
ஊர்க்கோடாங்கி
52 subscribers
About ஊர்க்கோடாங்கி
சமையல், ஆன்மிகம், அழகு மற்றும் ஆரோக்கியம் , வேலைவாய்ப்பு, சினிமா செய்திகள் தொடர்பான பதிவுகளை இங்கு காணலாம்!
Similar Channels
Swipe to see more
Posts

*தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல்* பல் இல்லாத பக்தர்கள்...! ஒரு பெரிய மனிதர். பக்தி மான். அவருக்குப் பல் வலி. வேலைக்காரனைக் கூப்பிட்டார். ‘‘நீ உடனே போய் பல் வைத்தியர் ஒருவரை அழைத்து வா!’’ என்றார். பல் வைத்தியர் வந்து சேர்ந்தார். இவர் பல்லைக் காட்டினார். சோதித்துப் பார்த்து விட்டு அவர் சொன்னார்: ‘‘இந்தப் பல்லை எடுத்துடறதுதான் நல்லது!’’ ‘‘சரி... எடுத்துடுங்க!’’ என்றார் இவர். இந்த நேரத்தில் வாசல் பக்கம் யாரோ வருவது தெரிந்தது. பார்த்தார். அவர் அடுத்த ஊரைச் சேர்ந்த இன்னொரு பெரிய மனிதர். வேறொரு கடவுளின் பக்தர் அவர். உடனே இவர், ஒரு ‘ஐடியா’ பண்ணினார். ‘‘வைத்தியரே... நீங்க கொஞ்ச நேரம் அடுத்த அறையில் போய் இருந்துக்கோங்க. நான் கூப்பிடும் போது வரலாம். எடுக்க வேண்டிய பல் இதுதான்... பார்த்துக்கோங்க!’’ அவரும் ‘‘சரி’’ என்று சொல்லிவிட்டு, அடுத்த அறைக்குள் சென்று விட்டார். அடுத்த ஊர் பெரிய மனிதர் உள்ளே வந்தார். இருவரும் பேச ஆரம்பித்தார்கள். ‘‘உங்கள் கடவுளிடம், நீங்க வெச்சிருக்கிற பக்தியை விட, எங்கள் கடவுள் மேலே நான் வெச்சிருக்கிற பக்தி அதிகம்!’’ என்றார் இவர். ‘‘எப்படி சொல்றீங்க...?’’ என்றார் அவர். ‘‘நீங்க, உங்க கடவுளுக்கு என்ன காணிக்கை செலுத்தறீங்க?’’ ‘‘முடி காணிக்கை செலுத்துவோம்!’’ ‘‘நான் எங்க கடவுளுக்கு என் பல்லையே காணிக்கையா இப்ப செலுத்தப் போறேன்.’’ ‘‘என்ன சொல்றீங்க?’’ ‘‘கொஞ்சம் பொறுங்க!’’ என்று சொல்லிவிட்டு வேலைக்காரனைக் கூப்பிட்டு, ‘‘அவரை அழைத்துக் கொண்டு வா!’’ என்றார். பல் வைத்தியர் வந்தார். ‘‘இதோ பாருங்க... என் கடவுளுக்கு என் பல்லையே காணிக்கையா செலுத்த விரும்பறேன். அதனால ஒரு பல்லைப் பிடுங்கி எடுத்துடுங்க!’’ பல் வைத்தியர் புரிந்து கொண்டார். அந்தச் சொத்தைப் பல்லைச் சரியாகப் பிடுங்கி எடுத்து விட்டார். இதைப் பார்த்த அடுத்த ஊர்ப் பிரமுகருக்கு ஆவேசம் வந்து விட்டது. ‘‘நானும் பக்தியில் உங்களைவிட குறைந்தவன் இல்லை!’’ என்று சொல்லிவிட்டு, ‘‘ஐயா வைத்தியரே... அவரு ஒரு பல்லைத்தானே தியாகம் பண்ணினார். நான் என் கடவுளுக்காக இரண்டு பற்களைத் தியாகம் பண்றேன். வாங்க... என்கிட்டே இருந்து இரண்டு பற்களைப் பிடுங்கி எடுத்துடுங்க!’’ என்றார். வைத்தியர் பார்த்தார். அவருக்கா வலிக்கப் போகிறது? நல்ல பல்லாகப் பார்த்து இரண்டைப் பிடுங்கிப் போட்டு விட்டார். இப்போது பல் இல்லாத அந்த இரண்டு பக்தர்களும் ஓருவரைப் பார்த்து ஒருவர் பெருமையாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி நான் என்ன சொல்வது? கடவுளே இவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறார்! *தொடரும்*

21-02-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள் https://oorkodangi.blogspot.com/2025/02/21-02-2025.html

💥 மீண்டும் கொரோனா? மனிதர்களிடையே பரவும் புதிய வகை கொரோனா வைரஸை கண்டறிந்துள்ளதாக சீன வைரஸ் நிபுணர்கள் அறிவிப்பு; கோவிட்-19 பாதிப்பை ஏற்படுத்திய வைரஸோடு பல வகைகளில் ஒற்றுமை கொண்டுள்ள இந்த வைரஸுக்கு HKU5 என பெயரிடப்பட்டுள்ளது.

