
ஊர்க்கோடாங்கி
February 13, 2025 at 04:22 PM
*இரவு நேர சிந்தனை*
13.02.25
*நம் எல்லோருடைய வாழ்க்கையையும் நம்பிக்கை என்னும் சக்கரத்தை வைத்தே சுழன்று கொண்டு இருக்கிறது.*
நம்பிக்கை சிறிதேனும் இல்லாத நிலை ஒருவருக்கு வந்து விட்டால் அவர் சாகத் துணிந்து விடுவர் என்பது நிச்சயம்.
*நாம் எல்லோரும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் இந்த வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறோம் என்பது உண்மை.*
நாளை நம் கவலைகள் யாவும் தீர்ந்து விடும் என்கின்ற நம்பிக்கையில் தான் பலரும் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
*நாளை நிச்சயம் நல்லது நடக்கும் என்று மனதார நினையுங்கள் எவ்வளவு துயரமான சூழ்நிலையில் இருந்தாலும்.*
இரவுக்குப் பின் விடிந்து தானே ஆக வேண்டும் புயலுக்குப் பின் அமைதி தானே நிலவும்.
*நம்பிக்கை தான் வாழ்க்கை. தினமும் நம்பிக்கையோடு வாழ்வைத் தொடங்குவோம்.*
வாழ்க்கை கூடிய சீக்கிரம் உங்களுக்கு வசப்படும். வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும்.
*இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.*
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவேகவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள்.
*"விடியும் நாளைய பொழுதும் நமக்கு நன்மை பயக்கும்*"
*இனிய இரவு வணக்கம்*