஆளாக்கிக்கொண்டார் சாவர்க்கர். 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1966 பிப்ரவரி 26-ல் இறந்தார். ஒருவரது வாழ்க்கையின் நோக்கம் பூர்த்தியான பிறகு, சமூகத்திற்கு சேவை செய்யும் வலிமை இழந்த நிலையில் இறப்புக்காக காத்திருக்காமல் இறப்பைச் சந்திப்பது சிறந்தது என்று கூறினார். *இந்தியாவின் முதல் லேடி டாக்டர் ஆனந்தி கோபால் ஜோஷி* (அல்லது ஆனந்திபாய் ஜோஷி) (Anandi Gopal Joshi,மார்ச் 31, 1865 –பெப்ரவரி 26, 1887_அகவை 21) ஐரோப்பிய மருத்துவத்தில் முதலாவதாகப் பட்டம் பெற்ற இரு இந்தியப் பெண்களில் இவர் ஒருவர். மற்றொருவர் கடம்பினி கங்கூலி. மகாராஷ்டிராவிலுள்ள பூனாவில் ஒரு பணக்கார வைதீக பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஆனந்திபாய்க்கு பெற்றோர் இட்ட பெயர் யமுனா. இவருக்கும் கோபால்ராவ் ஜோஷிக்கும் திருமணம் நடந்தபோது இவருக்கு 9 வயதுதான். முதல் மனைவியை இழந்த கோபால் ஜோஷி இவரைவிட 20 வயது மூத்தவர். ஜோஷி தன் மனைவிக்குப் படிப்பிலிருந்த ஆர்வத்தைக் கண்டுகொண்ட அவர் ஆனந்திபாய் கல்வி பயிலவும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் உதவினார்.ஆனந்திபாயின் 14 வது வயதில் அவருக்குப் பிறந்த ஆண் குழந்தை மருத்துவ வசதியில்லாததால் பத்தே நாட்களில் இறந்து போனது.குழந்தையின் மரணம் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மருத்துவராக வேண்டுமென்ற எண்ணம் அவருக்குள் தீவிரமாக எழுந்தது. கோபால்ராவ் ஆனந்திபாயை மருத்துவம் படிப்பதற்கு ஊக்கமளித்தார். ஆனந்திபாய்க்கு மருத்துவம் படிப்பதில் இருந்த அதீத ஆர்வமும் கோபால்ராவ் தனது மனைவியை மட்டும் மருத்துவம் படிக்க அமெரிக்கா அனுப்ப முடிவு செய்தார். மேற்கத்திய நாட்டில் மேற்படிப்புக்குச் செல்ல ஆசைப்பட்ட ஆனந்திபாயை இந்து வைதீகவாதிகள் பழித்தனர். பாராட்டி ஊக்கப் படுத்திய கிருத்துவர்களோ மதம் மாறத் தூண்டினர். ஸ்ரீராம்பூர் கல்லூரிக் கூடத்தில் ஆனந்திபாய் மக்களைக் கூட்டி அவர்களிடம் தனது மருத்துவராகும் கனவையும் அதை நிறைவேற்றத் தானும் தனது கணவரும் சந்திக்கும் பிரச்சனகளையும் விளக்கிப் பேசினார். இந்தியாவில் பெண்மருத்துவர்களின் அத்தியாவசியத்தையும் இந்தியாவில் பெண்களுக்காக ஒரு மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கவேண்டுமென்ற தனது குறிக்கோளையும் அவர்களுக்குப் புரிய வைத்தார். எந்தக் காலத்திலும் தான் கிருத்துவ மதத்திற்கு மாறமாட்டேன் என்று உறுதியும் அளித்தார். அவரது பேச்சு எங்கும் பரவி நாடு முழுவதிலிருந்தும் அவருக்கு பண உதவி வர ஆரம்பித்தது. அப்போதைய இந்திய வைசிராய் அவரது படிப்பிற்காக ரூபாய் 200 அளித்தார். 1883ல் ஆனந்திபாய் கொல்கத்தாவிலிருந்து நியூயார்க் நகருக்குக் கப்பலில் புறப்பட்டார். ஆனந்திபாய் பெண்கள் மருத்துவக் கல்லூரிக்கு (பென்சில்வேனியா) விண்ணப்பித்தார்.[3] விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அக்கல்லூரித் தலைவர் ரேச்சல் போட்லி, அவரைக் கல்லூரியில் சேர்த்துக்கொண்டார். ஆனந்திபாய் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது அவருக்கு வயது 19. அமெரிக்காவின் கடுங்குளிரும் பழக்கமில்லாத உணவும் அவரது உடல் நலத்தை மிகவும் மோசமாக்கின. காச நோய் அவரைத் தாக்கியது. அத்தனை இடர்பாடுகளையும் தாண்டி அவர் மார்ச் 11, 1886ல் மருத்துவப் பட்டம் (எம். டி) பெற்றார். அவரது ஆராய்ச்சிக் கட்டுரையின் தலைப்பு - ஆரிய இந்துக்களின் தாய்மை மருத்துவம். மருத்துவராகப் தேர்ச்சி பெற்ற அவருக்கு விக்டோரியா மகாராணி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.1886 இறுதியில் ஆனந்திபாய் இந்தியா திரும்பினார். கோலாப்பூர் சமஸ்தானத்தில் உள்ள மருத்துவமனையில் பெண்கள் மருத்துவப்பிரிவின் பொறுப்பு மருத்துவராக அவர் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமானது. அவரைத்தாக்கிய காச நோய் முற்றியதால் 1887-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந் தேதி மரணம் அடைந்தார். மரணம் அடைந்த போது ஆனந்தியின் வயது 22 தான். மரணப்படுக்கையில் இருந்தபோது ‘என்னால் முடிந்த அளவு நான் செய்துவிட்டேன்’ என்று ஆனந்தி கடைசியாக கூறினார். இந்தியாவிலும் பெண்களுக்கென்று தனி மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது அவரது பெரும் கனவு. 19 -வது நூற்றாண்டிலே புரட்சி பெண்ணாக வாழ்ந்த இவர் வாழ்க்கை போராட்டங்கள் இன்றைய பெண்கள் கல்விக்கு ஆனந்தி தொடக்க புள்ளியாக இருந்தார் நிகழ்வுகள் 364 – முதலாம் வலெந்தீனியன் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1233 – மங்கோலிய-சின் போர்: மங்கோலியர்கள் சீனாவின் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் நகரைக் கைப்பற்றினர். 1606 – இடச்சு கப்பலோட்டி வில்லியம் யான்சூன் ஆத்திரேலியாவை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். ஆனாலும் அவர் இதனை நியூ கினியின் ஒரு பகுதியாகவே கருதியிருந்தார். 1616 – பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற தனது கொள்கையைப் பரப்புவதைத் தடுப்பதற்காக கலீலியோ கலிலி உரோமைக் கத்தோலிக்க திருச்சபையினால் தடை செய்யப்பட்டார். 1658 – வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசன் கிட்டத்தட்ட அரைபகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினான். 1748 – ஜேக்கப் டி ஜொங் (இளையவர்) யாழ்ப்பாணத்தின் இடச்சுத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.[1] 1794 – கோபனாவன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது. 1815 – இத்தாலியின் எல்பாத் தீவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் அங்கிருந்து தப்பினார். 1841 – இலங்கையின் முதலாவது இசுக்கொட்லாந்து பிரெசுபிட்டேரியத் தேவாலயத்திற்கான அடிக்கல் கொழும்பு புறக்கோட்டையில் நாட்டப்பட்டது.[2] 1876 – யப்பானியக் குடிமக்களுக்கு கொரியாவில் யப்பானிய வணிக வசதிகளுக்காக மூன்று துறைமுகங்களை அமைக்க, யப்பானுக்கும் கொரியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 1909 – கினிமாக்கலர் என்ற முதலாவது வெற்றிகரமான வண்ண அசையும் திரைப்பட அமைப்பு முறை இலண்டனில் அரண்மனை அரங்கில் பொதுமக்களுக்குக் காண்பிக்கப்பட்டது. 1935 – இராபர்ட் வாட்சன்-வாட் என்பவர் இங்கிலாந்தில் நடத்திய பரிசோதனை ஐக்கிய இராச்சியத்தில் ரேடாரை உருவாக்க வழிசமைத்தது. 1936 – சப்பான் அரசைக் கவிழ்க்க நடத்தப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது. 1952 – ஐக்கிய இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார். 1960 – நியூயார்க் சென்று கொண்டிருந்த விமானம் அயர்லாந்தில் இடுகாடு ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 52 பேரில் 34 பேர் உயிரிழந்தனர். 