கொசுவை பிடித்துத் தந்தால் சன்மானம் - பிலிப்பைன்ஸ் பிலிப்பைன்ஸில் கொசுவை உயிருடனோ அல்லது கொன்றோ தந்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொசுவை உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தந்தால் 5 கொசுவுக்கு ரூ.1.50 வழங்கப்படும். பிலிப்பைன்ஸ் தலைநகரில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளூர் நிர்வாகம் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளது. பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டில் மட்டும் 28,234 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

*இரவு நேர சிந்தனை* உங்களுக்கு அற்புதமான திறமைகள் இருக்கலாம். என்னால் முடியும் என்று சொல்லி உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் எதையும் சாதித்துக் காட்ட முடியும். நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைக்கும்போது உங்களையறியாமல் உங்களுக்குச் சில பொறுப்புகள் வந்து சேரும். குடும்பப் பொறுப்புகள், பணியாற்றும் இடத்தில் ஏற்படுகின்ற பொறுப்புகள் சமுதாயத்தில் எப்படி நடத்து கொள்ள வேண்டும் என்ற பொறுப்புகள் யாவும் சேர்ந்து உங்களைச் சுமக்க ஆரம்பிக்கும். பொறுப்பு என்ற சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு மன்னனாகத் திகழ்வீர்கள் தன்னம்பிக்கை மிகுந்த வேந்தனாகச் சுடர் விட்டுப் பிரகாசிப்பீர்கள். பொறுப்பு உங்களுக்கு நிறையச் சேருகிற போது நீங்கள் கடமைகள் ஆற்றிடத் துணிந்து விடுவீர்கள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படத் தொடங்கினால் நீங்கள் எவருக்கும் பயப்படத் தேவையில்லை வெற்றி நிச்சயம். *இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.* கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள். *"விடியும் நாளைய பொழுதும் நமக்கு நன்மை பயக்கும்*" *இனிய இரவு வணக்கம்*

நீண்ட நாட்களாக கிட்டப்பில் இருக்கும், இன்னும் வெளிவராத Unreleased Movies குறித்து பார்ப்போம். (Part 1) ✅ https://oorkodangi.blogspot.com/2025/02/unreleased-movies-part-1.html

*தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல்* *இதய நோய் டாக்டர்!* , டாக்டர் இவரைக் கொஞ்சம் கவனிச்சுப் பாருங்க இவரு என் வீட்டுக்காரர்! அப்படியா ரொம்ப நல்லது சாருக்கு என்ன ப்ராப்ளம்? இவரு எப்ப பார்த்தாலும் முகத்தை உம்..னு சீரீயஸா வச்சிருக்கார்.எது சொன்னாலும் சிரிக்க மாட்டேங்கறார் அப்படி இருக்கப்புடாது..அது ரொம்ப தப்பு! இது அவருக்கு புரியலையே! இப்படி இருக்கறவங்களுக்கு மன அழுத்தம் காரணமா ஹார்ட் அட்டாக் வர்றதுக்கான வாய்ப்பு அதிகம்-ன்னு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க! அப்படியா டாக்டர்? ஆமாம்.அங்கே இதய நோய் உள்ளவங்ககிட்டேயும் இதயநோய் இல்லாதவங்ககிட்டேயும் ஒரு கேள்வி கேட்டாங்களாம்! என்ன கேள்வி? ஒரு விருந்தில் உங்களைப் போலவே இன்னொருவரும் உடை அணிந்திருப்பதைக் கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படின்னு கேட்டாங்களாம் சரி, எங்ககிட்டே எந்த மாறுதலும் இருக்காதுன்னு சொன்னவங்க பூரா இதய நோயாளிகளாம்! நாங்க பரவசப்பட்டு எங்களுடைய மகிழ்ச்சியை தெரிவிப்போம்னு சொன்னவங்க பூரா நோயாளி அல்லாதவர்களாம். என்னங்க டாக்டர் சொல்றது காதுலே விழுதா? பாருங்க டாக்டர் இதுக்கும் எந்த பதிலும் வரமாட்டங்குது. முகத்துலே கூட எந்த மாறுதலும் இல்லே பாருங்க! உண்மைதான்! நேத்திக்கு என்ன ஆச்சு .தெரியுமா? என்ன ஆச்சு? இவர் பாட்டுக்கு தூக்கத்துலே எழுந்து நடந்து போய் பால் கறக்க ஆரம்பிச்சுட்டார். எப்படியோ பால் கறந்தா சரிதானே! அது எப்படி டாக்டர்? ஏன்? மாட்டை வித்துதான் ஒரு மாசம் ஆச்சே! *தொடரும்*

*இரவு நேர சிந்தனை* 20.02.25 வாழ்வின் மிகப்பெரிய சோகம். ஒரு நாள் நம் கடைசியில் இறந்து போவதல்ல. *கடைசியில் ஒரு நாள் எப்படியும் சாகப் போகிறோம்.* அது தெரிந்த விஷயம் தானே. அதனால் அது கொடுமையும் அல்ல. இருக்கும் போது நாம் முழுமையாக வாழ்வதில்லை என்பதே கொடுமை. *அதாவது பசி என்னும் இரண்டு எழுத்திற்காக எழுந்து, பணம் என்னும் மூன்று எழுத்திற்காக ஓடி, மரணம் என்னும் நான்கு எழுத்திற்காக தூங்கி விடுகிறோம். இவ்வளவு தான் வாழ்க்கை.* ஆகையால் வாழும் நாட்களை எண்ணிக் கழிக்காமல், ஒவ்வொரு நாளையும் அனுபவித்து திருப்தியாய் பயனுள்ளதாய் உற்சாகமாய் உல்லாசமாய் உன்னதமான வாழ்வாக வாழ்ந்தால் வெற்றி நிச்சயம். *இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.* கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவேகவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள். *"விடியும் நாளைய பொழுதும் நமக்கு நன்மை பயக்கும்*" *இனிய இரவு வணக்கம்*