
HAZRATH ABDUL WAHHAB BAQAVI
February 2, 2025 at 03:29 PM
Burdha Shareef Day - Hazrath Speaks
என் அறிவுரை படி வாழ ஆரம்பித்துவிட்டால் இந்த மனநிலைக்கு நீங்கள் வந்துவிட்டீர்களென்றால் உங்களுக்குகுள் சில கோட்பாடுகள் தனக்குத்தானாகவே உருவாகும். இப்படி ஒவ்வொன்றுக்கும் எதற்கு உள்ளது என்று யாரும் சொல்லாமலே புரிய ஆரம்பித்துவிடும்.
"உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்தியவர்கள் வெற்றி கண்டுவிட்டார்கள்"
மனிதன் உயர்வதற்கும் அவன் தாழ்வதற்கும் உள்ளம் தான் காரணம், நேர்மையான உள்ளம் கொண்டவன் நேரிய வழியில் செல்கிறான்; நற்பண்புகளையும் உயர்ந்த குணங் களையும் தன்னுள் உண்டாக்கிக் கொள்கிறான்; நல்ல காரியங்களை விரும்பிச் செய்கிறான். தீய உள்ளம் கொண்டவன் நேர் எதிரானவன். அவனிடம் உயர் குணங்களையும் நற்பண்புகளையும் எதிர்பார்க்க முடியாது.
ஒரு மனிதனை உயர்த்துவது அவனுடைய நற்குணஙக்ளும், குணாதியசமும் பண்பு தான்.
மன்னிக்கும் மனப்பான்மையை உண்டாக்கிக் கொள் நன்மையானவற்றைச் செய்யத் தூண்டு. மூடர்களின் நிந்தனையைப் பொருட்படுத்தாதே!.. உன் தொடர்பைத் துண்டித்தவனுடன் இணைந்து நட, உனக்கு உதவி செய்யாதவனுக்கு நீ உதவி செய். உனக்குத் தீங்கிழைத்தவனை நீ மன்னித்து விடு.
துர்க்குணம் கொண்ட இறை பக்தன் ஒருவனுடைய நட்பைவிட நற்குணம் கொண்ட பாவியின் நட்பை நான் அதிகமாக விரும்புகிறேன்!"
"உயர் பதவி அடைந்தவர்கள் அனைவரும் நற்குணத்தால் தான் உயர்ந்தார்கள். அண்ணல் நபியவர்களே பரிபூரண நற்குணம் பெற்றிருந்தார்கள். அத்துணை சிறப்பு வேறு யாருக்குமில்லை. நற்குணங்களை அடிப்படையாகக் செயல்ககொண்டு நடப்பவர்களே இறையண்மையைப் பெற்றவர்கள்!
✍️ நாகூர் ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ II நாகூர் ஷரீஃப்
❤️
👍
💐
💚
🙏
🪔
13