1971 – ஐநா பொதுச் செயலர் ஊ தாண்ட் இளவேனிற் புள்ளியை புவி நாளாக அறிவித்தார். 1980 – எகிப்தும் இசுரேலும் முழுமையான தூதரக உறவை ஏற்படுத்தின. 1984 – பெய்ரூட்டில் இருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறின. 1991 – வளைகுடாப் போர்: குவைத்தில் இருந்து ஈராக்க்கியப் படைகள் வெளியேறுவதாக அதிபர் சதாம் உசேன் அறிவித்தார். 1992 – நகோர்னோ-கரபாக் போர்: ஆர்மீனிய இராணுவத்தினர் அசர்பைசானிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1993 – நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 2001 – ஆப்கானித்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது. 2013 – வெப்பக் காற்று ஊதுபை ஒன்று எகிப்தில் வீழ்ந்து வெடித்ததில் 19 பேர் உயிரிழந்தனர். 2018 – பப்புவா நியூ கினியின் ஏலா மாகாணத்தில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 31 பேர் உயிரிழந்தனர், பிறப்புகள் 1564 – கிறித்தோபர் மார்லொவ், ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1593) 1780 – கிறித்தியன் சாமுவேல் வெயிசு, செருமானியக் கனிமவியலாளர் (இ. 1856) 1802 – விக்டர் ஹியூகோ, பிரான்சிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1885) 1842 – காமில் பிளம்மாரியன், பிரான்சிய வானியலாளர் (இ. 1925) 1861 – நதியெஸ்தா குரூப்ஸ்கயா, உருசிய அரசியல்வாதி (இ. 1939) 1866 – எர்பர்ட்டு என்றி டவ், கனடிய-அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1930) 1896 – கோபால் சுவரூப் பதக், இந்தியாவின் 4வது குடியரசுத் துணைத் தலைவர் (இ. 1982) 1903 – கியூலியோ நட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியியலாளர் (இ. 1979) 1928 – ஏரியல் சரோன், இசுரேலின் 11வது பிரதமர் (இ. 2014) 1947 – தாராபாரதி, தமிழகக் கவிஞர் (இ. 2000) 1952 – தங்கேஸ்வரி கதிராமன், இலங்கை வரலாற்றாளர், எழுத்தாளர், அரசியல்வாதி (இ. 2019) 1954 – ரசிப் தைய்யிப் எர்டோகன், துருக்கியின் 12வது அரசுத்தலைவர் 1982 – லீ நா, சீன டென்னிசு வீராங்கனை 1983 – பேபே, பிரேசில்-போர்த்துக்கீசக் காற்பந்து வீரர் 1986 – மா கா பா ஆனந்த், தமிழக நடிகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் இறப்புகள் 1878 – ஏஞ்செலோ சேச்சி, இத்தாலிய வானியலாளர் (பி. 1818) 1887 – ஆனந்தி கோபால் ஜோஷி, இந்திய மருத்துவர் (பி. 1865) 1931 – ஓட்டோ வாலெக், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1847) 1933 – சிவகங்கை இராமச்சந்திரன், தமிழக செயற்பாட்டாளர் (பி. 1884) 1966 – வினாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியக் கவிஞர், அரசியல்வாதி (பி. 1883) 1969 – கார்ல் ஜாஸ்பெர்ஸ், செருமனிய-சுவிட்சர்லாந்து மெய்யியலாளர், உளவியலாளர் (பி. 1883) 1998 – தியாடர் சுலட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1902) 2004 – எசு. பி. சவாண், இந்திய அரசியல்வாதி (பி. 1920) 2008 – டிரோன் பெர்னாண்டோ, இலங்கை அரசியல்வாதி (பி. 1941) 2014 – கே. எஸ். பாலச்சந்திரன், இலங்கை-கனடிய எழுத்தாளர், நாடகக் கலைஞர் (பி. 1944) 2015 – அவிஜித் ராய், அமெரிக்க-வங்கதேச செயற்பாட்டாளர். பொறியியலாளர் (பி. 1972) 2017 – எஸ். ஜி. சாந்தன், ஈழத்துப் பாடகர், நாடகக் கலைஞர் சிறப்பு நாள் விடுதலை நாள் (குவைத்) By, PMJF V.Shanmugavadivel | Origin CADD Infotech | +919994400045

Comments