Sri Krishna's Miracle Healing
Sri Krishna's Miracle Healing
February 17, 2025 at 09:52 AM
சிறுவர்கள் குழந்தைகளுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக குணமாகும்,. அதுவே பெரியவர்களுக்கு குணமாக ஒரு சில நாட்கள் கூடுதலாகதேவைப்படும்,.. வெளிப்புற புண்களாகட்டும் உட்புற காயங்களாகட்டும் உடனடியாக சரி ஆவதற்கான காரணம் கல்லீரல் தான். பிறக்கும்போது கல்லீரல் எந்தவித வெளிப்புற தீங்கும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும், வளர வளர நம்முடைய எண்ணங்கள்,வெளிப்புற சூழல், உணவு தூக்கம் போன்ற காரணங்களால் கல்லீரல் தனது தூய்மையை சிறுது சிறிதாக இழக்கும். நமது உடலிலே மிகப் பெரிய உறுப்பு கல்லீரல் தான், நம்ம உடலுக்கு ராஜா போன்ற உறுப்பு கல்லீரல், மற்ற உறுப்புகள் அனைத்தும் மந்திரி போன்றது.. ஒரு பிரச்சனையை சரி செய்வதற்கு மந்திரியும் அணுகலாம் ராஜாவையும் அணுகலாம்.. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிரச்சனையை சரி செய்வதற்கு அந்த இடத்திற்கான மந்திரியை அணுகுவதை விட நேரடியாக ராஜாவை கவனித்தால் பிரச்சனை உடனடியாக சரியாகிவிடும்.. அதேபோல தான் உங்கள் உடலில் எந்த பிரச்சனையும் எந்த இடத்தில் என்ன நோய் வேண்டுமானாலும் இருக்கட்டும்.. அந்தப் பிரச்சினைக்கு ஏற்ற மருந்து சாப்பிடுவது நீங்கள் மந்திரியை அணுகுவது போல தான் சரியாகலாம் சரியாகாமலும் போகலாம்.. இதுவே ராஜா அதாவது கல்லீரலை சரி செய்தால் உங்கள் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தானாக சரியாகும்.. உட்புற காயங்கள் சரி ஆவதற்கு வளர்ச்சிதை மாற்றம் அவசியம் இந்த வளர்ச்சிதை மாற்றத்தை நிர்வகிப்பது கல்லீரல்.. சாதாரண சளி முதல் தீவிர புற்றுநோய் வரை அனைத்து நோய்களுக்கும் முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது அதாவது தூய்மைப்படுத்துவது கல்லீரலை தான்.. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டிய மூன்று முக்கிய வாழ்வியல் முறைகள் 1. இரவு உணவுக்கும் காலை உணவிற்கும் 12 மணி நேரம் முதல் 15 மணி நேரம் உணவு இடைவேளை அவசியம்.. இதில் கவனிக்க வேண்டியது தூக்கத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக இரவு உணவு சாப்பிட்டிருக்க வேண்டும், அப்படியானில் மாலை 6 (or 7) மணியிலிருந்து அடுத்த நாள் காலை 9 மணி வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பது கல்லீரலை சுத்தப்படுத்தும்..கல்லீரலை ஆரோக்கியப்படுத்தும்.. இந்த இடைவெளியில் தண்ணீர் அருந்தலாம் குறிப்பாக காலையில் எழுந்தவுடன் தண்ணீர் அவசியம்.. உணவுக்கு மட்டும்தான் இந்த நேர இடைவெளி.. 2. உங்கள் உடலில் ஏற்பட்ட உள் உறுப்புகளின் காயங்கள் தான் நாள்பட்ட நோய்களாக மாறுகிறது ,நோய்கள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் வந்த நோய்கள் சரியாகாமல் நாள்பட இருப்பதற்கு காரணம் கல்லீரல் சரியாக வேலை செய்யாதது தான், உட்புற காயங்களை சரி செய்வது தூக்கத்தில் தான், இரவு தூக்கம் அவசியம் , கனவுகள் இல்லாத ஆழ்ந்த தூக்கம் அவசியம், நீங்கள் காலையில் எழுந்திருக்கும் போது சுறுசுறுப்பாகவும் இருந்தால் உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக மாறிவிட்டது என்று அறிந்து கொள்ளலாம், தூக்கத்திற்கும் ஆன்மாவிற்கும் தொடர்பு உண்டு எனது பழைய பதிவில் சொல்லியிருந்தது இங்கு நினைவுபடுத்துகிறேன்.. தூக்கத்தில் தான் கல்லீரல் வளர்ச்சிசிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது உட்புற காயங்களை சரி செய்கிறது ,ஆழ்ந்த தூக்கம் கல்லீரலை சரி செய்யும் கல்லீரல் நாள்பட்ட பல நோய்களை சரி செய்யும். 3. அளவுக்கு அதிகமான உடல் பயிற்சி, அளவுக்கு அதிகமான உடல் உழைப்பு, அல்லது உடல் உழைப்பே இல்லாமல் இருப்பது உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது இவை இரண்டுமே கல்லீரலை பாதிக்கும்.. மிதமான உடற்பயிற்சி மிதமான நடைப்பயிற்சி கல்லீரலை ஆரோக்கியப்படுத்தும், கல்லீரல் மற்ற நோய்களை குணப்படுத்தும். நோய்களுக்கு பெயர் சொல்லி அழைப்பதை விட்டு விடுங்கள், பெயர் சொல்லி அழைப்பதெல்லாம் உங்களை நிரந்தர வாடிக்கையாளர் ஆக்குவதற்கு தான், நீங்கள் எந்த ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னாலும் வருட கணக்கில் மாத்திரைகள் சாப்பிடலாம் என முடிவெடுப்பதற்கு முன்னாலும் மேலே சொன்ன மூன்று விஷயங்களையும் கடைப்பிடிக்கிறீர்களா என உறுதிப்படுத்துங்கள், உங்களின் ராஜா உங்களை நன்றாக கவனித்துக் கொள்வார் உங்களின் நாள்பட்ட நோய்களை சரி செய்வார், நோய்களுக்கு சிறு சிறு மருத்துவம் பார்த்து மந்திரிகளை கவனிப்பதை விட நேரடியாக ராஜாவை சிநேகிதம் வைத்துக் கொள்ளுங்கள். வாழ்வியல் முறை மாற்றமே சிறந்த மருத்துவம் நன்றி..

Comments