
ஊர்க்கோடாங்கி
February 20, 2025 at 04:40 PM
*இரவு நேர சிந்தனை*
20.02.25
வாழ்வின் மிகப்பெரிய சோகம்.
ஒரு நாள் நம் கடைசியில் இறந்து போவதல்ல.
*கடைசியில் ஒரு நாள் எப்படியும் சாகப் போகிறோம்.*
அது தெரிந்த விஷயம் தானே.
அதனால் அது கொடுமையும் அல்ல.
இருக்கும் போது நாம் முழுமையாக வாழ்வதில்லை என்பதே கொடுமை.
*அதாவது பசி என்னும் இரண்டு எழுத்திற்காக எழுந்து, பணம் என்னும் மூன்று எழுத்திற்காக ஓடி, மரணம் என்னும் நான்கு எழுத்திற்காக தூங்கி விடுகிறோம். இவ்வளவு தான் வாழ்க்கை.*
ஆகையால் வாழும் நாட்களை எண்ணிக் கழிக்காமல், ஒவ்வொரு நாளையும் அனுபவித்து திருப்தியாய்
பயனுள்ளதாய் உற்சாகமாய் உல்லாசமாய் உன்னதமான வாழ்வாக வாழ்ந்தால் வெற்றி நிச்சயம்.
*இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.*
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவேகவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள்.
*"விடியும் நாளைய பொழுதும் நமக்கு நன்மை பயக்கும்*"
*இனிய இரவு வணக்கம்*