
giriblog
February 5, 2025 at 07:29 AM
🛑 பெங்களூரு போன்ற நகரங்களில் ஓய்வு பெற்ற நபர்களை வழக்கு வரும் என்று போலியாக மிரட்டிப் பணத்தை ஏமாற்றி பெறுகிறார்கள்.
சிலர் 30 லட்சம் வரை கூட இழந்துள்ளார்கள்.
எனவே, உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால், அவர்களுக்கு இது போன்ற அழைப்புகள் வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கைப்படுத்துங்கள்.
ஓய்வு காலப்பணம் ஓரிரு நாட்களில் மொத்தமாக தொலைந்து விடும்.
இவ்வளவு பணம் எப்படி ஏமாந்து கொடுக்க முடியும்?! என்று எண்ண வேண்டாம் காரணம், ஸ்கேமர்கள் மிரட்டுவது நம்புவது போலவே இருக்கும்.
சுருக்கமாக, பணம், OTP, ஆதார், PAN கொடுக்க வேண்டும் என்று எவர் கூறினாலும் அவர்கள் ஸ்கேமர்கள் என்று புரிந்து விலகி விட வேண்டும்.
Truecaller போன்ற செயலிகள் இருந்தால், ஓரளவு முன்பே எச்சரிக்கையாகலாம்.
👍
3